இது அடுத்த கடமை! ஆஸ்கர் ரவிச்சந்திரனை காப்பாற்றுகிறார் ரஜினி?
இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாரை பக்கோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே….. வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியான அடுத்த வினாடியிலிருந்தே வயிற்றெரிச்சலில் குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு குழு. எல்லாருமே ரஜினிக்கு கதை சொல்லிவிட்டு காத்திருந்தவர்கள். அதிலும், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். ஏன்? அவரும் ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருக்கிறாரே?
இதற்கிடையில்தான் இந்த தகவல். சமீபத்தில் தனது சொத்துக்களை வங்கியிடம் அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த இக்கட்டான நிலைமைக்கு கை கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி. சுமார் இருபதாண்டுகளுக்கும் மேலாக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். என்ன காரணத்தாலோ அதை காது கொடுத்து கேட்டும், செயல்படுத்தாமல் இருந்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினியை சந்தித்துவிட்டு வந்தார் ரவிச்சந்திரன். அந்த சந்திப்புக்கான காரணத்தை அவர் கூறிய போது, தெலுங்கில் ஐ படம் வெளிவர ரஜினி சார் உதவினார். அதனால் நன்றி சொல்வதற்காக நேரில் சென்றேன் என்றார்.
ஆனால் இந்த சந்திப்புக்கான அர்த்தம் இப்போது மெல்ல மெல்ல விலகி வருகிறது. சுந்தர்சியிடம் கதை கேட்டு, அதிலும் நடிக்கலாம் என்று நினைத்திருந்த ரஜினி, அதை செயலாக்கப் போகிறார். ஒருபுறம் அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்திலும், இன்னொருபுறம் சுந்தர்சி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறாராம். ஒரு படம் பொங்கலுக்கு, ஒரு படம் தீபாவளிக்கு என்றெல்லாம் திட்டமிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத அதே நேரத்தில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் எந்த தீபாவளிக்கு? எந்த பொங்கலுக்கு? என்பதுதான் சுற்றிவிட்ட பம்பரம் போல தலைசுற்ற வைக்கிறது.
தலைவரின் படம் வருகை தான் எங்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம்.
கடவுளை கண்டவரும் இல்லை சூப்பர் ஸ்டாரை வென்றவரும் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை தெரியாதவர்கள் இன்னும் பிறக்காதவர்கள். இந்த பூமி இந்த காற்று இந்த ஆகாயம் தமிழர் இனம் உள்ளவரை கலை கடவுள் ரஜினி அவர்களின் புகழ் நிலைத்து இருக்கும்.
நல்ல செய்தி. மறுபடியும் தலைவரின் அற்புத நடிப்பாற்றலை காண வாய்ப்பு கிடைக்கபோகிறது.
திரை உலகின் ஆபத்பாந்தவன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான்.
தலைவா அரசியலுக்கு வாருங்கள். தமிழகத்தை புனித படுத்த அரசியலுக்கு மனித புனிதர் ரஜினியை விட்டால் வேறு ஆள் ஏது ?
வாழ்க தமிழ் நாடு வாழ்க பாரதம்
இந்திய திரைஉலகின் ஒரே ஆபத்பாந்தவன் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவர் தான்.