வேந்தர் மூவிசுக்கு ரஜினி கால்ஷீட் தருவதாக சொல்லவேயில்லை! திருப்பூர் சுப்ரமணியன் மறுப்பு
இன்னும் ஓராண்டானாலும் இழுத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கிறது லிங்கா விவகாரம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், ரஜினிக்கும் இடையே தூதுவராக செயல்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடந்தது என்ன? என்று கூறினார்.
‘படம் வெளியான மூன்றாவது நாளிலிருந்தே சிங்காரவேலன் தரப்பினர் ரஜினி பற்றியும், படத்தை பற்றியும் அவதூறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். விநியோக துறைக்கு புதிதாக வந்தவர்கள் என்பதாலும், எந்த சங்கத்திலும் அவர்கள் உறுப்பினர்கள் இல்லை என்பதாலும் இந்த விவகாரத்தில் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதற்கப்புறம் அவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு என்னை அழைத்த ரஜினி, இந்த விவகாரத்தில் உண்மையில் நடப்பதென்ன என்பதை விசாரித்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அதற்கப்புறம் நான் கணக்கு வழக்குகளை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் வாங்கி ரஜினி சாரிடம் கொடுத்தேன். அவர்களுக்கு 33 கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்ததும் உண்மைதான் என்று எடுத்துக் கூறினேன்’.
‘தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் லிங்கா படத்தின் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்பதால், சிறிய அளவு நஷ்ட தொகையை திருப்பி தருவதாக ஒப்புக் கொண்டார். முதலில் ஐந்து கோடி தருவதற்கு மட்டுமே ஒப்புக் கொண்டவரை, மெல்ல மெல்ல 12.5 கோடி வரை திருப்பி தருவதாக ஒப்புக் கொள்ள வைத்தோம். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 6.26 கோடி பணம் மட்டுமே கிடைத்தது. இதை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டோம். இன்னும் 6.24 கோடி பணம் வரவில்லை. வந்தவுடன் விநியோகஸ்தர்களுக்கு பிரித்துத் தந்துவிடுவோம். இதற்கிடையில் ரஜினி சார் வேந்தர் மூவிசுக்கு கால்ஷீட் தருவதாக நான் சொல்லவேயில்லை. அவர் அப்படி சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? நான் பேசிய பல விஷயங்களை ஆடியோவாக வெளியிடும் சிங்காரவேலன், இப்படி நான் சொன்னதாக சொல்கிறாரே… அதையும் வெளியிட வேண்டியதுதானே?’ என்று கேள்வி எழுப்பினார். ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் மீதி பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்துவிடுவோம்’ என்றார் அவர்.
சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் சிங்காரவேலன் தலைமையில் நாளையும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. அங்கு என்ன பூதத்தை கிளப்புவார்களோ?
சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம்—-
லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர். “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.
தலைவர் ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அற்ப பயல்களுக்கு சுளுக்கு எடுப்போம். எங்கள் இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வம்புக்கு இழுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தெய்வத்தின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.
சிங்காரவேலன் யார்..!?? தன்னை பிரபலபடுத்திக்கொள்ள ரஜினியை பயன்படுத்த்தி கொள்ள நினைக்கிறார்..! ஒரு தொழிலில் லாபம்.. நஷ்டம் இரண்டுமே உண்டு..??! லாபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.. கவனிக்காவிட்டால் நஷ்டம் பெரிதாகும்..! ஆனால் லிங்கா படம் வெளியான இரண்டே நாளில் படம் வசூல் குறித்து தப்பான கருத்தை உருவாக்கி பணம் பறிக்கும் நோக்கத்தோடு இன்றுவரை பரப்பி வருவது எந்த விதத்தில் ஞாயம்..! ஆனால் ரஜினி இதை பொருட்படுத்தாமல் நஷ்டத்தை மூன்றாவது நபர்கள் வைத்து கொடுத்து வந்த போதிலும் உன்னிடம் இவ்வளவு சொத்து இருக்கறது..?? சம்பாதிக்கிறாய்,,?! எனக்கு உன் உழைப்பை கொடு என கேட்பது கேவலம்..??! கோச்சடையான் மூலம் அடைந்த நஷ்டம் எனதல்ல என விட்டுவிட முடியுமா..! சிங்காரவேலனை போன்றோர் கொள்ளையடிக்க ரஜினியை வைத்து படமெடுக்க நடத்தும் நாடகம்..?????????????
தலைவா வாருங்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.
இந்திய திரைஉலகின் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
2014–ஆம் ஆண்டின் அதிக வசூல் சாதனை செய்த படம் லிங்கா தான். சந்தேகம் இருந்தால் பாக்ஸ் ஆபீஸ் collecton ரிப்போர்ட்-ஐ பார்க்கவும்.