தடுக்கி விட்ட தவ்சன்! தள்ளிப் போறான் குமாரு!

‘நாட்ல பணப்புழக்கம் அவ்ளோ நல்லாவா இருக்கு?’ என்று வியக்கிற அளவுக்கு போய் விட்டது கடந்த ரெண்டு நாட்களின் நிலைமை. ஐநூறு ரூபாய் தாள்களை கொத்தாக வைத்துக் கொண்டு விசிறியபடியே போஸ் கொடுத்தார் ஒருவர். கடலை உருண்டை மடித்துக் கொடுக்கப்பட்ட தாள்… அட, ஆயிரம் ரூவா தாள். இப்படி சமூகவலைதள குசும்பர்களின் கையில் சிக்கிக் கொண்டு பாடாய் பட்டது ஆயிரமும் ஐநூறும்!

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுதான் நிலைமை என்றாலும் தமிழ்சினிமாவின் நிலைமை தக்கக்கா பித்தக்கா! மோடி ‘செல்லாது செல்லாது‘ என்று அறிவித்த அடுத்த நாளே பல படங்களின் ஷுட்டிங் கேன்சல். இன்றைய நிலவரப்படி, 90 சதவீத ஷுட்டிங்குகள் ஸ்டாப் ஆகிவிட்டன. இது ஒருபுறமிருக்க ரிலீசுக்கு தயாராக இருந்த ‘கடவுள் இருக்கான குமாரு’, கோர்ட் கேஸ் பஞ்சாயத்தையெல்லாம் முடித்துவிட்டு வந்தால், விழுந்தது முட்டுக்கட்டை.

விநியோகஸ்தர்கள் கொண்டு வரும் பணத்தில் ஆரம்பித்து, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கொண்டு வரும் பணம் வரைக்கும் இந்த ஆயிரம் ஐநூறு பிரச்சனை வந்து மூக்கை நுழைக்க… “போதும்யா. இந்த கெடுபிடியெல்லாம் ஒழிஞ்சு ஜனங்க ரிலாக்ஸ் ஆகுற நாளில் படம் வரட்டும்” என்று முடிவெடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சிவா. இம்மாதம் 17 ந் தேதிதான் படம் ரிலீஸ்.

கடவுள் இருக்கிற அதே தேசத்துலதானே மோடியும் இருக்காரு குமாரு?

To listen Audio Click Below:-

https://youtu.be/A___zdH31rc

anadhigv prakash no tensionKadavul irukkan kumaruNikki Galraninovember 10 releasePM narendra modireserve bankshooting cancelT Siva
Comments (0)
Add Comment