புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்
மத்திய சென்னை தொகுதியில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த எந்திரம் நாம் வாக்களித்ததை தவறாக காட்டினால் வாக்காளர்கள் புகார் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புகார் செய்யப்பட்டால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பரிசோதனைக்காக வாக்குப்பதிவு செய்யப்படும். இதன்மூலம் அந்த புகார் உண்மையா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். ஒருவேளை வாக்காளர்கள் பொய் புகார் கொடுத்தால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 177-ன் கீழ் பொய்யான தகவல் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.
வாக்காளர்களை அச்சமூட்ட நாங்கள் விரும்பவில்லை, அந்த பிரிவில் தண்டனை என்பது அரிதானது தான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.