ஜெ.வுக்கு ரஜினிகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி

தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்த அம்மா ஜெ.வின் மறைவு, நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது. நாடெங்கிலும் இருந்து திரண்டு சென்னைக்கு வந்த அதிமுக தொண்டர்களால், ஜெ.வின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி மண்டபம் கண்ணீர் கடலால் தத்தளித்து வருகிறது. அரசியல், திரையுலகம், இலக்கிய உலகம் என தமிழகத்தின் முக்கிய விஐபிகள் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சுமார் 11.30 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ராஜாஜி மண்டபத்திற்கு நேரில் வந்தார் ரஜினிகாந்த். ஜனக்கடலில் நீந்தி வந்தவருக்கு போலீஸ் அதிகாரிகள் கடும் பாதுகாப்போடு ஜெ.உடல் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். தன் தலையை அப்படியே சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கிய ரஜினி, தன் இரு கண்களையும் துடைத்துக் கொண்டார். பொங்கி வந்த அழுகையை அவர் அடக்கிக் கொண்டதை கவனிக்க முடிந்தது.

பின் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் தோள்களை பிடித்து தன் வருத்தத்தையும் ஆறுதலையும் அவருடன் பகிர்ந்து கொண்டார். பின்பு அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அரங்கத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

https://youtu.be/JILd4JDlv1o

2 Comments
  1. Swathi says

    மிர்ச்சி பாலாஜி, ரஜினி இவன் மாறி பச்சோந்திகளுக்கு அம்மாவ கடைசியா பார்க்க அனுமதி? இவனுகலுக்கு பதிலா எத்தனை தாய்மார்கள் கதறிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அம்மாவை தரிசிக்க வாய்ப்பு கொசுத்திருக்கலாம்

  2. Swathi says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கண்டிப்பாக அரசியல் களம் காண வேண்டும். தனியாக கட்சி துவங்கி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் அவர் தான் அடுத்த தமிழக முதல்வர். தமிழகம் ஒரு நல்ல நேர்மையான தலைவனை காண ஏங்கி கொண்டு இருக்கிறது. அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தான் சரியான தேர்வு .
    தலைவா வாருங்கள். புரையோடி போயிருக்கும் அரசியல் சாக்கடையை புனிதப்படுத்த மக்கள் அரசியல் காண வாருங்கள்.

Reply To Swathi
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
அம்மா வளர்த்த ஈமுக் கோழி! ஜெ. பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப்...

Close