யாரோ ஒரு ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்?

‘நடிகராயிருப்பதே நாட்டுக்கு கேடு’ என்று நினைக்கும் ஒரு கூட்டம், கட்சி… அமைப்பு… கொள்கை… கோஷ்டி என்ற பெயரில் வளர்ந்து கொண்டிருப்பதை எப்படிதான் சகித்துக் கொள்வதோ தெரியவில்லை. ‘வல்லமை தாராயோ’ என்ற படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் குஷ்பு. அங்கு ஒரு சாமி சிலை. அது தெர்மாக்கோல் மூலம் செய்யப்பட்ட செட். அதுவும் அன்றுதான் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தன் செருப்புக் காலுடன் ஸ்டேஜ் ஏறிவிட்டார் குஷ். அவ்வளவுதான்… தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், விஷக்கடி மருத்துவர் என்று சகலருக்கும் தகவல் சொல்லி, ஸ்பாட்டுக்கு வரவழைத்துவிட்டது ஒரு வெட்டிக் கூட்டம்.

அதற்கப்புறம் பல நாட்கள் அவர் அலைகழிக்கப் பட்டார். போலீஸ் கம்ப்ளைன்ட், பொதுக்கூட்டங்களில் வசவு என்று வாங்கிக் கட்டிக் கொண்டார். அப் பிரச்சனையிலிருந்து அவர் வெளிவருவதற்குள், செருப்பு விஷயம் போய் கற்பு விஷயம் மாட்டிக் கொண்டது. கடைசியில் பாதுகாப்புக்காக ஒரு கட்சியில் இணைந்து, அலைகழித்தவர்களையெல்லாம் அதிகாரபூர்வமாக சுளுக்கெடுத்தார் குஷ்பு. அவர் தனி மரமாக இருந்தபோது கல்லெறிந்தவர்களெல்லாம் கட்சிப் பிரமுகர் ஆனவுடன் பொன்னாடை போர்த்தினார்கள். நாட்டு நடப்பு நன்றாக புரிந்தது குஷ்புவுக்கு.

இனி புரிய வேண்டியது விஜய்க்குதான் போலிருக்கிறது. யாரோ ஒரு விஜய் ரசிகர், தன் ஆர்வ மிகுதியால் ஒரு போஸ்டரை வடிவமைத்தார். அதில் ஷு காலுடன் கையில் சூலத்தை வைத்துக் கொண்டு கூத்தாடுவது போல விஜய்யை படைத்திருந்தார் அவர். அவ்வளவுதான். லெட்டர் பேட் கட்சியான இந்து மக்கள் முன்னணி விஜய் மீது காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறது. என்னவாம்? அவர் இந்து கடவுளை அவமானப்படுத்திவிட்டாராம். இதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

ஐயா.. பக்கிகளே. நாட்டில் ஒருவேளை கூட விளக்கேற்ற முடியாமல் லட்சோப லட்சம் கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. போய் அதை கவனித்தால், புண்ணியமாவது கிடைக்கும்! விஜய்யை வாரினால் என்ன கிடைக்கும்? நாலு சொட்டு போலியோ மருந்தை கூட யாரும் வாயில் ஊற்ற மாட்டார்கள். புரிஞ்சுதா!?

https://youtu.be/3NITkE4n4lw

actor vijayhindu makkal munnanikushboomadhumithavallamai tharayovijay politics
Comments (1)
Add Comment
  • Kumaran

    முட்டாள்களை ரசிகர்களாக கொண்டு இருக்கும் முட்டாள் நடிகன். வேறு என்னத்த சொல்ல !!!