மழை வெள்ளத்தில் மூழ்கிய கபாலி பாடல்கள்? இதைதான் ஊமைக்குத்துன்னு சொல்லுது உலகம்!

இந்த செய்திக்கான தலைப்பு சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நிஜம் அதுதான்! கபாலி பாட்டு எப்படி? இரண்டு எறும்புகள் சந்தித்துக் கொண்டால் கூட, இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டுதான் நடையை கட்டிக் கொண்டிருக்கிறது தமிழுலகத்தில். அந்தளவுக்கு தமிழனின் இட்லி தோசை பழைய சோறு பொங்கலோடு ஒன்றிப் போய்விட்டது கபாலி திரைப்படம். அந்த படம் ரிலீஸ் ஆகிற நேரம் காலம் எதுவாக இருந்தாலும், அதுதான் தமிழனுக்கு தீபாவளி பொங்கல் என்கிற அளவுக்கு அப்படத்தின் வைப்ரேஷன் இப்பவே ஆட விட்டுக் கொண்டிருக்கிறது உலகத்தை. இந்த நேரத்தில்தான் அந்த லேசான முணுமுணுப்பும்!

வேறென்ன? கபாலி பாடல்கள் நிஜமாகவே ரஜினி ரசிகர்களை கொண்டாட விட்டிருக்கிறதா என்பதுதான் அந்த முணுமுணுப்பு. ‘சஹானா சாரல் தூவுதே’ மாதிரியான ஒரு மெலடி இல்லையேப்பா… என்ற குரலும், ‘வாஜி வாஜி வாஜி… என் ஜீவன் சிவாஜி’ மாதிரி ஒரு குழைவு இல்லையேப்பா என்ற குரலும் ஆங்காங்கே எழ ஆரம்பித்திருக்கிறது. நெருப்புடா… என்ற பாடல் மட்டும் எல்லார் மனசையும் அப்படியே அடித்துக் கொண்டு போயிருக்கிறது. மற்றதெல்லாம்?

அதற்கு காரணம் என்னவாம்? சந்தோஷ் நாராயணன் சொதப்பியது எப்படி? விசாரித்தால், எல்லாமே சோகம்.

வேறொன்றுமில்லை. பா.ரஞ்சித் மலேசியாவில் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில்தான் இங்கு பாடல் கம்போசிங் நடந்ததாம். பொதுவாக தன் முந்தைய படங்கள் இரண்டிலும், சந்தோஷ் நாராயணன் அருகிலேயே இருந்து ட்யூன் வாங்கியவர் ரஞ்சித். இந்த முறை, “நீங்களே ட்யூனை முடிவு பண்ணி அதை பாட்டாக அனுப்பிடுங்க” என்று மலேசியா போனவர்தான். ஒரு கரெக்ஷனும் சொல்லவில்லை. அதற்கேற்ப, இங்கு இயற்கையின் சதி வேறு. சென்னையை வெள்ளம் சூழ்ந்து கொண்டு படுத்திய எடுத்த நாட்களில் கூட, பாட்டு போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார் சந்தோஷ் நாராயணன். அந்த நேரத்தில் பாட்டு வருவதே பெரும் பாடு. இதில் கரெக்ஷன் எங்கே சொல்வது?

பெருமாள் மேலே பாரத்தை போட்டுவிட்டு மலையேறுவது போல, ரஜினி மீது பாரத்தை போட்டுவிட்டு பாடல்களை ஓ.கே பண்ணிவிட்டார் பா.ரஞ்சித்.

அண்ணாமலை சமயத்தில் இசையமைப்பாளர் தேவா வீட்டில் கல் வீசிய ரசிகர்கள், இப்போது சந்தோஷ் நாராயணனின் ட்யூனை முற்று முழுசாக ஏற்றுக் கொண்டது ஏன்? பா.ரஞ்சித்துக்கு ஏற்பட்டதே ஒரு நெருக்கடி…. அதுபோலதான் இதுவும் என்று நாம் சொன்னால், ஆமென் என்பார்களா? இல்லை என்பார்களா?

ஆக மொத்தம் பாடல்கள் விஷயத்தில் ரஜினி ரசிகர்களை ஊமை குத்து குத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். வேறென்ன சொல்ல?

#Rajini #Rajinikanth #SuperStar #Kabalai #KabaliMovie #PaRanjith #RadhikaApte #RajinikanthStatue #KabaaliReleaseDate #Neruppuda #kabaaliTrailer #kalaipuliDhaanu #vCreations #santhoshNarayananSlide
Comments (7)
Add Comment
  • Nain

    Nice comedy brother…kabali music is rocking all over… We all know you are against Rajini…

  • Shankar

    Bro..Super comedy.. 😉 You are keep proving that you need more Gelusils…

  • Suman

    இதே ஆள் நீங்க போன வாரம் கபாலி பாடல் சூப்பர் சொன்னீங்கே இப்போ ? முதல்ல உங்கள் இணையத்தை கொஞ்சம் கவனியுங்கள் சார் வர.வர உங்கள் நியூஸ் படிக்க பிடிக்கல

  • parthi

    paatta kaathu koduththu kelunga apporo sollunga

    nengatha ulkuththu kuthura mathi iruke

  • கிரி

    சந்தோஷ் நாராயணன் சொதப்பியது எப்படி?

    அந்தணன் அநியாயமா இப்படி சொல்றீங்களே? 🙂 சந்தோஷ் நாராயணன் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிக மிக சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார்.

    மனசாட்சியே இல்லாமல் அவரை போய் குறை சொல்றீங்களே!

    ஒவ்வொரு பாடலும் அசத்தலாக இருக்கு.. கபாலிக்கு இதை விட சிறப்பாக இனி யாரும் இசையமைக்க முடியாது.

    இதை எழுத உங்களுக்கு வேற காரணங்கள் இருக்கலாம் அதற்காக ஒருவரின் உண்மையான உழைப்பை பழிக்காதீர்கள்.

    கஷ்டப்பட்டு வேலை செய்தவர்களுக்கு இது மாதிரி பொய்யாக கூறும் போது ஏற்படும் வலி, நீங்கள் சிறப்பாக எழுதிய கட்டுரையை ஒருவர் மொக்கை என்று கூறும் போது உங்களுக்கு ஏற்படும் வலிக்கு ஒப்பானது.

    தலைவர் ரசிகர்கள் மட்டுமல்ல சிறு குழந்தைகள் முதல் அனைவரும் கபாலி இசையை கொண்டாடுகிறார்கள்.

    ஏதோ சொல்ல வேண்டும் என்று அசத்தலான இசையை குறைய கூறாதீர்கள். அது பாவம்.

    ஊமைக்குத்து சந்தோஷ் குத்தவில்லை. நீங்கள் தான் குத்தி இருக்கிறீர்கள்.

  • Arjun

    Except Neruppuda Song, all are waste. U can’t listen even one time.

  • Sai

    என்ன அந்தனன்..கவர் இன்னும் வர வில்லையா? தாணு ஒழுங்க தந்திருவாரே..!?