“பெண்கள்னா ஃபிரீக் அவுட்டா இருக்கணும். அவங்களை சாமி மாதிரி கும்புடுங்கடா” என்ற பொருள்படும்படி படம் எடுத்த இயக்குனர் அவர். அந்த படம் வசூலில் எப்படியோ, சொந்த வாழ்வில் மகசூல் ராஜாவாக இருக்கிறார் அந்த டைரக்டர். இவரது கஜானா முழுக்க காதல் விளைச்சல்தான் இப்போது. தன் படத்தில் நடித்த அந்த ப்ரீக் அவுட் நடிகைக்கே எல்லாமுமாகி இருக்கிறாராம். இந்த சந்தோஷமும் துக்கமும் அவரோடு போனால் அது அவர் பாடு. அவள் பாடு! ஆனால், அதை அடுத்தவர் மீது திணிப்பதுதான் பெரும்பாடு.
தன்னால் முன்னுக்கு வந்த அந்த வில்லன் கம் ஹீரோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார். அவரிடம் சொல்லி, “உன் இரண்டு படத்திலும் நான் சொல்ற நடிகையைதான் ஹீரோயினா வச்சுக்கணும்” என்று கூறிவிட்டாராம். பெயர் கொடுத்த வள்ளலே விரும்பிக் கேட்ட பின்பு முடியாது என்று மறுக்க முடியுமா? சரி என்று சம்மதித்த அந்த வில்லன் ஹீரோ, எப்படியோ போராடி அந்த நடிகைக்கு தன் படத்தில் இடம் பிடித்துக் கொடுத்துவிட்டார்.
“இன்னும் ஒரு இரண்டு வருஷத்துக்குள்ள உன்னை தமிழ் இன்டஸ்ட்ரியில் நம்பர் ஒன் நடிகையா ஆக்கிக் காட்டுறேன்” என்று கூறியிருக்கிறாராம் இயக்குனர். அதற்கேற்ற முகவெட்டும் உடற்கட்டும் ஒருங்கே அமையப் பெற்றவர்தான் நடிகை.
அப்படியே இன்னொரு செய்தி. மேற்படி இயக்குனரிடமிருந்து விவகாரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிருக்கிறாராம் மனைவி.
சாலையோர நியான் விளக்குகளை நம்பி, வீட்டில் எரியும் குத்துவிளக்குத் திரியை அணைச்சுராதீங்க… அம்புட்டுதேன் நம்ம அட்வைஸ்!