கொட்டாச்சி என்ற நகைச்சுவை நடிகரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவருக்கு யாரும் இப்போதெல்லாம் வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் நடிகர் ஆகிவிட்டார். ஏன் அவருக்கு இப்போது யாரும் வாய்ப்பு தருவதில்லை என்ற கேள்விக்குள் போனால், கொட்டாச்சி என்ற பெயரை ‘கெட்டாச்சி’ என்று வாசிக்கிற அளவுக்கு அலட்டல் புராணம் நீளும். அதனால் நேரடியாக மேட்டருக்கு(?) போய்விடலாம்.
சில தினங்களுக்கு முன் சேலம் வந்த கொட்டாச்சி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். தன்னிடமிருந்த பர்ஸ், அதற்குள் இருந்த கிரடிட் கார்ட்ஸ் இவற்றுடன் தனது இரண்டு பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல… தன்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டார்கள் என்றும் புகாரில் கூறியிருந்தார். அவரால் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆட்டோ டிரைவர்களை போலீஸ் தேடி வருகிறது.
ஆனால் போலீசில் பாதிக் கதையை மட்டும் சொல்லியிருக்கிறார் அவர். பர்ஸ் கிடைத்ததோ இல்லையோ? வண்டி வண்டியாக டோஸ் கிடைத்திருக்கிறது கொட்டாச்சிக்கு. ‘வாயார’ வாழ்த்தி அனுப்பிய போலீஸ், “பர்ஸ் கிடைச்சதும் சொல்லியனுப்புறோம். போயிட்டு வா” என்று அனுப்பி வைத்ததாம்.