‘ கபாலி ’க்கு ரெட் போடுவோம் என்ற பன்னீர் செல்வம் ரஜினியுடன் சந்திப்பு?

இந்த தலைப்பே பன்னீர் செல்வம் யாரென்பதை இந்நேரம் சொல்லியிருக்கும். திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்தான் அவர். விஸ்வரூபம் சமயத்தில் கமல் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்றெல்லாம் கோபித்துக் கொண்டு லக்கேஜை தூக்கினாரல்லவா? அதற்கும் கூட இந்த பன்னீர் செல்வம் ஒரு காரணம். அப்படிப்பட்ட பன்னீர் செல்வமும் ரஜினியும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன காரணமாக இருக்கும்?

லிங்கா விவகாரம் உச்சக்கட்டத்திலிருந்தபோது தியேட்டர்காரர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், சாதாரண அமௌன்டுக்கெல்லாம் ஒத்துக்காதீங்க. ஐம்பது கோடியாவது ரஜினியிடமிருந்து திரும்ப வாங்குவோம் என்று கூறிக் கொண்டிருந்தாராம். அதற்கப்புறம் இந்த விவகாரம் கிளர்ந்து எழும்போதெல்லாம் பன்னீர் செல்வத்தின் பெயரும் அடிபடும். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக, இவர் மீது காவல் துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். லிங்கா நஷ்டஈடு பிரச்சனையில் ரஜினி கொடுத்த பணம் இன்னும் பலருக்கும் வந்து சேரவில்லை. அதனால் வேந்தர் மூவிஸ் வெளியிடும் பாயும் புலியை என்.எஸ்.சி ஏரியாவில் வாங்க மாட்டோம் என்று பீதி கிளப்பியிருந்தார் இவர். அந்த நேரத்தில்தான் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகார் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை விடுங்கள். இவர் திடீரென்று ரஜினியை சந்திக்க முன் அனுமதி கேட்டிருந்தாராம். ரஜினியும் வரச்சொல்லி இவரை சந்தித்ததாக தெரிகிறது. அந்த சந்திப்பில் இவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று…. நிறைய பேருக்கு இந்த சந்திப்பு குளிர் ஜுரத்தை கொடுத்திருக்கும்.

linga issuemeetingrajiniSlideTheatre owners association president panneerselvam
Comments (1)
Add Comment
  • Raghuraman

    அதாண்டா எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகிமை, செல்வாக்கு.
    ரஜினி என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு மகான், ஒரு சித்தர், ஒரு யோகி. அதனால் தான் அவரை எதிர்ப்பவரை எல்லாம் அவர் காலில் விழ செய்கிறார். இன்னும் நிறைய பேரை காலில் விழ வைப்பார். பார்க்கத்தான் போகிறிர்கள்.