குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின் நண்பர் உள்ளே போட்டாராம். படமும் தாரை தப்பட்டை முழங்க வெளியானது. ரிசல்ட்? அதான் ஊரறிந்த கதையாச்சே?

இருந்தாலும், இளிச்ச முகத்தோடு இம்போர்ட் ஆகியிருக்கும் லைக்கா அண்டு ஐங்கரன் தயவால் படத்தை பெரும் விலைக்கு தள்ளிவிட்ட பாலா, அவர்கள் போட்ட பணம் முழுசாக திரும்பி வந்து சேர்ந்ததா என்ற கவலைக்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை. நம்ம பணம் லாபத்தோடு சேஃப்டி என்கிற மன நிலையோடு வெளியே நின்று தென்றலை அனுபவித்தாலும், 60 சதவீதம் பணம் போட்ட சசிக்கும் அந்த தென்றல் போய் சேர வேண்டும்தானே? அதுதான் இல்லையாம். அவருக்கான லாபம் இன்னும் சசி வசம் செல்லவேயில்லையாம். கேட்டு கேட்டு பார்த்து பொறுமையிழந்த சசி, இயக்குனர் புகழேந்தியை பஞ்சாயத்திற்கு அழைக்க, அவரும் முடிந்தவரை பேசிப் பார்த்திருக்கிறார். ரிசல்ட்? பூஜ்யத்திலும் பூஜ்யம்.

வேறு வழியில்லாத சசிகுமார், பாலாவின் நேரடி போட்டியாளரும் (வெற்றி தோல்வி, படம் கொடுக்கும் ஸ்டைல் எல்லாவற்றிலும்தான்) பாலாவின் முன்னாள் நண்பருமான அமீரிடம் போய் அழுது புலம்பினாராம். “நான் இருக்கேன்.. கவலைப்படாதே” என்று கூறிய அமீர், சசிக்கு வரவேண்டிய லாபத்தை பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டால் ஆச்சர்யமில்லை என்கிறார் கோடம்பாக்கத்து குலேபகாவலி!

ஒரு காலத்துல ஒண்ணு மண்ணா இருந்தவங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம காசு விஷயத்துல நடந்துகிட்டா, நட்பாவது… உப்பாவது? அட போங்கப்பா….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
PokkiriRaja Trailor Launch Stills

Close