ஒவ்வொரு ஹீரோயினையும் ரெண்டு தடவ… சசிகுமார் சந்தோஷம்!
கன்னா பின்னான்னு கதாநாயகிகள் வந்தாலும், இன்னார்க்கு இன்னார்தான் அழகுன்னு தீர்மானிக்கிற உரிமை ரசிகனுக்குதான். இந்த வல்லாரை லேகியத்தை வழிச்சிக் கொடுக்கிற வித்தை தெரியாமல்தான் ஒவ்வொரு ஹீரோவும் யார் யார் கூடவோ சேர்ந்து, ஏகப்பட்ட சறுக்கல்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் நல்லவேளை… சசிகுமாருக்கு வாய்த்ததெல்லாம் சர்க்கரை பொங்கல்தான்.
முதல் படமான சுப்ரமணியபுரம் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்வேதாவுக்கு, அந்த படம் வெளியான நேரத்தில் ஆடி மாதங்களில் கூழ் மட்டும்தான் ஊற்றி கும்பிடவில்லை. மற்றபடி கூடி கும்மியடித்துவிட்டது ரசிகர்களின் மனசு. அதற்கப்புறம் மீண்டும் ஒரு முறை சசிகுமாருடன் நடித்தார். இப்போது கிளி எந்த கிளையில் அமர்ந்து ஆறுன வடையை கடித்துக் கொண்டிருக்கிறதோ?
சசிகுமாரின் காம்பினேஷன் மீண்டும் போற்றப்பட்டது லட்சுமிமேனன் தயவால்தான். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என்று இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தார். இப்படி தன்னுடன் நடித்த நடிகைகளுடன் இரண்டிரண்டு முறை ஜோடி சேர்ந்துவிடும் வழக்கத்தை எப்படியோ கண்டுபிடித்து காய் நகர்த்தி வரும் சசிகுமாரின் லேட்டஸ்ட் அட்டம்ப்ட் நிகிலா! வெற்றிவேல் படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார் இந்த நிகிலா.
அப்போதே இவரை நன்கு ஸ்கேன் பண்ணிவிட்டாராம் சசி. எப்படி? ஷுட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் டயலாக் பேப்பரை கொடுத்தால், “எங்கே படிச்சு சொல்லுங்க” என்று கேட்கும் மலையாள நடிகைகள் மத்தியில், அப்படியே படித்து உள்வாங்கி அசால்ட்டாக வெளிப்படுத்துவாராம் இவர். அந்த நினைப்பு அப்படியே சசிகுமார் கண்ணுக்கு வர, கிடாரி படத்திற்கு ஜோடி தேடிக் கொண்டிருந்த டைரக்டரிடம் நிகிலாவை சிபாரிசு செய்தாராம்.
ஆக இந்த படத்தின் மூலம் நிகிலாவுடனும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து விட்டார் சசிகுமார். இன்னும் பாக்கி தாரை தப்பட்டை வரலாட்சுமிதான்ங்கோ!
To listen in audio click below ;-
aruveruppana thalaippu