வெறுப்பா இருக்கு ரஜினி சார்!
சூப்பர் ஸ்டார் பட அறிவிப்பு வந்தாலே குஷி ஆகிவிடுவோம். தினத்தந்தியில் வந்திருக்கும் நாலுவரி செய்தியைப் படிப்போம். அடுத்து தினகரனைத் தேடி ஓடுவோம். அங்கேயும் இதே தான் எழுதியிருக்கும். ஆனாலும் ஆர்வமாய்ப் படிப்போம். விகடன் & குமுதத்திற்கு காத்திருப்போம். அதே நாலுவரி செய்தியை நாலுபக்கத்திற்கு இழுத்து சொல்லியிருப்பார்கள், தலைவனின் ஸ்டில்ஸ் போனஸ். அதையும் படித்து புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ரஜினி பட அறிவிப்பைப் பார்த்து கோபமும் வெறுப்பும் அருவறுப்பும் அடைந்து உட்கார்ந்திருக்கிறேன். இந்த போஸ்டர் மீதே வாந்தி எடுத்துவிடுவோனோ என்று பயமாக இருக்கிறது.
இன்றைய நிலையில் ரஜினி ரசிகர்கள் இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள். ஒன்று, அவர் அரசியலுக்கு வந்து மக்கள் சேவ்வை(!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் (ரஜினி புகழை வைத்து சம்பாதிக்க நினைக்கும் கனவான்களும் இதில் அடக்கம்). இரண்டாவது, ’சினிமாவே போதும் தலைவா…அரசியல் வேண்டாம்.மரியாதையோட நிம்மதியா வாழ்ந்திட்டுப் போ’என்று நினைக்கும் என்னைப் போன்ற ரசிகர்கள். எங்கள் குரூப் தான் மெஜாரிட்டி என்பது என் யூகம்.
அந்தவகையில் பார்த்தால், ரஜினியின் புதுப்பட அறிவிப்புக்கு நான் சந்தோசப்படத்தான் வேண்டும். சன் டிவி & கார்த்திக் சுப்புராஜ் காம்போ எனும்போதே ஒரு புதுமையான ரஜினி படமாக இருக்கும் என்பதால், குதூகலிக்க வேண்டும். ஆனாலும் நொந்துபோய் அமர்ந்திருக்கிறேன்.
’போர் வரும்போது பார்ப்போம்’ என்று ஆரம்பித்து ’களத்தில் நிற்போம். கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்’ என்று சொல்லியாகிவிட்டது. அது தேவையற்ற வேலை என்றாலும், சொன்னதற்காகாவாவது ஏதாவது உருப்படியாகச் செய்வார் என்று பார்த்தால், அடுத்த பட அறிவிப்பு வருகிறது.
பிஜேபியின் பி டீம், வாடகைப் புகழ், சுப்ரீம் கோர்ட் கடனை திருப்பித் தர கெடு, தைரியலட்சுமின்னா லைட்டா பயம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு முட்டுக்கொடுத்து, இணையத்தில் எத்தனை அடி விழுந்தாலும் ‘எங்க தலைவன் வருவான்யா’ என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகவே இந்த புதுப்பட அறிவிப்பை பார்க்கிறேன்.
ஆனால் இது ரசிகர்களுடன் மட்டும் முடிகிற விஷயம் இல்லை என்பது தான் எனது புலம்பலுக்குக் காரணம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கேலி செய்கிற விஷயமாகவே இதைப் பார்க்கிறேன்.
‘போர் வரும்போது வருவேன்…நான் அரசியலுக்கு வரணும்னா ஒரு கோடிப்பேர் சேருங்கள். முடிந்தால் ’எனக்குத் தான் ஓட்டு’ என்று ஒரு பத்திரத்தில் எழுதி கையெழுத்துப்போட்டு, உத்தரவாதம் கொடுங்கள். நான் வரணும்னு 25 வருசமா கெஞ்சுறீங்கள்ல..அப்போ கன்ஃபார்மா ஒரு கோடி ஓட்டு விழுந்து, ஸ்ட்ரெய்ட்டா சி.எம் சீட்ல என்னை உட்கார வைப்பீங்கன்னா, நான் வர்றேன். அதுவரை…..நாட்டை விடுங்கள்..கட்சியை வளர்க்கக்கூட எதுவும் செய்யமாட்டேன்’ என்பது என்ன வகை அரசியல் என்றே எனக்குப் புரியவில்லை.
மக்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்று ரஜினிக்கு எடுத்துச் சொல்ல ஒரு யோக்கியன்கூடவா அவர் அருகே இல்லை? ’போராட மாட்டேன்..ஐஞ்சு பைசா செலவளிக்க மாட்டேன்..உங்களுக்கு வேற நாதியில்லை..ஆகவே என்னை சி.எம் ஆக்குங்கள்’ என்று சொன்னால், ஒரு சதவீதம் சூடு சொரணை உள்ள கூட்டம்கூட உங்கள் பின்னால் நிற்காது.
1996ல் ரஜினியின் பேட்டியைப் பார்க்க, எங்கள் ஊர் பஞ்சாயத்து டிவி முன் ஊரே திரண்டிருந்தது. இன்று, எல்லா நியூஸ் சேனலில் லைவ் போட்டாலும் பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. தினகரனுக்கு இருக்கும் ஆதரவுகூட ரஜினிக்கு இல்லை. முன்பு எப்போ வருவார் என்று கேட்டவர்கள், இன்று ’இப்போ ஏன் வர்றார்?’ என்று கேட்கிறார்கள். ‘நல்லா சம்பாதிச்சு முடிச்சிட்டு, இனி சினிமாவில் சம்பாதிக்க வழியில்லை என்பதால் தான் வருகிறாரா?’என்று பச்சையாகவே பாமர மக்கள் கேட்கிறார்கள். உண்மையிலேயே அரசியல் ஆர்வம் இருந்தால், இந்த எண்ணத்தை மாற்றுவது எப்படி என்று தான் ரஜினியும் அவரின் போர்ப்படை(!)யும் யோசிக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் புதுப்பட அறிவிப்பு வருகிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கேணப்பய கூட்டம் என்று நினைக்கிற ஒருவரால் தான் இந்த காரியத்தைச் செய்ய முடியும். ரஜினியிடம் இதை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
ஒன்று, எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று ஒத்துக்கொண்டு சினிமாவில் தொடர வேண்டும். அல்லது, அரசியல் தான் என்ற முடிவுடன் களத்தில் இறங்க வேண்டும். யாரோ அவரின் கழுத்தைப் பிடித்து அரசியலில் தள்ளுவதாக உணர்கிறேன். அது பிஜெபியாக இருக்கலாம் அல்லது அவரின் குடும்பமாக இருக்கலாம். இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கப்போவது என் தலைவன் தானே?
அதைப் பொறுக்க முடியாமல் தான் இந்தப் பதிவு!
இன்னும் என்னெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ!!!
(செங்கோவி குரு முகநூல் பதிவிலிருந்து…)
WELCOME THALAIVAA.
IN INDIAN CINIEMA, SUPER STAR RAJINI IS A KING
IN POLITICS, HE IS KING OF TAMILNADU
LONG LIVE OUR GOD RAJINI
Since SUN pictures paying huge money to this super star, DMK Heads must have approved this project. So thalaivar rajini arasiyalukku varamaataan yennathu DMK virku theriyum.
அந்தணன் சார்,
இந்த நியூ தமிழ் சினிமா இணையதளம் சூப்பர்.
தயவு செய்து இந்த மாதிரி facebook ல இருந்து அப்டின்னு போடாதீங்க ப்ளீஸ்.
இந்த பதிவில் வந்த எதுவும் உண்மை இல்லை.
புது பட அறிவிப்பு –
ரசிகர்களுக்கு ஹாப்பி. ரசிகர் அல்லாதவர் இதை பற்றி எந்த கருத்தும் இல்லை. இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை.
இது நண்டு கதை போன்றது. சிலருக்கு இது தான் வேலை.
ஸோ இதெல்லாம் போட்டு யாரும் இந்த இணையத்தளம் தப்பாக பார்க்க கூடாது.
உங்களுக்கு தெரியும் உண்மை.
நன்றி
விஜய்
உங்ளுக்கு கமல பிடிச்சிருந்தா அவரை பத்தி எழுதுங்க அதவுட்டுட்டு ரஜினிய குறைவா பதிபிட்டு எழுதுவது உங்க கெட்ட எண்ணத்தையே காட்டுது
இந்தியன் 2 யல்லாம் வரலாம் ஆனா ரஜினி படம் வந்தா மட்டும் பொங்கவேண்டியது
ஒரு ரஜினி ரசிகன் இப்படி எழுத வாய்பில்லை ..
better luck next time sir
கமலை நம்பி போனது உனது தவறு. கமல் ஒரு நம்பிக்கை துரோகி என தெரியாதா ?
வாணி, சரிகா இவர்களுக்கு, கமல் நம்பிக்கை துரோகம் செய்தது தெரியாதா ???
கமல் ஒரு மோசடி பேர்வழி என தமிழ் மக்கள் அனைவருக்குமே தெரியுமே !!!
நல்ல காலம், உனது மகள் தப்பித்தாள்.அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து எஞ்சிய வாழ்க்கையை அமைதியாக கழிக்கவும் .
கமல் ஆதரவாளர்கள் அனைவரும் ஏமாளிகள். ஏமாளிகள் இருக்கும் வரையில் கமல் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசுவான்.
தமிழக மக்கள் கமலின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
செங்கோவி பதிவு எடுத்து போட்டுட்டீங்க! ஓகே இது அவரோட கருத்து.
உங்களுக்கு என்னங்க ஆச்சு?! தொடர்ச்சியா ரஜினியை பற்றிய எதிர்மறை செய்தியா போட்டுடுட்டு இருக்கீங்க.
தட்ஸ்தமிழ் மொத்தமா மாறிடுச்சு! இதாவது 2000 – 2004 ஆண்டுகளில் ரஜினி எதிர்ப்பு என்று இருந்தது பின் மாறி தற்போது திரும்ப ரஜினி எதிர்ப்பு என்ற கண்மூடித்தனமான நிலையில் இருக்கு.
விகடன் எவ்வளோ பெரிய பாரம்பரியமான நடுநிலை பத்திரிகை. அவர்களே முழுக்க முழுக்க கமல் ஜால்ரா பத்திரிகை ஆகி விட்டார்கள்.
இப்ப நீங்களும்! இதற்கு என்ன காரணம் என்று எனக்கு முழுவதும் புரியவில்லை.. ஓரளவு புரிந்தாலும்.
உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என்ன நடக்குது என்று!
எல்லோரும் தலைவருக்கு எதிரா திரும்புறீங்க.. விடுங்க எங்க பக்கம் ஆண்டவன் இருக்கான். பார்த்துப்பான்.
என்றாவது ஒரு நாள் இது போல எழுதி வந்ததற்காக நினைத்து கூசி போவீர்கள். நடக்கும்.
நல்லா இருங்க.