காவேரிக்கு நடுவே வேணும்னா கபினி அணை கட்டலாம். கலையுலகத்திற்கு நடுவே அணை கட்டுவதற்கு இன்னும் ஒருத்தரும் பிறக்கல! அந்த நம்பிக்கைக்கும், தாராள மனசுக்கும் சமீபத்திய உதாரணம்தான் அல்லு அர்ஜுன். தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவரான இவருக்கும் தமிழ்சினிமா ஏரியா பக்கம் தாறுமாறான பாசம். சில வருஷங்களுக்கு முன்பே லிங்குசாமியிடம் கதை கேட்டு, வண்டிய ஓட்டுங்க என்று லைசென்ஸ் கொடுத்துவிட்டார்.
ஆனால் நிலைமை படு மோசம் ஆனதால், சொல்லொணா துயருடன் விலகிக் கொண்டார் லிங்கு. இருந்தாலும் சில வருஷங்களுக்குப் பின் அல்லு அர்ஜுனின் ஆசை, என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் நிறைவேறிவிட்டது.
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படம், அல்லு அர்ஜுனுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடத்தை பிடித்துக் கொடுக்கும் என்று நம்புகிறது கோடம்பாக்கம். அதற்கு ஏற்றார் போல, தமிழ்நாட்டில் சுமார் 200 தியேட்டர்களை ஒதுக்கி, ‘வாங்கண்ணே வாங்க’ என்று வரவேற்றிருக்கிறார்கள்.
தமிழில் மட்டுமல்ல, ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரப்போகிறது. அர்ஜுனின் குறி எப்போதும் தப்பியதில்லை!