ஏசுநாதர் லவ் பண்ணா எப்படியிருக்கும்! மிஷ்கின் கற்பனையில் முடிஞ்சுதுடா லவ்!

ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். (என்னவொரு அற்புதமான ஸ்கேனிங்?) அவரது மேனரிசங்களை போட்டோ எடுத்து கண்காட்சி வைத்தால், அவர் வணங்கும் அகிரகுரோசாவே கல்லறைக்குள்ளிருந்து எழுந்துவந்து, “ஹலோ… கொஞ்சம் கடைய மூட்றீங்களா” என்பார்.

வெற்றிதானே… அது கெடக்குப்பா என்று சக்சஸ்களை சாக்ஸ் போல அணிந்து நடந்த பாரதிராஜாக்களும், பாலசந்தர்களும், பாலுமகேந்திராக்களும் நடந்த பாதையில் சில ஹிட்டுகளை கொடுத்துவிட்டு மிஷ்கின் அடிக்கும் அலட்டல்களும் ஜோக்குகளும், வரலாற்று சிறப்பு மிக்கவை. கருப்பு கண்ணாடியும் இருட்டு இமேஜூமாக வாழும் மிஷ்கின் தன் அடுத்த அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டார். அதுதான் மரிய சூசையின் காதல். அது பற்றி விகடனில் கூறியிருக்கிறார் மிஷ்.

`இளையராஜாகிட்ட போய், `ஒரு பையனை ஒரு பொண்ணு பார்க்கிறா சார்’னு சீன் சொல்லி பாட்டு கேட்டா, என்னை காறித் துப்புவார். ஆனா, `மரிய சூசையின் காதல்’னு ஒரு கதை எழுதி வெச்சிருக்கேன். இயேசு கிறிஸ்து காதலிச்சார்னா எப்படிக் காதலிப்பார்ங்கிறதை பற்றிய கதை அது. அதை ஒரு படமா எடுத்துட்டு, அதோட இந்தக் காதலைக் குழிதோண்டி புதைச்சுடலாம்னு எண்ணம்.”

“தேங்க்யூ ஜீசஸ்” என்று வார்த்தைக்கு வார்த்தை இயேசுவையும் பக்கத்து சேரில் அமர வைத்துக் கொள்ளும் பிரபுசாலமனும், “என் எல்லா பாட்டையும் எழுதி ட்யூன் போட்டது ஏசுதான் ஏசுதான்” என்று பருத்த தேகம் குலுங்க மல்லுக்கட்டும் இசையமைப்பாளர் இமானும், இந்த படத்தை பார்த்துவிட்டு அவர்களது முதல் கருத்தை சொன்னால், இன்டஸ்ட்ரியில் எப்படி குழாயடி சண்டை வரும் என்பதை யோசித்து பார்த்தால்… அட இப்பவே கண்ணை கட்டுதேடா சாமீய்!

AnandaVikatanBalachandarbalumahendrabharathirajainterviewMariyaSoosaiyinKadhalmyskkinSavarakkaththiSlide
Comments (1)
Add Comment
  • shan

    mr andhanan. today ilayathalapathy vijay birth day. enga soundaye kanom. idhe ajithda birthdaya irundha pudungi irupega ena… neeyellam oru…