தாத்தா ‘கணக்கு’ பண்ணுவாரு… பேரன் கணக்கு போடுறாரு. நல்ல ஒன்றுமைதான்!

‘கும்பகோணம் டூ கேம்பிரிட்ஜ்….’ இன்றைய வளர்ந்த யுகத்திலேயே யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்த்துவிடுவதில்லை இந்த பயணம். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்திலிருந்து கிளம்பிப் போய் கேம்பிரிட்ஜில் படித்து உலகத்திற்கே தமிழனின் பெருமையை நிலை நாட்டியவர் கணிதமேதை ராமானுஜம். அவரது கதையை படமாக்கி வருகிறார் ஞான.ராஜசேகரன். ‘இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இங்கு நல்ல படங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’ என்று சந்தோஷப்படுகிறார் இவர். மோகமுள், பெரியார், பாரதி, என்று மிக நேர்த்தியான படங்களை மட்டுமே கையில் எடுத்துக் கொள்கிற கம்பீரமான சினிமாக்காரர் இவர்.

இந்த படத்தில் சுஹாசினி மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். நான் என் கேரியர்ல முக்கியமான படம்னா சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை, பாலைவனச்சோலைன்னு நாலைஞ்சுதான் சொல்லுவேன். அதில் ரொம்ப முக்கியமான படம் இது. இந்த படத்தை நான் மட்டுமில்ல, பிரசிடென்ட்டும் ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கார். (பிரணாப்?) எங்களுக்கு பிரசிடென்ட் ஆபிஸ்ல தொடர்பு இருக்கு. அங்கிருந்து போன் வரும்போதெல்லாம் இந்த படத்தை பற்றி விசாரிக்காமல் இருக்கறதில்ல என்றொரு ஆச்சர்யமான தகவலை பகிர்ந்து கொண்டார் சுஹாசினி.

ராமானுஜர் பற்றி ஞான.ராஜசேகரன் சொன்ன இன்னொரு தகவல் ஷாக். இன்னைக்கு தெருவுக்கு தெரு இருக்குதே ஏடிஎம் மெஷின். அதை கண்டுபிடிக்க உதவியதே ராமானுஜனின் கணித சமன்பாடுதானாம். அடேயப்பா… எவ்வளவு பெரிய மனிதரை பெற்ற நாடு நம்முடையது!

ஜெமினி கணேசன், சாவித்திரி தம்பதியின் பேரன்தான் இந்த படத்தில் ராமானுஜராக நடித்திருக்கிறார். மூக்கு அப்படியே ராமானுஜர் போலவே இருந்தது. 100 க்கும் மேற்பட்டவர்களை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க தேடினேன். ரொம்ப அற்புதமாக அமைந்தார் இவர் என்று பாராட்டினார் டைரக்டர்.

தாத்தா ‘கணக்கு’ பண்ணுவாரு… பேரன் கணக்கு போடுறாரு. நல்ல ஒன்றுமைதான்!

art filmgemini ganesangna rajasekaranmathematics ramanujampresidentSlidesuhaasiniyg mahendran
Comments (0)
Add Comment