நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன்.அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன்.

ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன்.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கரிகாலன் வழங்கும் முகவரி

90களின் ஆரம்பத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட  நடிகர், கரிகாலன். தொடர்ந்து திரையுலகில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், நிலம் மற்றும்...

Close