9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு: பாகிஸ்தானில் வினோதம்
குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தில் காவலர்களிடம் குழப்பம் நடந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரியான ரானா ஜப்பார் தெரிவித்தார். இந்தத் தவறுக்காக சப்-இன்ஸ்பெக்டர் காஷிப் அகமது என்பவரைப் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன் மகன் மீது, தன் மீது, மேலும் 25 பேர்கள் மீதும் காவல்துறை பொய்யான வழக்கினைப் பதிவு செய்துள்ளதாக மூசாவின் தந்தை கூறினார். தாங்கள் வாழும் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப்படாததை எதிர்த்து போராட்டம் நடத்தியதே தாங்கள் செய்த தவறு என்று கூறிய அவர், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டினார்.