அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லேன்னு ஒரு அறிக்கை கொடுங்க! அஜீத்தை வற்புறுத்துகிறதா நடிகர் சங்கம்?

அஜீத்திடமிருந்து நடிகர் சங்கத்திற்கோ, அல்லது நடிகர் சங்கத்திடமிருந்து அஜீத்திற்கோ எவ்வித செய்தி போக்குவரத்தும் இல்லாமலிருந்தது. அந்த நிலைமை இப்போதும் தொடர்கிறதா என்றால், “இல்லை” என்று காதை கடிக்கிறது கோடம்பாக்கம். இன்னும் சில தினங்களில் சென்னையில் நடைபெறவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள அஜீத் வர மாட்டார் என்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அஜீத்திற்கு ஆதரவாக செயல்படும் அவரது ரசிகர்கள், “யாரும் இந்த கிரிக்கெட் போட்டிக்கு போகாதீங்க. ஸ்டார் கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள்” என்று தகவல் பரப்பி வருகிறார்கள்.

இன்னும் ஒரு படி ஜாஸ்தி கோபத்துடன் விஷாலை கடுமையான வார்த்தைகளால் நேரடியாக தாக்கியும் வருகிறார்கள். ஏதோ ரசிகர்கள் தங்கள் தலைவர் மீதிருக்கிற அபிமானத்தினால் இப்படி செய்வதாக முதலில் கண்டு கொள்ளாமலிருந்த நடிகர் சங்கம், நட்சத்திர கிரிக்கெட்டை புறக்கணியுங்கள் என்று ஆணித்தரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததும் உஷாராகியிருக்கிறதாம். அஜீத்தே தன் ரசிகர்களை உசுப்பிவிட்டு இப்படி பேச வைப்பதாகவும் ஒருபக்கம் செய்திகள் வருவதால், இந்த பிரச்சாரத்தை இன்னும் ஆணித்தரமாக பரப்பி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்த நடிகர் சங்கம் அஜீத்தை தொடர்பு கொண்டு, “இப்படி பரப்பப்படுகிற தகவலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்றும், “அப்படியொரு தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறவர்கள் தன்னுடைய ரசிகர்களே அல்ல” என்றும் ஒரு அறிக்கை வெளியிட கேட்டு வருகிறார்களாம்.

“இப்படி அவரை கட்டாயப்படுத்துவது சரியல்ல” என்று அஜீத்திற்கு ஆதரவாக சில சினிமா பிரமுகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் எதற்கும் அசைந்து கொடுப்பதில்லை என்ற முடிவில் மட்டும் உறுதியாகவே இருக்கிறாராம் அஜீத்.

‪#‎AjithKumar‬ ‪#‎AjithFans‬ ‪#‎Vishal‬ ‪#‎VishalFans‬ ‪#‎Naasar‬ ‪#‎NadigarSangam‬ ‪#‎Donation‬ ‪#‎StarCrcket‬Slide
Comments (8)
Add Comment
  • roja

    அஜித் ரசிகர் மன்றம் இல்லை என்பது சரி .ஆனால் ஒரு ஸ்டார் நடிகர் தன்னை பத்தி செய்தி வரும் போது,மறுப்பு தெரிவுப்பது தான் முறை.
    அமைதி எல்லா நேரமும் உதவாது .பெரிய இடத்தில இருக்கும் நடிகர் வெளியே வந்து பேச வேண்டும்

    • ராஜா

      ஆம் சரி அப்படி செய்து இறக்கலாம் அஜித்

  • விவேக் காயாமொழி

    ரோஜா அவர்களே..!!
    இதற்கு காமராஜர் ஒருமுறை சொன்ன விளக்கம் பொருத்தமாக இருக்கும்.
    “எனக்கு யானைக்கால் வியாதி என்று விசமிகள் விமர்சனம் செய்தால், ஒவ்வொருவரிடமும் சென்று என் காலை தூக்கி காண்பிக்க வேண்டிய தேவை இல்லை”.
    இன்னும் தேர்தல் ஆட்டம் பாக்கி உள்ளது.
    அவர் ரசிகர்கள் என்று சொல்லி ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்து விளம்பரம் செய்வார்கள். இன்னும் எதெதற்குத்தான் அவர் விளக்கம் சொல்லி அறிக்கை விடுவது?
    மேலும் அவ்வாறு அறிக்கை விட்டால் அது அதிகப்பிரசங்கித்தனம் ஆகும்.
    பொதுவாக இப்பொழுது மக்கள் இவர்களின் கூத்துக்களை வெறுப்பதர்க்கு காரணம் தமிழக வெள்ள பாதிப்பின்போது “இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, அதனை கவனிக்க அரசு உள்ளது” என மனசாட்சி இல்லாமல் சங்க செயலாளர் கூறியது தான்.

    • roja

      தயவு செய்து சொல்லுங்கோ நடிகர்கள் பொது பிரச்னை யில் என்ன செய்ய வேண்டும் என்று??/
      என்னக்கு தெரிந்த வகையில் பொது பிரசனை யில் அரசியல் செய்ய இல்லை என்று தான் சொன்னர்கள்ளே தவிர வேறு இல்லை.உண்மை ஒண்டா கூடி உண்ணாவிரதம் இருந்தா காணுமா அதை மீடியா கவர் பண்ணும் இதுவா நமக்கு தேவை
      உண்ணாவிரதம் இருந்தால் காணுமா? உன்ன விரதம் இருந்தா நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கு என்று சொல்லுவிங்களா?
      காவேரி உண்ணா விரதம் ,ஈழ தமிழ் உண்ணா விரதம் நடிகர் இருந்தா சரியா?கருணாநிதியும் தான் உண்ணா விரதம் இர்ருந்தார்
      அடிப்படை பிரச்னை என்ன அரசாங்க கடமை என்ன என்று சொல்லுங்கோ
      உன்னவிரதக்கு வர வென்றும் வரா விட்டால் அவர்கள்ளுக்கு பொறுப்பு உணசி இல்லை வந்தால் இருக்கு என்பது சரியா?
      வெள்ள பிரச்னையில் நடிகர் சங்கம் ஒன்றும் செய்ய வில்லையா
      எத்தனை நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்தார்கள்?
      ஒரு பொது பிரச்னையில் அரசியல் ரீதியில் அணுக மாட்டோம் என்று தான் சொன்னார்கள் தவிர பல நடிகர் தமது வசதிக்கு ஏற்ப உதவுறாங்க .
      ஜெயலலிதா ஜெயில் இர்ருக்கும் போது உண்ணா விரதம் இருந்தார்கள் அது சரியா?
      பொது பிரச்னையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதன் உள்நோக்கம் வேறு அது மக்களுக்கு உதவ மர்ட்டோம் என்பது அல்ல தெளிவாக விளங்கி கொள்ளவும்
      எல்லா நடிகரும் ஒன்றாக காசு கொடுக்க மட்டங்க என்பதே உண்மை எலலர்ரையும் வற்புறுத்த முடியாது.நினைத்துப் பிடித்து இருந்தால் பாருங்கள். பிடிக்காவிட்டால்விட்டுவிடுங்கள். இதில் கொந்தளிக்க ஏதும் இல்லை.
      நடிகன் நடிக்குரன் enertain பண்ணுறன் அவளவுதான்.

      எந்த சங்கமமும் பொது நிகழ்ச்சி மூலம் தான் காசு எடுக்குது
      உங்கள் கருத்து பார்வையை நான் மதிக்குறேன் ஆனால் என்னது கருத்து

    • roja

      தயவு செய்து சொல்லுங்கோ நடிகர்கள் பொது பிரச்னை யில் என்ன செய்ய வேண்டும் என்று??/
      என்னக்கு தெரிந்த வகையில் பொது பிரசனை யில் அரசியல் செய்ய இல்லை என்று தான் சொன்னர்கள்ளே தவிர வேறு இல்லை.உண்மை ஒண்டா கூடி உண்ணாவிரதம் இருந்தா காணுமா அதை மீடியா கவர் பண்ணும் இதுவா நமக்கு தேவை
      உண்ணாவிரதம் இருந்தால் காணுமா? உன்ன விரதம் இருந்தா நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கு என்று சொல்லுவிங்களா?
      காவேரி உண்ணா விரதம் ,ஈழ தமிழ் உண்ணா விரதம் நடிகர் இருந்தா சரியா?கருணாநிதியும் தான் உண்ணா விரதம் இர்ருந்தார்
      அடிப்படை பிரச்னை என்ன அரசாங்க கடமை என்ன என்று சொல்லுங்கோ
      உன்னவிரதக்கு வர வென்றும் வரா விட்டால் அவர்கள்ளுக்கு பொறுப்பு உணசி இல்லை வந்தால் இருக்கு என்பது சரியா?
      வெள்ள பிரச்னையில் நடிகர் சங்கம் ஒன்றும் செய்ய வில்லையா
      எத்தனை நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்தார்கள்?
      ஒரு பொது பிரச்னையில் அரசியல் ரீதியில் அணுக மாட்டோம் என்று தான் சொன்னார்கள் தவிர பல நடிகர் தமது வசதிக்கு ஏற்ப உதவுறாங்க .
      ஜெயலலிதா ஜெயில் இர்ருக்கும் போது உண்ணா விரதம் இருந்தார்கள் அது சரியா?
      பொது பிரச்னையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதன் உள்நோக்கம் வேறு அது மக்களுக்கு உதவ மர்ட்டோம் என்பது அல்ல தெளிவாக விளங்கி கொள்ளவும்
      எல்லா நடிகரும் ஒன்றாக காசு கொடுக்க மட்டங்க என்பதே உண்மை எலலர்ரையும் வற்புறுத்த முடியாது.நினைத்துப் பிடித்து இருந்தால் பாருங்கள். பிடிக்காவிட்டால்விட்டுவிடுங்கள். இதில் கொந்தளிக்க ஏதும் இல்லை.
      நடிகன் நடிக்குரன் enertain பண்ணுறன் அவளவுதான்.
      எந்த சங்கமமும் பொது நிகழ்ச்சி மூலம் தான் காசு எடுக்குது
      உங்கள் கருத்து பார்வையை நான் மதிக்குறேன்

    • roja

      அமைதியாகவே இருக்கட்டும். அறிக்கை வேண்டாம்
      உங்களுக்கு சங்க செயலர்ளர் ராய் பிடிக்கவில்லை என்பது உண்மை.
      என்னை பொருத்தமட்டில் எல்லோருடைய கருத்தும், அதை செயலர்ளர் வெளியே கூறுகிறார் அவளவுதான்.
      பார்வை வேறு, விருப்பு வெறுப்பு வேறு .நன்றி நண்பா.
      உங்கள் எழுத்து தமிழ் நடை அழகு .வாழ்த்துக்கள் .

  • RASIGAN

    theri promotion kaga ajith pattri thevai illtha prachanaigalai iluthu vijay vedikai paarkirar endru solalama …rasigargalai thundi vidugirar endru entha aatharathil eluthugireergal …konja naatkalai anaithu mediakalum inda prachanai kayil eduthukondu ore mathiri ajith ku ethiraga thirumbi irupathi sandegathai elupugirathu..

  • விவேக் காயாமொழி

    இதில் தேவையில்லாமல் விஜையை இழுக்க வேண்டியதில்லை நண்பா…
    சங்க தேர்தல் நடந்தது முதலாக அஜித்தை உரசிப்பார்க்கின்றனர்.
    அஜித் இரு அணிகள் க்கும் ஆதரவு அளிக்கவில்லை.
    இன்னும் சொல்லபோனால் ஓட்டே போடவில்லை.
    இவர்களின் செயல்பாடுகள் பிடிக்காததே அதற்கு காரணம்.
    தனிமனித தாக்குதல்,சுயவிளம்பரம்,வெளி நபர் தூண்டுதல் நிறைந்த சங்க தேர்தலை அஜித் விரும்பாததே உண்மையான காரணம்.
    இப்பவும் அஜித் எதுவுமே சொல்லாத நிலையில் அவர் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று செய்தி வெளியிட்டது யார்?
    இதுபோன்ற சில்லறை அரசியல் செய்து, லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சகோதரனாக நினைக்கும் ஒரு முகமூடி அணியாத நல்ல மனிதனை அவமதிப்பு செய்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு
    ஒரு சிறிய வேண்டுகோள்.
    இந்த செய்தி பரவ பரவ பொதுமக்கள் இவர் சொல்வது நியாயம் தானே என உங்களுக்கு எதிராக பேசுகின்றனர்.
    ஆதலால் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்ப வேண்டாம்.
    அது உங்கள் முகத்தில் தான் தெறிக்கின்றது.