வெளுத்துக் கட்டுது விமர்சனம்! கமல் திடீர் பல்டி!
சில தினங்களுக்கு கமல் அளித்ததாக இணையதளம் ஒன்றில் வந்த பேட்டிதான், சூடான விவாதத்திற்கு காரணமாகிவிட்டது. “கார்ப்பரேட் திட்டங்களுக்கு 4000 கோடி செலவு செய்வதற்கு பதிலாக அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, “ஏன் நீங்க எடுக்கிற படத்துக்கு செலவு பண்றதை அப்படியே பிரிச்சு மக்கள்ட்ட கொடுக்கலாமே? ஒரு நாட்டின் உள் கட்டமைப்புக்கு இதெல்லாம் அவசியம்னு கூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு உலக நாயகனா?” என்று ஆரம்பித்து, கமலை துணியாய் பிழிந்தாக துண்டு போல துடைத்துக் கொண்டது வலையுலகமும், அங்கு நடந்த விமர்சனங்களும்.
அந்த அறிக்கையில் அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார் கமல். அவர் பேட்டி வெளிவந்து சில மணி நேரத்திற்குள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது சமூகம். கமல் சொன்னதில் என்ன தப்பு என்றும், அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றும் இருவேறு பிரிவினர் விவாதித்துக் கொள்கிற அளவுக்கு போனது நிலைமை. தமிழகத்தின் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கமலுக்கு மிக நீண்ட பதிலையும் செம சூடாகவே பதிவு செய்திருந்தார். அதில் அமைச்சர் என்ற இலக்கணத்தையும் மீறி தெறித்தன வார்த்தைகள். தடிப்புகள்.
அன்றிரவே கமல் வீட்டில் கரண்ட் பிடுங்கப்பட்டது என்றெல்லாம் வதந்திகள் உலாவின. நல்லவேளை… போற ரூட் சரியில்லை என்பதை புரிந்து கொண்ட கமல், “நான் அப்படியொரு பேட்டியே தரவில்லை” என்று இன்று வேறொரு அறிக்கை அனுப்பியிருக்கிறார். எது நிஜம் என்பது கமல் நம்பாத அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த புது அறிக்கை மட்டும் இங்கே-
நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
என் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்” இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
The most idiotic and fanatic and self centered Kamal hasan do not deserve Tamilnadu.
முட்டாள் கமல் மற்றும் மத்த முட்டாள்களே நீங்கள் கொடுக்கும் வரி சம்பளம் கூட போடமுடியாது. 125,000 கோடி கடன் 250,000 கோடி 5 வருடத்தில் ஆகி விட்டது என்றல் , வருடம் 30,000 கோடி கடன் வாங்க பட்டுள்ளது . அதில் இலவசம் கணணி , அரிசி , சைக்கிள், புத்தகம் எல்லாம் 10,000 கோடி கூட கிடையாது. வரி மற்றும் 20,000 கோடி சம்பளம் வேலைக்கு வந்தாலே கிடைக்கும். 7 வது சம்பள கமிஷன் வருகிறது . அப்பொழுது மாநில அரசாங்கம் வெளி நாட்டிலும் கடன் வாங்கலாம் என்று வரும் . அவ்வை ஷுன்முகி மதி சினிமா கதை திருவது போல் பணத்தை வெளி நாட்டில் இருந்து திருடமுடியது. டுங்க்வரை கழட்டி விடுவார்கள்.
கமல் ஒரு பைத்தியக்காரன். அவன் சொல்லுவதெல்லாம் சரியா. அந்த மெண்டல் ஏதாவது சொல்லிட்டு போகட்டும். நிவாரண பணிகளில் கவனம் செலுத்தும் மனிதாபிமானம் உள்ள நடிக நடிகையர் மட்டும் போதும். கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை எதற்கு இப்போ சொல்லுறான். ஆனால் தமிழ் மக்களுக்கு இவன் சுயரூபம் தெரிந்து விட்டது. இவனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை என்று நினைத்தோம். மனித நம்பிக்கையும் இல்லை என்று தெரிந்து விட்டது. கமல் அறிவாளி இல்லை என்று யார் சொன்னது. இருந்தால் நல்ல இருக்கும் என்று தான் சொல்கிறோம். shame on you கமல்.
கமல் உங்களை மிகவும் பிடிக்கும். ஆனா பாலசந்தர் சார் இறந்ததும் இங்கே வராமல் ஒரு விளக்கம் குடுதேங்க பாருங்க அன்னைக்கு இருந்து தான் தெரியும் நீங்கள் மோசமான கூத்தாடி என்று. . இப்போ இவ்ளோ பிரச்சனைக்கு நடுவ சித்தார்த் போல உதவி செஞ்சுடே நீங்க அரசை குறை கூறியிருந்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது ஏற்பேன். . அனால் நீங்கள் உங்கள் வாய்ஜாலத்தில் எல்லாரையும் எப்போவும் எமதலம்னு நெனச்சு தப்பான நேரத்துல ரெம்ப மோசமான அறிக்கைக்கு பின் உங்கள் மீது இருந்த மரியாதையை மொத்தமா போச்சு. . தன மகளை அரகொரையாக ஆடவிட்டு காசு பாக்கும் கேவழமான தந்தை நீ நாட்டைவிட்டு வெளியேறலாம். .
When he talks, he quotes bharathiyar’s “Thani Oruvannukku” but when his neighbors really needed his help.He is sitting in his bedroom and watches everything from a safe distance.What a hypocrite.
Gives poses with twirled mustaches.But doesnt have the bravery to help his neighbors and talk back to O.pannerselvam.All talk no action.
என்ன உருக்கம் மண்ணாங்கட்டி ? பாலியல் தொழிலாளர்கள் தாயுள்ளத்துடன், ஒரு வேளை உணவைத் தவிர்த்து , சேமித்து ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்கள். அவர்கள் காலைக் கழுவிக் குடித்தாலும் இவருக்கு புத்தி வராது. இவர் மட்டும் தான் வருமான வரி கட்டுகிறாரா என்ன? நாங்கெல்லாம் இரட்டை வரி கட்டுறோம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதலில் நாம் அனைவரும் அனுப்ப வேண்டியது நல்ல சிந்தனையும், நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும். பணம் என்னைக்கு வேண்டுமனாலும் சம்பாதிக்கலாம். மனிதாபிமானம் ? அதை இழக்கலாமா கமல்? ஆளும் கட்சியை மற்றும் அரசு இயந்திரத்தை குற்றம் கூறவும் இதுவா நேரம்? இந்தாளுக்கு வயசு மட்டும் தான் ஏறுது. கேவலமான சிந்தனை. முதலில் உதவி விட்டு , அரசாங்கத்தை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். உதவவே இல்லை . திட்ட மட்டும் என்ன உரிமை ?
ஆழ்வார் பேட்டை இல்லம் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். எதிர் சோபாவில் நான். நான் மெல்ல செருமுகிறேன்.
கமல்,”சாரி சாரி,இந்தப் புவியரசு ஒரு புத்தகம் கொடுத்தாரு,அதை இரா.முருகன் கிட்ட கொடுத்துப் படிக்க சொன்னேன்,அவரும் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாரு,அதான் படிச்சுட்டு இருந்தேன்,எனக்கு தினமும் ஒரு இருபது பக்கமாவது படிச்சுடணும்,இல்லேன்னா தூக்கம் வராது”
”என்ன புத்தகம் சார் அது?”
”திராவிட வரலாறு,பட் எனக்கு அரசியல்ல ஆர்வம் கிடையாது,அண்ணாதுரை எனக்கு கொள்ளுத் தாத்தா மாதிரி”
”எப்பவும் சர்ச்சையா ஏதாவது பேசிட்டு மாட்டிக்கிறீங்களே?’
”சர்ச்சையா பேசணும்ன்னு இல்லே,சில சமயம் அப்படி ஆயிடுது”
”மருத நாயகம் திரும்ப நீங்க எடுக்கப் போறதா ஒரு பேச்சு கிளம்பியிருக்கே?”
இரண்டு நாள் தாடியைத் தடவுகிறார்.
”எடுக்கணும்,எடுக்காம இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது,அதுல ஏதும் ப்ரச்சனை வந்துடக் கூடாது பாருங்க”
”சமீபத்துல தலைவரை போய் பார்த்தீங்களா?”
”எந்த தலைவரை,எந்த தலைவரையும் நான் போய் பார்க்கறது இல்லே,அவங்க பாட்டுக்கு அவங்க வேலையைப் பார்க்கறாங்க,நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்க்கறேன்,எங்கம்மா எப்பவுமே சொல்வாங்க,நான் சின்னப் பையனா இருக்கும் போது,பார்த்தசாரதி இது பொல்லாத உலகம்டா,பார்த்து நடந்துக்கன்னு,அவங்க ஆணையை அப்படியே களத்தூர் கண்ணம்மாவிலே இருந்து கடைப் பிடிக்கறேன்”
”கவிதை எழுதறதை நிறுத்திட்டீங்களா?”
”இல்லே,இப்பக் கூட சென்னை மழைப் பத்தி ஒரு நீண்ட கவிதை எழுதினேன்,வேணாம்ன்னு தோணுச்சு கிழிச்சுப் போட்டேன்”
”இந்த நிவாரண நிதி கொடுக்கறதைப் பத்தி எல்லாம் என்ன நினைக்கறீங்க?”
”அது அவங்க அவங்க இஷ்டம்,எங்கிட்ட இப்ப கொடுக்க இல்லையேன்னு வருத்தமா இருக்கு,தூங்காவனம் சரியா கலெக்ட் பண்ணலை,அது ஓடியிருந்தா குடுத்திருப்பேன்”
”நீங்க அதிகம் நேசிக்கிற தமிழன் யார்?”
”எல்லாம் தமிழனையும் நான் நேசிக்கிறேன்,ஆனா கடவுளை கும்பிடற தமிழனை நேசிக்க மாட்டேன்,இல்லாத கடவுளை ஏன் கும்பிடணும்,கடவுள் அப்படியே என் வீட்டுக்கு வந்தாலும் டின்னர் கொடுத்து கைக் குலுக்கி அனுப்பிடுவேன்”
”ரஜினி பத்து கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்காறே?”
”அவர் தமிழனுக்காக ரத்தம் சிந்தறவரு,கடவுள் நம்பிக்கை உள்ளவரு,அவரே ஒரு கடவுள் மாதிரிதான்”
”அடுத்து ஏதாவது ஆங்கிலப் படம் உரிமை வாங்கி வச்சுருக்கீங்களா?”
”இல்லே நானே ஒரு ஆங்கிலப் படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்”
”சூப்பர் என்ன கதை சார்?”
”அமெரிக்காவில இருக்கற கறுப்பின ப்ரொபசர் ஒருத்தர் கடவுளா மாறிடராரு,அவரே சொல்றாரு நான் கடவுளா மாறிட்டேன்னு,யாரும் நம்ப மாட்டேங்கறாங்க,அப்புறம் கோபத்துல அமெரிக்காவை துவம்சம் பண்றாரு,அரசு அதிர்ந்து போய் அவரை பிடிக்கப் பார்க்குது, முடியலை,கடைசியில அவர்தான் கடவுள்ன்னு முடிவு பண்ணி அவர்கிட்டயே அரசை ஒப்படைச்சிடறாங்க”
”கதா நாயகன் யார் சார்,டென்சில் வாஷிங்டன்னா?”
”இல்லே நானே மேக்கப் போட்டு அந்த கேரக்டரை பண்றேன்?
”உங்களுக்கு அந்தப் படத்துல ஜோடி உண்டா?”
”ஜோடி இல்லாமலா,ரெண்டு நாயகி,ஒண்ணு கௌதமி,இன்னொன்னு யார்ன்னு முடிவு பண்ணலை,அந்தப் படம் அதிகப் பட்சம் ஆஸ்கர் வாங்கும்,ஏன்னா கடவுள் அமெரிக்காவிலதான் இருக்கார்ன்னு ஒரு மறைமுக செய்தி வச்சிருக்கேன்”
”தப்பா நினைக்காதீங்க,இதுல கிஸ்சிங் சீன்ஸ் இருக்குமா?”
”நிச்சயமா,நீங்களே பார்த்திருப்பீங்களே கோவில்ல சிலைகள் எல்லாம் அதெல்லாம் அங்கப் பார்த்து கத்துகிட்டவங்க தான நாம”
”உங்களுக்குத் தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,எப்ப போய் பார்த்தீங்க?”
”எல்லாம் படம் போட்ட புக்ஸ் ல தான்,இரா.முருகன் கிட்ட சொன்னா தேடிப் பிராஞ்சு கொண்டு வந்து கொடுத்துடுவாரு”
”அந்தப் படம் ஹிட் ஆயிடுச்சுன்னா ஹாலிவுட்ல்லயே செட்டில் ஆயிடுவீங்களா?”
”ஐயோ நான் அங்கே செட்டில் ஆக மாட்டேன்,ஆழ்வார்பேட்டைதான் நமக்கு சரிவரும்,இங்கேதான் ஜன்னல் வழியா கொட்டற மழையை வேடிக்கைப் பார்க்கலாம்”
”ரொம்ப நன்றி கமல்ஜி,இவ்வளவு நேரம் பொறுமையா பேட்டி தந்ததுக்கு,கடைசியா ஒரு கேள்வி உங்களுக்கு பிடிச்ச அரசியல்வாதி யாரு?”
”பேட்டி முடிக்கற நேரத்துல வம்புல மாட்டி விடப் பார்க்கறீங்க பார்த்தீங்களா,ஜான் எஃப் கென்னடி?”
”ஏன் அவரைப் பிடிக்கும்”
”அவர்தான் நிஜ அரசியல் வாதி,அதுக்கு நிறைய காரணம் இருக்கு,ஒரு தொடரே எழுதலாம்”
”இங்கே தமிழ் நாட்டுல பிடிச்ச அரசியல் வாதி”
கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கிறார்.
”வேணாம் அழுதுடுவேன்”
மழை, வெள்ளத்தில் சென்னை மாநகரம் முழுவதும் மின்தடை இருந்தது. கழிவு நீர் சாக்கடையில் கலந்து சாலையில் ஓடியது, இப்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மின் இணைப்பு கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, இது எதோ கமலுக்கு மட்டும் தான் சென்னையிலேயே இந்த நிலைமை என்று எழுதுவது எந்த விதத்தில் நியாயம். இவ்வளவு வாய் கிழிய பேசிய கமல், இது வரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் அளித்தார் என்று சொல்ல முடியுமா ???