கவுதமி விவகாரம்! கமலின் அரைகுறை விளக்கம்!
சட்டை பட்டனாக இருந்தால் கூட, அதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல். ஆனால் தன்னை விட்டு பிரிந்து போன கவுதமி விவகாரத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர். அதில்தான் அவ்வளவு அரைகுறை!
அந்த விளக்க கடிதத்தில் தலையும் இல்லை. வாலும் இல்லை. ஒரு துண்டு தாளில் அச்சிடப்பட்டிருக்கும் அதில், இறுதி பாராவுக்கு கீழே கமலின் கையெழுத்தும் இல்லை. ஆனால் அதிகாரபூர்வமாக அவரது மக்கள் தொடர்பாளர் மூலம் அனுப்பப்பட்டிருப்பதால், மீடியாக்கள் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியுள்ளன.
இந்தளவுக்கு விட்டேத்தியாக கமல் எந்த விஷயத்தையும் டீல் செய்யததில்லை. இந்த கடிதத்தை பார்க்கும் போது, கவுதமி விவகாரத்தில் அவர் மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவே படுகிறது. எது எப்படியோ… அந்த கடிதம் அப்படியே இங்கே-
பின்குறிப்பு – இந்த விளக்கம் கவுதமிக்காவது புரிந்தால் சரி