மாயமான விமானத்தில் இருந்து வந்த கடைசி வாசகம் என்ன?

229 பயணிகளுடன், சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது அல்லவா?. அந்த விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ‘‘ஆல் ரைட் குட்நைட்” என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘குட்நைட் மலேசியன் 370” என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது.

இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசிய அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது.

இன்னும் 8 நாட்களில் அந்த விமானத்தின் கறுப்பு பெட்டி, பேட்டரி தீர்ந்து விடும் என்பதால் அதை கண்டுபிடிப்பது மிக சிரமம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இலங்கை பணத்தில் விழா? கலந்து கொண்டார் த்ரிஷா!

கனடா போயிருக்கிறார் த்ரிஷா. போகட்டுமே... அதிலென்ன வந்தது? என்பவர்களுக்கு போன விஷயம் என்ன, அதனால் ஏற்பட்டிருக்கும் அடிதடி விபரம் என்ன? என்பதுதான் கட்டம் கட்டி தெரிவிக்க வேண்டிய...

Close