ஏன் இந்த குதர்க்க பேட்டி? வைரமுத்துவுக்கு ஒரு திறந்த மடல்… தேனி கண்ணன்
மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம்.
இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த இசையமைப்பாளரோடும் பாடல் எழுதலாம் ஆனால் நீங்கள் யுவனோடு சேருவதை மட்டும் பூதாகரமான செய்தியாக்கியிருப்பதில்தான் இருக்கிறது உங்களின் ’இடம் பொருள் ஏவல்.’
ஆதாயம் இல்லாமல் அரை நொடியைக்கூட நீங்கள் வீணடிக்கமாட்டீர்கள் என்பது உங்களை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்த சந்திப்பிற்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பதிலிருந்து இதற்குப்பிறகு தங்களுக்குக் கிடைக்கப்போகும் லாபம் மலைக்க வைக்கிறது. மந்திரிகளுக்கே தெரியாமல் மதிநுட்ப அரசியல் செய்வது போல், திரையுலகில் தங்களின் தொழில் நுட்ப அரசியல் வியக்க வைக்கிறது.
ஒரு இயக்குனர் ஒரு குறிப்பிட்ட பாடலை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று உங்களிடம் வந்தால் “இந்த ஒரு பாடலை மட்டும் நான் எழுத வேண்டுமா, அருமையான கதையாக இருக்கிறதே அதற்கு வலுவூட்ட வேண்டாமா” என்று இயக்குனரின் தலையில் தேன் தடவி எல்லா பாடல்களையும் நீங்களே எழுத நிர்பந்திப்பீர்கள். இதனால் உங்களின் சக கவிஞர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறதே என்கிற எந்தவித குற்றவுணர்வும் உங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. நீங்கள் இருக்கும் இதே துறையில்தான் உங்களுக்கு முன்னோடியாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றோர்களும் கோலோச்சியிருக்கிறார்கள். ஒருமுறை கண்ணதாசனிடம் வந்த ஒரு இயக்குனர் படத்தின் கதையைச்சொல்லி “நீங்கள் பாடல் எழுத வேண்டிய சூழல் இதுதான்” என்றிருக்கிறார். ஒரு நிமிடம் யோசித்த கவியரசு, “இந்த சூழலுக்கு பட்டுக்கோட்டை எழுதினால் சிறப்பாக இருக்கும்.” என்று அவரிடம் அனுப்பியிருக்கிறார்.
இதே போல பட்டுக்கோட்டையாரிடம் சென்ற வேறொரு இயக்குனர், ஒரு சூழலைச்சொல்லி பாடல் கேட்க, “இது தாலாட்டுப் பாடலாக இருக்கிறது நான் எழுதுவதை விட கவிஞர் எழுதினால் அழகாக வரும்.” என்று கண்ணதாசனிடம் அனுப்பி வைக்கிறார். பட்டுக்கோட்டை. இது காலம் அறிந்த வரலாறு. இப்படி மாண்புடன் வாழ்ந்தவர்கள் இருந்த துறையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை தங்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ஏழாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி சாதனை புரிந்திருக்கிறீர்கள். ஆனால் இத்தனை பாடல்களையும் இப்படி அரசியல் செய்துதான் எழுதியிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடுமே.
எண்பதுகளில் நடந்த சம்பவம் இது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஒரு படத்திற்கு இசையமைக்கச் சொல்லி இசைஞானியிடம் வந்த ஒரு தயாரிப்பாளர் அவரிடம், “என் நண்பர் ஒருவர் கவிஞர். அவரை இந்தப் படத்தில் பாடல் எழுத வைக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைக்கிறார். உடனே இளையராஜா, ”இந்த படத்தில் வைரமுத்துதான் பாட்டு எழுதுவார். அப்படின்னா நாளைக்கே ரெக்கார்டிங் உங்களுக்கு வசதி எப்படி” என்று கேட்டு தயாரிப்பாளரை திகைக்க வைத்தார். அந்த படம் மலையூர் மம்பட்டியான்.
இப்படி லட்டு லட்டான ட்யூன்களை உங்களுக்கு கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், உங்களுக்கு காட்ஃபாதர் போலவே இருந்திருக்கிறார் இளையராஜா. அப்படி அவர் இருந்ததாலதான் உங்களால் திரைத்துறையில் பேரெடுத்து நிலைக்க முடிந்தது. அப்படியிருந்த அவருக்கு எதிராக நீங்கள் வேற்று மொழியிலிருந்து இறக்கிய இசையமைப்பாளர்கள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் இருப்பார்கள். ஆனால் கதிரவன் ஒளிக்கும் காக்கா பொன் மினுக்குவதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்களா என்ன. ரசிகர்கள். இதோ இப்போதும் பாலா படத்திற்காக பிரமாண்ட இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் இசைஞானி.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து இருப்பது என்பது வேறு. ஆனால் அவருக்கு எதிராக அரசியல் காய் நகர்த்துதல் என்பது வேறு. இப்படி உங்களுக்கு வாழ்வளித்த இசைஞானிக்கு எதிராக பல ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறீர்கள். இத்தனை வயதும், அனுபவமும் கடந்த பிறகும் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் வேதனை தருகிறது. நீங்களும் யுவனும் சேர்ந்திருக்கும் நிழற்படத்திலேயே தெரிகிறதே உங்களின் கைவண்ணம். இதை என் போன்ற பத்திரிகையாளர்கள் சிலர் மட்டுமே அறிவர்.
நியாயமாக பார்த்தால் அந்த பேட்டியின் தலைப்பு “எனக்கு வாழ்வளித்தவர் ராஜா” என்றோ, “நான் ராஜாவோடு சேர விரும்புகிறேன்.” என்றோ தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு பேட்டி எப்படி வரவேண்டும் என்பதை அந்த இதழின் ஆசிரியர் குழுவிற்கே யோசனை சொல்லும் அதிகாரம் படைத்தவர் நீங்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அந்த அதிகாரத்தில்தான் அந்த கட்டுரையின் கட்டமைப்பை ராஜாவிற்கு எதிராக நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். காவியக் கவிஞர் வாலி அவர்கள் வாழ்ந்த வரைக்கும் சொல்லிக்கொண்டிருந்தாரே ”ராஜா இசையில் பாடல் எழுதிய பிறகுதான் நான் வருமான வரி கட்ட ஆரம்பித்தேன்.” என்று. ஒரு சம்பவம் சொல்கிறேன், சென்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று கவிஞர்களுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் விருந்தளித்தார் இசைஞானி. அங்கு வந்திருந்தார் வாலி, அப்போது அவர், “ராஜா நான் வீட்ல சாப்பிடும் சாப்பாடே நீ போட்டதுதான். இங்கே வேறு வந்து சாப்பிடணுமா.” என்று குழந்தையாய் சிரித்தபடி கேட்டார். அதற்கு நானே சாட்சி. இத்தனைக்கும் ராஜா சார் வாய்ப்புக்கொடுத்து அந்த வாய்ப்பில் உயர்ந்தவர் அல்ல வாலி. அந்த பெருந்தன்மையை உங்களிடம் எதிர்பார்ப்பது தவறா. நான் கேட்கிறேன். வாலியை விட அனுபவத்திலும், ஆளுமையிலும் எந்த வகையில் உயர்ந்தவர் நீங்கள்?
இந்த சந்திப்பைப் பற்றி உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், ‘காதலர்கள் முத்தமிட்டால் தோன்றும் மின்னளவு, இந்த பூமி கொண்டிருக்கும் நீரின் கொள்ளளவு, ட்யூனுக்கு எழுதும் கவிதையின் சொல்லளவு இப்படி எல்லாம் தெரிந்த உங்களுக்கு யுவனோடு இணையும் இந்த தருணத்தில் அமைதி காக்க வேண்டும் என்பது மட்டும் எள்ளளவும் தெரியாமல் போனது ஏன். யுவன் இசையில் எழுதிதான் நீங்கள் புகழ் பெற வேண்டுமா அல்லது உங்கள் பாட்டை வைத்துதான் இனிமேல் யுவன் புகழ் பெற்வேண்டுமா இல்லையே. அப்புறம் ஏன் இந்த குதர்க்க பேட்டி.
அதுவும் கபிலன் வைரமுத்துவையும், மதன் கார்க்கியையும் இசைஞானி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள். இசைஞானி யாரை வைத்து பாட்டு எழுதவேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யார்?. ஏன் கோடம்பாக்கத்தில் வேறு கவிஞர்களே இல்லையா. அண்ணன் அறிவுமதி, இப்போதும் இளமை மாறாமல் எழுதும் பழநிபாரதி, தாமரை, பரபரப்பாக இருக்கும் நா.முத்துக்குமார், ஹிட் அடிக்கும் யுகபாரதி,, கபிலன், விவேகா, சிநேகன், இவர்கள் எல்லாம் கவிஞர்கள் இல்லையா எல்லோரும் அரிசி மண்டியிலா வேலை பார்க்கிறார்கள்?. நான் குறிப்பிட்டவர்களில் யாரும் சொகுசு பங்களாவில் அமர்ந்த பின்னும் பாடல் எழுதுவதற்காக மல்லுகட்டிக்கொண்டிருக்கவில்லை.
கவிப்பேரரசரே… உங்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் பாடல் எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு விழாவிலோ, அல்லது உங்கள் பதிவுகளிலோ எங்காவது சக கவிஞர்களை பற்றி பாராட்டி பேசியதுண்டா, எழுதியதுண்டா?
வாகை சூடவா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நீங்கள் எழுதிய பாடலான ‘முடக்கத்தான் கீரையை கொடுத்து மடக்கத்தான் பார்க்குற’ என்பதை மட்டும்தானே சொன்னீர்கள். அதே படத்தில் அருமையான பாடலான ‘தஞ்சாவூரு மாடத்தி..’ என்ற பாடலை எழுதிய வெ.ராமசாமியைப் பற்றி பாராட்டி பேசீனீர்களா? இல்லையே..
ஆனால் தன் காலம் முழுதும் யாராலும் தோற்கடிக்க முடியாத கவிஞர் வாலி, அவர்கள் ஒரு பதிப்பில், ”பழநிபாரதியும் நானும் அபூர்வம்” என்று பதிவு செய்திருக்கிறார். அதோடு அத்தனை இளைய கவிஞர்களோடும் பொது மேடையில் தோன்றி அவர்களை வானளாவ புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இப்படி தலைமுறை தாண்டிய தமிழ்கவிஞர்களை தன் தோளில் தூக்கி தண்டுவடம் வலிக்க வலிக்க கொண்டாடி மகிழ்ந்தார் அந்த தாடி வைத்த தமிழ்ச் சிங்கம்.
அந்தப் பேட்டியில் யுவன் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திற்கே சாரை பாடல் எழுதவைக்க முயன்றோம் முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். உங்களை அணுகிய பிறகும் அது நடக்கவில்லை. நீங்கள் எழுத சம்மதிக்கமாட்டீர்கள் காரணம் யுவன் அப்போதுதான் வளர்ந்து வந்தார். உங்கள் தங்கத்தமிழை வைத்து அவர் மேலும் தழைத்து விடக்கூடாது என்ற அக்கறைதான் காரணமாக இருக்கும். . ஆனால் நீங்கள் இல்லாத அந்த படத்திற்கு பழநிபாரதி எழுதிய பாடல்கள் இன்றளவும் ஹி.ட். இதற்காகவே பழநிபாரதிக்கு நீங்க தனியாக பாரட்டு தெரிவித்திருக்கேண்டும். கற்பகம் படத்தில் கண்ணதாசனுக்குப் பதில் வாலி எழுதி அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கண்ணதாசன் அவர்கள் “கற்பகம் படத்தின் அத்தனை பாடல்களையும் ”வாலி எழுதி அத்தனை படல்களும் பிரபலமாகியிருக்கிறது. இதற்காகவே வாலிக்கு நான் தனியாக ஒரு பாராட்டு விழா எடுக்கவேண்டும்.” என்று மனம் திறந்து பாராட்டினார். அந்த மனப்பாங்கு உங்களுக்கு இல்லையே ஏன்?
மேலும் அந்த பேட்டியில் ”சகோதரி ஜீவா கையால் நான் பலமுறை உணவருந்தியிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தீர்கள். வைரமுத்து அவர்களே ஜீவா அம்மா போட்டதும் ராஜா வீட்டு சோறுதானே?. நியாயமாக பார்த்தால் நீங்கள் “ராஜா எனக்கு சோறு போட்டார் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.
ஏதோ யுவன் மீது திடீர் பாசம் வந்துவிட்டதைப் போல வாஞ்சையோடு வார்த்தைகளை அடுக்குகிறீர்கள். இதைப்படிக்கும் அப்பாவி வாசகர்கள், உங்களின் பாசத்தைப் பார்த்து சிலிர்த்துப் போவார்கள். ஆனால் உங்கள் சுயரூபத்தை சுருட்டி வீட்டிற்குள் வைத்திருக்கிறீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் எந்த ஒரு அறிமுகக் கவிஞனுக்கும் கிடைக்காத பொன்னான வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா.என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.. அதையும் நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டீர்கள். என்பது வேறு விஷயம். இப்படி உங்களுக்கு வாழ்க்கை கொடுப்பதற்கு அன்று இளையராஜா காரணமாக இருந்தார். இப்போது உங்கள் மார்க்கெட் சரிந்த நிலையில் உங்களை தூக்கி நிறுத்துவதற்கும் இளையராஜாவின் மகன் யுவன்தான் தேவையாக இருக்கிறார். ஆக மொத்தம் உங்கள் வாழ்க்கை நலத்திற்காக இளையராஜாவின் குடும்பமே ரத்ததானம் செய்திருக்கிறது. இதுதான் உண்மை.
கடைசியாக ஒரு வார்த்தை நானும், உலகம் முழுதும் பரவி இருக்கும் இசைஞானியின் ரசிகர்களும் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் அடுத்தப் பேட்டியில் இசைஞானிக்காக நீங்கள் செலுத்தும் நன்றியைதானே தவிர, இசைஞானிக்கு எதிராக நீங்கள் செய்யும் அரசியலை அல்ல.
அன்புடன்
பாசத்திற்குரிய பத்திரிகையாளன்,
தேனி கண்ணன்
ராஜா சாரும் கிட்டத்தட்ட இதே மாதிரி தானே…
அவரும் தன்னுடைய அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களை அப்படி ஒன்னும் தட்டி கொடுத்தோ, பாராட்டி பேசினதோ இல்லையே… அவ்வளவு ஏன் தன் சிஷ்யன் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினாரே, இது வரைக்கும் ஒரே ஒரு வார்த்தை அவருக்கு வாழ்த்து சொல்லவில்லையே…!!!!!
இசைஞானி MSV, ரஹ்மான் உட்பட சக இசை கலைஞர்களை மேடையில் பாராட்டிய வீடியோ http://www.youtube.com/watch?v=aoTqHceZeSg
அந்த மேடையில் வேறு வழி இல்லாமல் ரஹ்மானை பற்றி பேச வேண்டியதாகிற்று ராஜாவுக்கு. வேண்டா வெறுப்பாக ரஹ்மானை தவிர எல்லாவற்றை பற்றியும் பேசி விட்டு இறுதியில் ரஹ்மானை பாராட்டி பேச மனம் வராமல் சைகை காமித்து முடித்தார் ராஜா.
பின்னாளில் பொறாமையில் ஆஸ்கார் விருதையே கேவலப்படுத்தி எல்லாம் பேசினார் ராஜ.
ராஜாவின் வயத்தெரிச்சல் (குறிப்பாக ரஹ்மான் மேல்) உலகம் அறிந்தது. ரஹ்மானை தாக்கி பேசுவது ராஜாவுக்கு வாடிக்கையான ஒரு விஷயம். ஒரு விழா மேடையில், “இறைவனுக்கு எதுக்கு புகழ் தரனும்? இறைவனுக்கு இல்லாத புகழா?” என்று பேசினார். குமுதம் இதழில் கேள்வி பதிலில் எத்தனை முறை ரஹ்மானை கேவலபடுத்தி எழுதி உள்ளார் என்று எடுத்து பாருங்கள், உண்மை புரியும்.
இவ்வளவு புத்திசாலியான நீங்கள் மகமேதையான ராஜாவை பற்றி ரஹ்மான் என்னத்த பெரிசா பேசியிருக்கிறார் என்று யோசிக்காததில் ஆச்சரியமில்லை. ரஹ்மாந்தான் தன் தகுதியை உணர்ந்து ராஜாவை புகழ்ந்திருக்க வேண்டும். ராஜா ரஹ்மானின் தகுதிக்கு மேலாக ரஹ்மானை அங்கீகரித்து உள்ளார். இதெல்லாம் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.
எந்த ஒரு பிரச்சனையையும் சில மனநோயாளிகள் வந்து ராஜா-ரஹ்மான் பிரச்சம்னையாக வெற்று கூச்சல் சண்டையாக மாற்றிவிடுவார்கள். நான் பேச தொடங்கிய பிரச்சனை திசை திரும்பிவிடும்.
நான் அப்படியே விட்டு விட்டு நழுவுகிறீர்கள். ராஜ பல மேடைகளில், பத்திரிக்கைகளில் ரஹ்மானை மட்டுல் அல்லாமல் மற்ற இசை அமைப்பாளர்களையும் கேவலப்படுத்தி உள்ளார். இதற்கு உங்கள் பதில்?
ரஹ்மான் பல மேடைகளில், இண்டர்வ்யூக்களில் ராஜாவை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். சமீபமாக சூப்பர் சிங்கரில் கூட பேசினார். ரஹ்மான் என்றாவது ராஜாவை மட்டும் அல்ல, யாரையாவது இப்படி கேவலப்படுத்தி இருக்கிறாரா? ரஹ்மான் செல்வது அன்பு பாதை, ராஜா செல்வது வெறுப்பு பாதை. இதை யாராலும் மறுக்க முடியாது.
ராஜாவுக்கு ரஹ்மான் மேல் பொறாமையோ வெறுப்போ இல்லை என்று சொல்வது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போல.
நல்லா சொன்னீர்கள் நண்பரே. செருப்பால் அடிசதார்போல் உள்ளது, உங்கள் கருத்து…தொடரட்டும் உங்கள் இசைஞானியின் புகழாறம்…
இது உண்மையே…!!! ராஜா சார் நல்ல திறமைசாலி…மேதை… அவர் அளவுக்கு இசையில் சிகரம் தொட்டவர் யாரும் இல்லை. இதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை.
எங்கள் வருத்தம் எல்லாமே அவர் தன சக கலைஞர்கள் மேல் காட்டும் வன்மம் மட்டுமே. தன் சிஷ்யர்களுக்கு எதையும் செய்ய தயாராய் இருக்கும் பலரை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், ராஜா சார் வேற வழியில்லாமல் பாராட்டி பேசுவதை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.
ராஜா சார் ஏன் ரஹ்மானை வாழ்த்தவில்லைன்னு கேட்டா ரஹ்மான் ஏன் ராஜா சாரை பாராட்டி பேசல அப்படின்னு கேக்கறாங்க. ராஜா சார் பேசும் வீடியோ லிங்க் குடுத்திருக்கற நண்பர் அந்த வீடியோவை முழுசா பார்க்கல போல இருக்கு. அவர் பாராட்டி பேசற ஆரம்ப நிமிடங்களை மட்டும் பார்த்திட்டு மீதி விட்டுட்டார் போல. இந்த நிகழ்ச்சி ரகுமான் விருது வாங்கி ரொம்ப நாள் கழிச்சிதான் நடந்தது. சில மாதங்களாவது இருக்கும்.
ஆனா, அதுக்குள்ளே தமிழ் மட்டும் இல்ல இந்திய சினிமாவின் எல்லாருமே ரகுமானுக்கு தன்னோட வாழ்த்துக்களை – பத்திரிக்கையிலோ, எதோ வகையிலோ தெரிவிச்சிருந்தாங்க. அதுவரை வெளிப்படையா வாழ்த்துக்கள் சொல்லாத ஒரே ஒருவர் ராஜா சார் மட்டுமே. எல்லா ஊடகங்களிலுமே இது வந்து, வெளிப்படையா கேக்க ஆரம்பிச்சிருந்தாங்க. ராஜா சார் ஏன் ரகுமானுக்கு வாழ்த்துக்கள் சொல்லலன்னு…!!! அதுக்கு அப்புறம் தான் இந்த நிகழ்ச்சி நடந்து ராஜா சார் பேசினார். அதுவும் எப்படின்னு முழுசா பாருங்க தெரியும். தன்னுடைய பொறாமையை, வயித்தெரிச்சலை முழுசா கொட்டியிருக்கார். பாராட்டி பேசற மாதிரி, அப்படியே கவுத்திருக்கார்.
ராஜா சார் மேடைகளில் தனக்கு தானே புகழ்ந்துக்குவார். நான் அப்படி பண்ணேன்…இப்படி பண்ணேன். யாரவது இப்படி பண்ண முடியுமா… இப்படி பண்ண முடியுமான்னு தான் பேசுவார். அத்தனையும் தற்புகழ்ச்சி. நம்ம மெல்லிசை மன்னர்… பல தொலைகாட்சி நிகழ்சிகள், மேடைகள் ஏறியிருக்கார். பேசுபவர்கள் பலரும் அவரோட சாதனைகள் பத்தி சொன்னால் கூட, நான் ஏதேதோ பண்ணதா சொல்றிங்க… நான் என் வேலையை செய்தேன். இறைவன் அருளால் அது நல்லவிதமா வந்ததுன்னு ஒரே வரியில் முடிச்சி வெச்சிடுவார். அவர் வயசென்ன….? இன்றைய நாள் வரை இதை அவர் மாற்றி பேசினதே இலை. ரஹ்மானும் அதே மாதிரி தான்.
இப்போ சமீபத்தில் வந்த ஒரு பேட்டியில் கூட ராஜா சார் எதோ பாட்டை தான் ரெண்டு நாளில் முடிச்சதாவும், உலகின் எந்த ஒரு இசையமைப்பாளரிடம் குடுத்தா கூட அதுக்கான நோட்ஸ் எடுக்கவே ரெண்டு மாசம் ஆகும் சொல்லியிருந்தார்.
ஜெயா டிவிக்காக நேரு ஸ்டேடியத்தில் நடந்த இசை நிகழ்ச்சி. அதில் ராஜா சார் ஹங்கேரி நாட்டு இசைக்கலைஞர்களை வரவழைத்து அன்னைக்கு தன்னுடைய பாடல்களுக்கு இசையமைக்க வெச்சிருந்தார். அந்த மேடையில் வந்திருந்த அந்த இசை கலைஞர்களில் ஒருத்தரை பத்தி பேசறார். இளையராஜா சாரோட இந்த நிகழ்ச்சிக்கு வாசிக்க அவரை தொடர்பு கொண்டப்போ இளையராஜாவா… எனக்கு அவரை நல்லா தெரியும்… கண்டிப்பா வரேன்னு ஒத்துக்கிட்டாராம். இவர் மேடையில சொல்றார் – எனக்கு அவர் யாருன்னே தெரியாது. ஆனா என்னை அவருக்கு தெரிஞ்சிருக்கு அப்படின்னு, அதுவும் மேடையில அவரை பக்கத்துல வெச்சிக்கிட்டே ஆங்கிலத்தில் பேசறார்.
தன்னம்பிக்கை – அது வேற. பொறாமை, தற்பெருமை, தலைக்கனம் – இது வேற. ராஜா சார் பேசும் எந்த ஒரு பேட்டி எல்லாத்துலயும் என்ன தெரியும்னு நல்லா உணர்ந்தவர்களுக்கு தெரியும்.
ராஜா அவருடைய வெறுப்பை மறைமுகமாக காட்டவில்லையே, வெட்ட வெளிச்சமாக தானே எல்லாம் செய்கிறார்.
ராஜாவின் ஆணவத்தையும் திமிரையும் வெறுப்பையும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ராஜாவின் ரசிகர்கள் மூடர்கள் இல்லை.
அவரை புனிதராக சித்தரிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது என்று நினைத்துக்கொண்டு, உண்மை தெரிந்தும் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கின்ற பாவப்பட்டவர்களாகவே அவர்கள் தெரிகிறார்கள். “ஏன் இப்படி எல்லாம் பேசறாரு அவரு? பேட்டி எல்லாம் கொடுக்காம, வெறும் இசையை மட்டும் கவனிச்சா நல்லா இருக்கும்” என்று ராஜா ரசிகர்களே பேசி நான் கேட்டு இருக்கிறேன்.
சரியாக சொன்னிங்க
Ji enna pesringa aascor tamilan show ku chief guest eh raja sir dhan.stage la rahman and raja aludhanga pakaliya
உண்மை தான் தாங்கள் கூறியது ..இன்றைய தலைமுறைகள் நன்றாக இசையமைத்தால் ராஜா சார் நிச்சயம் பாராட்டுவார் …இவர்கள் இன்றைக்கு இசையை திருடுகிறார்கள் , இசையமைக்கவில்லை .இவர்கள் முறையாக இசை கற்றவர்களும் அல்லர் .ஏன் இத்தனைக்கும் தன் மகனான யுவன் சார் ஐ கூட இசைஞானி பாராட்டுவது இல்லை .அது அவருடைய குணம் …அவர் இசை தான் இன்றைக்கு பல பேருக்கு ஊட்டச் சத்து …மருந்து ..இது தங்களுக்கும் தெரிந்திருக்கும்…இசை இறைவன் உணர்த்துவது நாம் வளர்த்துக்கொள்வது அல்ல …ஆஸ்கார் என்பது தமிழ் தெரியாத பத்து பேர் குழு அமைத்து கொடுக்கும் ஒரு விருது …அதுவே அங்கீகாரம் அல்ல …நாம் இதே போல் ஒரு விருது கொடுத்தால் வெள்ளைக்காரன் பெருமை பட்டுக் கொள்வானா அல்ல …அவன் அந்த விருதினை வாங்கவே வரமாட்டான் …இதனை நான் கூறவில்லை …இந்திய அளவில் பிரபலம் பெற்ற ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம் சார் கூறியுள்ளார் ..குறை என்பது அனைவரிடத்திலும் உண்டு ….இசைஞானி மிக உயர்ந்த மனிதர் அவரை போற்ற வேண்டும் தூற்றக் கூடாது
ஜெஸ்ஸி, உங்களுக்கு பொது அறிவு மெய் சிலிர்க்க வியக்கிறது. ராஜா சார் ஆஸ்காருக்கு மேடையிலியே வாழ்த்தியது மட்டுமின்றி, ” அண்ணா எம் எஸ் வி ஆதர ஸ்ருதி, அதற்கு மேல் எழுந்த பஞ்சமம்” என்று தன்னையும் “அதற்கும் மேல் சட்ஜமம்” என்று ரஹ்மானையும் என்று சொல்லுகிறாரே; இதை விட பெரிய இடத்தை ரஹ்மானுக்கு யார் தர முடியும்? ரஹ்மானை வாயால் பாராட்டவே இல்லையே என்றவர்கள் இப்போது அப்படியே ப்ளேட்டை மாற்றி இதையும் ஏதவது குறை சொல்வீர்கள். தமிழ் நாட்டின் மன நோய் அப்படி.
http://www.youtube.com/watch?v=aoTqHceZeSg
உண்மை தான் தாங்கள் கூறியது ..இன்றைய தலைமுறைகள் நன்றாக இசையமைத்தால் ராஜா சார் நிச்சயம் பாராட்டுவார் …இவர்கள் இன்றைக்கு இசையை திருடுகிறார்கள் , இசையமைக்கவில்லை .இவர்கள் முறையாக இசை கற்றவர்களும் அல்லர் .ஏன் இத்தனைக்கும் தன் மகனான யுவன் சார் ஐ கூட இசைஞானி பாராட்டுவது இல்லை .அது அவருடைய குணம் …அவர் இசை தான் இன்றைக்கு பல பேருக்கு ஊட்டச் சத்து …மருந்து ..இது தங்களுக்கும் தெரிந்திருக்கும்…இசை இறைவன் உணர்த்துவது நாம் வளர்த்துக்கொள்வது அல்ல …ஆஸ்கார் என்பது தமிழ் தெரியாத பத்து பேர் குழு அமைத்து கொடுக்கும் ஒரு விருது …அதுவே அங்கீகாரம் அல்ல …நாம் இதே போல் ஒரு விருது கொடுத்தால் வெள்ளைக்காரன் பெருமை பட்டுக் கொள்வானா அல்ல …அவன் அந்த விருதினை வாங்கவே வரமாட்டான் …இதனை நான் கூறவில்லை …இந்திய அளவில் பிரபலம் பெற்ற ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம் சார் கூறியுள்ளார் ..குறை என்பது அனைவரிடத்திலும் உண்டு ….இசைஞானி மிக உயர்ந்த மனிதர் அவரை போற்ற வேண்டும் தூற்றக் கூடாது….
ராஜா ச◌ார் போட்ட ஒவ்வொரு டியூனும் நமக்கு ஆஸ்கர் அவார்டு தான்… சார் ராஜா சார் போட்ட பாட்ட கேட்கவே நமக்கு இன்னும் ஒரு ஆயுள் வேனும்… அப்படி இருக்க ரோட்டுல காசுங்குற ◌பேப்பருக்கு அலையுற கழுதைய பத்தி நமக்கு என்ன கவலை…. விடுஙக் சார்,
செல்வா கூறியது முக்கிய கருத்து.. ராஜா என்றைக்குமே தன்னுடைய பிள்ளைகளையும் மேடையில் புகழ்ந்து கூறியது கிடையாது .
முரண்பாடு ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் வைரமுத்து பகிரங்கமாக மேடையில் ராஜா வை விமர்சித்து இருக்கின்றார். ஆனால் ராஜா என்றைக்குமே வைமு வை மேடையில் விமர்சித்தது கிடையாது. பொறுமையில் எல்லையில் வைமு மீது வழக்கு போட்டார்.
ராஜா மாதிரி யாராவது மூத்த இசை அமைப்பாளர்களை மதித்தது உண்டா ……………
MSV கூட தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களை ராஜா மாதிரி மதித்தது கிடையாது. (மதிக்க வில்லை என்று பொருள் கொள்ள கூடாது )
இளைய இசை அமைப்பாளர்களை பாராடலை னா பரவா இல்லை, ஏசாமல் இருக்கலாம் அல்லவா? ராஜாவுக்கு எப்பொழுதும் அந்த பக்குவம் இருந்ததே இல்லை.
இசைஞானி MSV, ரஹ்மான் உட்பட சக இசை கலைஞர்களை மேடையில் பாராட்டிய வீடியோ http://www.youtube.com/watch?v=aoTqHceZeSg
OK ALL ACCEPTED . BUT IN WHAT WAY MAESTRO IS GRATITUDE TO LEGENDARY SINGERS VIZ S.JANAKIAMMA. SHE HAS NOT BEEN SINGING IN ALL LATEST COMPOSITIONS OF RAJA SIR BUT SHE HAD SUNG FOR OTHER MD”S . RAJA SIR HAS TOLD IN ONE INTERVIEW IN ANANDHA VIGADAN JANAKIAMMA VOICE IS SUMARANA VOICE DHAN . IN WHAT WAY IT IS JUSTIFIABLE . EVERY ONE IS HUMAN BEING AND MAKE THEM SELVES RELAXED AT SOME POINT OF TIME . FOR NETRU , INDRU NALAI PROGRAM OF RAJA SIR. ALL SINGERS ARE INVITED EXCEPT S.JANAKI . CAN ANY ONE EXPLAIN .
Aan Mottai Raja TMS – i tharakkuraivaka nadaththinar? Idarku yaar badhil kuruvadhu
Aan Raja TMS – i tharakkuraivaka nadaththinar? Idarku yaar badhil kuruvadhu
வைரமுத்தின் இலக்கணப்புலமை:
‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை’
இதற்கு பொருளென்னவென்றால்,
‘உடம்பில் காதல் அணுக்கள் எத்தனையுள்ளன’ என்றுகேட்கிறார், கவிஞர், என்பீர்கள்.
சரி, ‘காதல் அணுக்கள்’ என்றால்?
(வைரமுத்து இலக்கணம்பயின்றவரென்பது அனைவரும் அறிந்ததே)
தொல்காப்பியத்தை கரைத்துக்குடித்தவருக்கு தொல்காப்பியங்கூறும் அறுவகையான பயனிலைகளைப்பற்றி தெரியாதாயென்ன?
தமிழைப்பொருத்தவரை, இரண்டு பெயர்ச்சொற்கள் அடுத்தடுத்துவருமானால், இரண்டாவதுபெயரானது முதற்பெயருக்கு பயனிலையாகும்.
‘கண்ணன் திருடன்’ என்பதில் இரண்டுபெயர்ச்சொற்களுள்ளன. இதிலுள்ள இரண்டாவதுபெயர்ச்சொல்லானது, முதற்பெயர்ச்சொல்லுக்கு பயனிலைப்பொருளைத்தருவதால், இது ஒரு வாக்கியமாகிறது.
இந்த வாக்கியத்தை இத்துடன் முடிக்காமல் தொடரவேண்டுமானால், இரண்டாவதுபெயருடன் ஒரு வேற்றுமையுருபை சேர்த்தாலன்றி அது இயலாது.
‘கண்ணன் திருடனை பிடித்தான்’
‘கண்ணன் திருடனால் பிடிபட்டான்’
‘கண்ணன் திருடனோடு வந்தான்’
‘கண்ணன் திருடனுக்கு நண்பன்’
என்றெல்லாம்வரும்.
அல்லது, அந்த இரண்டுசொற்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக்கி, அவற்றை புணர்த்திவிட்டால் (ஒன்றாக சேர்த்தல்) அப்போது, இரண்டும் ஒரேசொல்லாகிவிடும், பயனிலைப்பொருள் வராது.
‘மல்லிகை பூ’ – இரண்டாவதுபெயர் பயனிலையானதால், ‘மல்லிகையென்பது ஒரு பூவாகும்’ என்றபொருளைத்தந்தது.
‘மல்லிகைப்பூ வாடியது’ ‘மல்லிகைப்பூ’ என்பது ஒரேசொல்லானதால் இன்னொரு பயனிலையை ஏற்றது.
இதை, ”மல்லிகை பூ வாடியது’ என்றெழுதுவது எந்தப்பொருளையுந்தராது.
இப்போதுசொல்லுங்கள், ‘காதல் அணுக்கள் (உடம்பில்) எத்தனை’ என்பது பொருளுடையதாகுமா?
இதையே, ”காதலணுக்கள் (உடம்பில்) எத்தனை’ என்றெழுதினால்,
‘காதலையுடைய அணுக்கள்’
‘காதலுக்கான அணுக்கள்’
‘காதலை தோற்றுவிக்கும் அணுக்கள்’
என்றெல்லாங்கொள்ளலாம்.
இப்படிப்பட்ட இலக்கணத்தையெல்லாம் கற்றேனென்பவர், இப்படி பொருளில் குற்றம்வருமாறெழுதுவது எப்படி? தமிழுலகில் இந்த இலக்கணமெல்லாம் எவருக்கும் தெரியாதென்றகாரனத்தினாலா, அல்லது, இதைப்பற்றியெல்லாம் இவருக்கேதெரியதகாரணத்தினாலா?
@iamkarki
Newtamilcinema.comல் தேனி கண்ணன் என்பவரது கடிதத்தை படித்தேன். வைரமுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை வரிக்கு வரி எழுதிவிட்டு, வைரமுத்து தன் மகன்களை இளையராஜா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் மட்டும் ராஜா என்ன செய்ய வேண்டுமென்பதை நீங்கள் சொல்லாதீர்கள் என்கிறார். வைரமுத்து அடுத்தவரது வயிற்றில் அடித்தார் என்கிறார். ஆனால் மலையூர் மம்பட்டியான் பாடல்களை வைரமுத்து எழுதினால் நாளைக்கே ரெக்கார்டிங் என ராஜா சொன்னதை மட்டும் பாராட்டுகிறார். ஒரு தயாரிப்பாளருக்கு யாரை எழுத வைக்க வேண்டும் என்ற உரிமை இல்லையா?
ஒரு கவிஞன் எந்த இசையமைப்பாளருடனும் சேரலாம். இதில் மட்டும் ஏன் பூதாகாரம் என்கிறார் கண்ணன். இது ஒரு மற்றொரு நிகழ்வு என்பது சரியா? இதில் இவர் பத்திரிக்கைக்காரராம்.
பிரியாணி போட்டார், நோட் புக் கொடுத்தார் என்பது போன்ற இரண்டு நிகழ்வுகளை சொல்லி வரலாறென tag செய்திருக்கிறார். இது போன்ற பல கதைகளை வைரமுத்து சைடிலும் உண்டு வாத்யாரே..
வாலியை விட அனுபவத்தில் சிறந்தவரா என்கிறார்.MSVவிட ராஜாவின் அனுபவம் அதிகமா என கேட்டால் என்ன பதில் சொல்வாரோ!
ராஜாவின் இசை தாண்டி இது போன்ற பிரச்சினைகளை பேசினாக் தேனி கண்ணனுக்கு 32 ஜிபி தேவைப்படும் என்பதுதான் உண்மை. வைரமுத்து, ராஜா என்ற இருவரின் மீதான நம் பிம்பங்களை மறு ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் வரவைக்காத ஆக மொண்ணையான கட்டுரை அது.
நாங்கள் கடவுளின் குழந்தைகள், நீங்க விசிலடிச்சான் குஞ்சுகள் என நடிகர்களின் ரசிகர்களை சொல்லும் பல ட்விட்டர்கள் இது போன்ற மட்டமான கட்டுரையை பகிர்வதும், புகழ்வதும் ஆபாசமாக இருக்கிறது. ராஜாவை கொண்டாடுகிறேன் பேர்வழி என இதையெல்லாம் செய்து.. சரி விடுங்க.. நான் தேனி கண்ணனா? இதை செய்தாயா, செய்யாதே என சொல்ல…
கண்ணன் என்ற காமெடி பீசை எனக்கு அறிமுகப்படுத்தியதுக்காக வேண்டுமானால் அக்கட்டுரையை புக்மார்க் செய்து கொள்கிறேன்.
பொன்முடி சார் ….. ….முத்துவிடம் இருப்பது இலக்கண தமிழ் அல்ல ‘பிழை’ப்புக்கான தமிழ் ……
தேனீ அவர்களுக்கு ஒரு தவிர்க்க முடியாத மடல்;
ராஜா வைரமுத்து பற்றிய உங்கள் மனம் திறந்த மடல் படித்தோம் , நாங்கள் பத்திரிகையாளர்களுக்கு பங்காளியும் அல்ல , வைரமுத்துக்கு வாரிசும் அல்ல, இது அனைத்தும் ஒரு உணர்வுள்ள தமிழன் கருத்து ,, ஒருவரை விமர்சிக்க,விமர்சனம் செய்ய , சரியான தகுதி ஒன்று வேண்டும் அது உங்களிடம் இருக்கா ? கை நீட்டி பல இடங்களில் காசு வாங்கியதால் ,குமுதத்தில் இருந்து கழுத்தை பிடித்து தள்ளப் பட்டவர் நீங்கள் என்பது அனைவரும் அறிந்த கதை , ராஜாவை வைத்து நீங்கள் செய்யும் அரசியல் தான் இப்போது அதிகம்
ராஜாவை பற்றி வைரமுத்து பேசவில்லை என்றால் ,கங்காரு இசை வெளியீட்டு விழாவில் , வெள்ளை மாளிகை வரை நம் புகழ் பரப்பிய ராஜா பல ஆண்டுகள் நலம் பெற்று வாழ வேண்டினாரே அதை மட்டும் ஏன் மறைத்திர்கள் ,இதில் அரசியல் இல்லையா ,நீங்க குறிப்பிட்ட கவிங்கர்கள் ,விஜய் போன ஆட்சியில் செய்த அரசியல் எவ்வளுவுனு உங்களுக்கு தெரியுமா ? சினேகனால் எத்தனை பெண்கள் வாழ்க்கை தொலைந்து போ ய் இருக்குனு உங்களுக்கு தெரியாது , யுவனை வைத்து இனியா வைரமுத்து புகழ் பெற விரும்புவார் ? யாரையோ ஒருத்தரை திருப்தி படுத்த பலரையும் பகடைக்காய் ஆக்கவேணாம் , தேனீ அவர்களை உங்களை நிமிடம் திரும்பி பார்த்து பிறகு யாரை வேணுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் , மக்களுக்கு ராஜாவை தெரியும் ,வாலி ,வைரத்தையும் தெரியும் ,இடையில் அரசியல் உண்டாக்க நீங்கள் யார் ?
இந்த செய்தியை காண்பித்து எவ்வளவு காசு பார்த்திர்கள் என்று மக்களுக்கு தெரியாது ,உங்கள் மன சாட்சிக்கே தெரியும் , அதனால் விமர்சிப்பதை குறைத்து நேர்மையாக எழுத பாருங்கள் , கலகம் பண்ணாமல் இருந்தால் , உலகம் உங்கள் பேரையும் ஒரு நாள் உச்சரிக்கும் ,உண்மையாக இருந்தால் , நன்றி .
,
(எடிட்டர் அந்தணன் அவர்களின் கவனத்திற்கு ,இந்த கடிதத்தை வெளியிடாமல் மறுத்தால் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவிக்கிறோம் )
“மலையை பார்த்து நாய் குரைக்குது.” இப்படி தான் இவர் ஒளருவதை இசைஞானி எடுத்து கொள்கிறார். சமீப காலமாக இவர் (ஆஸ்கார் நாயகனின்) பாடல்கள் எதுவும் கேட்க சகிக்க வில்லை. அதனால் யுவன் கூட சேருகிறார். ஒரு சந்தர்ப்ப வாதியான இவர் வாய் எப்பவுமே இப்படி தான். சும்மா இருக்காது. தேவையில்லாத பேச்சு. இவர் தன சுயநலத்துக்காக யுவன் கூட செருவாரமா, அதே போல இசைஞானி இவர் பையனின் பாட்டுக்கு இசை அமைக்கணுமா? ஆடு பகை குட்டி உறவா?
U R correct Gopal..//ஆடு பகை குட்டி உறவா?//
Raja is a legend. But both of these never thought about the loss the mus ic world faced because of their selfish politics. Both dont deserve any. Raja is little exceptional due to the fact heis ext talented
ராஜாவையும் ரகுமானையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்
எதுக்கு வீண் பேச்சு. கீழே இருக்கும் தளத்தில் சென்று ஒரு background music இருக்கும் அது என்ன படம் என்று கண்டு பிடியுங்கள்
https://youtu.be/GJD8wcP1v2A