அது ஊதாவே இல்ல. ஃபுளு. இதை கூடவா கவனிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டால், பாட்டு எடுக்கும்போதே எனக்கும் அந்த டவுட் வந்துச்சு. ஆனால் புளூவைதான் நம்ம ஊர்ல ஊதான்னு சொல்லுவோம் என்றார்களாம் அப்போது. ‘ஒருவழியாக சமாதானம் ஆகிதான் நடிச்சேன். ஆனால் அது இவ்வளவு பெரிய கருத்துப்புரட்சியை ஏற்படுத்தும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலே பாஸ்’ என்றார் பரிதாபமாக.
‘வேல வெட்டி இல்லேன்னா கருப்பட்டிக்கு கூட கலர் அடிப்பாங்க நம்ம ஊர்ல. விடுங்க பாஸ்’ என்ற பிறகுதான் நிம்மதியே வந்தது அவரது முகத்தில்.