தேவையா இது? தமன்னாவுக்காக பரிதாபப்படும் நயன்தாரா!
அலிபாபா குகைக்குள் ஐஸ் விற்கப் போனால், குச்சி எது? கோன் எது? என்று குழம்பி போட்டதை போட்டுவிட்டு ஓட வேண்டியதுதான்! சினிமாக்காரர்களின் காதல்கள் பல இப்படிதான். உள்ளே போகும் வரைக்கும் தெரியாது. இது ஆளையே குளோஸ் பண்ணும் அலிபாபா குகை என்று?
நயன்தாரா சிக்கிக் கொண்டு வெளியே வந்து வருஷங்கள் ஆவதற்குள், அடுத்த நயன்தாராவாக சிக்கிக் கொண்டிருக்கிறார் தமன்னா. பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்குமான லவ், ஊரே வியந்த ஒண்டிப்புலி கதை! மாஸ்டரின் முதல் மனைவிக்கும், நயன்தாராவுக்கும் நேரடி சண்டையே வந்தது. படப்பிடிப்புக்கு நேரில் வந்து முடியை பிடித்து இழுக்கவும் கூட திட்டமிட்டார் மாஸ்டரின் மனைவி. அதற்கப்புறம் கால மாற்றத்தில் எல்லாம் நீர்த்துப் போனது. திருமணம் வரைக்கும் போன காதலை, திரும்பவும் கண்ணீரில் கரைத்து விட்டு கரையேறினார் நயன்தாரா. இந்த களேபரங்களில் நயன்தாரா பாடுபட்டு சேர்த்த பணம் பதினைந்து கோடி அவுட்டானதுதான் மிச்சம்! இன்னொரு மிச்சம்… நயன்தாராவின் கையில் பச்சைக்குத்திய P என்ற இனிஷியல்!
இப்போது மாஸ்டரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாராம் தமன்னா. தேவி படத்தில் துவங்கிய நட்பு மெல்ல காதலாக மாறியதாகவும் கூறுகிறது கோடம்பாக்கம். காதலின் அடுத்த கட்டம் என்னவோ? அதுவும் நடந்து, படப்பிடிப்பில் வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தாராம் தமன்னா. இதனால் படப்பிடிப்புகள் சில நாட்கள் தடைபட, விஷயம் வர்தா புயல் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
இதை நிரூபிப்பதை போல, தனது அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக தமன்னாவையே புக் பண்ணச் சொல்லி தயாரிப்பாளர்களை வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா. இதுதான் சந்தர்ப்பம் என்று தனது சம்பளத்தை முந்தைய சம்பளத்தை விட சில மடங்கு உயர்த்திவிட்டாராம் தமன்னா. மாஸ்டர் வேணும்னா தமன்னாவும் வேண்டுமல்லவா? அதனாலேயே இவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து அழ தயாராகிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்த விஷயத்தையெல்லாம் கேள்விப்பட்ட நயன்தாரா சொன்ன ஒரு வார்த்தைதான் இந்த நியூசின் தலைப்பு. “தேவையா இது?”
https://youtu.be/1YRtIzHtRBM
நயன எத்தினி தடவ போட்டானோ … இவ யோக்கியம் மாதிரி அவளுக்கு அட்வைஸ். நயன் வந்த புதுசு ல தென் மாவட்ட பிரமுகர் ‘வச்சு’ செஞ்சார்னு ஒரு நியூஸ் படிச்சேன்.. அறிஞ்சவங்க உங்க தகவல் கொட்டவும்..