குடும்ப நிகழ்ச்சி! அப்செட் ஆன ரஜினி?

உயிரைக் கொடுத்து உழைப்பதே பிள்ளைகளின் நலனுக்காகதானே? குடிசையாக இருக்கட்டும்... பளிங்கு மாளிகையாக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் பொதுவான பாசக் கணக்கு இது. கண்ணுக்குத் தெரியாத இந்த பாச வலைதான் எல்லாரையும் இறுக்கிப் பிடித்துக் கட்டி வைக்கிறது. நல்லது. விஷயத்துக்கு வருவோம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளுக்கு டைவர்ஸ் ஆன பின்பு சற்றே அப்செட்டில் இருந்தார் ரஜினி. பொது விழாக்களில் தன் இரண்டாவது மகள் பற்றி அக்கறையோடு பேசுகிற அளவுக்கு போனது சவுந்தர்யா குறித்த அவரது கவலை. சினிமாவிலும் [...]

எண்ணிக்கை முக்கியமில்ல எண்ணம்தான் முக்கியம்! அஜீத் ரசிகர்கள் சப்பைக்கட்டு!

எந்த பேரிடர் வந்தால் எனக்கென்ன என்று வீட்டிற்குள்ளேயே தியானம் செய்யும் நடிகர்களில் அஜீத் எப்பவுமே டாப்! சென்னை வெள்ளத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் களத்தில் இருந்தபோது, கப்சிப் ஆகி கல்லாபெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிய அற்புத மனிதர். அவர் இடது கைக்கு தெரியாமல் 100 கோடி கொடுத்தார், 1000 கோடி கொடுத்தார் என்று அளந்துவிட்டது அவரது ரசிகர் கூட்டம். அப்போது மட்டுமல்ல, போட்டோஷாப்பில் விதவிதமாக பில்டப் காட்டுவதில் வல்லவர்களான அவர்கள், இந்த கஜா புயலுக்கும் அப்படியொரு டிசைன் செய்து [...]

பேட்டய கை மாத்தாதீங்க! சன்னிடம் போராடும் தயாரிப்பாளர்!

காக்காவா இருந்தாலும் அதன் முதுகில் கலர் பெயின்ட் அடிச்சு மயிலுன்னு நம்ப வைப்பதில் சமர்த்தர் தயாரிப்பாளர் தாணு. கபாலி என்கிற சுமார் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது அவரது விளம்பர அறிவே அன்றி வேறொன்றுமில்லை என்பதை இப்போதாவது தமிழ் சனம் ஒப்புக் கொள்ளும். அப்படிப்பட்டவர் கையில் இன்னொரு அண்ணாமலை, பாட்ஷா என்று நம்புகிற அளவுக்கு ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்தால்? பேனை பெருமாளாக்கி, பெருமாளையும் பேரிக்காய் ஆக்கிவிடுவாரே? யெஸ்... ரஜினியின் பேட்ட படத்தின் இந்திய விநியோக பொறுப்பை தாணுவிடம் [...]

கஜா புயலும், கஸ்தூரியின் உதவியும்!

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை [...]

அந்த பாம்பே நான்தான்! நீயா 2ல் வரலட்சுமி மிரட்டல்!

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது. 1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் [...]

கன் பைட் காஞ்சனாவுக்கே கவர்ச்சியா?

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன் இசை - [...]

எளிமையா நடிச்சிட்டார் எஸ்.ஜே.சூர்யா!

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார் கதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ [...]

வட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்!

தமிழ்சினிமாவை உருட்டிக் கொண்டிருக்கும் சக்கரங்களில் முக்கிய சக்கரத்தில் ஒன்று தனியாக கழன்று வட நாட்டுக்கு ஓடினால், வண்டி என்னாகும்? இந்த வருத்தம் விசும்பலாக துவங்கி அழுகுரலாக மாறுவதற்கு முன் ஐயா அஜீத் அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் ப்ளீஸ். சாதாரணமாகவே பெரிய பட்ஜெட் சினிமாக்களின் ஷுட்டிங் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இளிச்சவாயர்கள் இங்குதான் வரணும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியை கட்டி வைத்திருக்கிறார்கள் ஆந்திராவில். தொழிலாளர்களுக்கு கூலி பறிபோய் கொண்டிருக்கிறது நாள்தோறும். ரஜினி, [...]

கண்ணீரில் குடும்பங்கள்! கை கொடுக்கும் கலையுலகம்!

கஜா புயலின் கோர தாண்டவம் இப்போதுதான் மெல்ல மீடியா மூலம் உலகத்தின் கதவுகளை தட்டி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், ‘ஆன் லைனில் பணம் அனுப்பும் வசதியை உருவாக்கிய தமிழக அரசு அதை இன்னும் எளிமையாக்கியிருக்கலாம்’ என்று கூறி வருகிறார்கள். வழக்கம் போல, சினிமாவுலகம் என்ன செய்தது? என்ற கேள்வி எழுந்தது. நல்லவேளை... எல்லா விஷயங்களையும் சற்று தாமதமாகவே கேட்டுணரும் கலையுலகம், இதையும் அப்படியே எதிர் கொண்டது. இருந்தாலும் தங்கள் ஈகை குணத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாக [...]

அயோக்யா! முதல் பப்ளிசிடியை துவங்கி வைத்தார் மருத்துவர் பெரிய ஐயா!

ஆணானப்பட்ட விஜய்க்கே ‘மெர்சல்’ படத்தை ஓடவைக்க ஒரு தமிழிசை சவுந்தர்ராஜனும், ‘சர்கார்’ படத்தை ஓட வைக்க அதிமுக சர்காரும் தேவைப்படும்போது, சுமார் பிசினஸ் லெவலில் இருக்கும் விஷாலுக்கு தேவைப்படாதா என்ன? எதில் கை வைத்தால் யாருக்கு வயிறெரியுமோ, அதில் கை வைத்து ஒரு அதிர்ச்சிக்குரிய டிசைனை வெளியிட்டிருக்கிறார். அவர் நினைத்தது போலவே முதல் குண்டு பாய்ந்துவிட்டது தைலாபுரத்திலிருந்து. தெலுங்கில் வந்த ‘டெம்பர்’ என்ற படத்தைதான் தமிழில் ‘அயோக்யா’ என்ற பெயரில் எடுக்கவிருக்கிறார்கள். ஒரு கேடு கெட்ட போலீஸ், [...]

என்னையும் அட்மிட் பண்ணுங்க! சோஷியல் மீடியா மீது சூர்யா வேதனை!

உயிருக்காக ஒருவர் போராடுகிற போதும் கூட அவரை காப்பாற்ற முயல்வதை விட்டுவிட்டு அந்த வேதனையை செல்போனில் படமெடுக்க அலைகிற கொடுமை இன்று சர்வ சாதாரணம். சோஷியல் மீடியாவின் அசுர கரங்கள் யாருடைய கழுத்தை வேண்டுமானாலும் முறித்துப் போடுகிற அளவுக்கு முரட்டுத்தனமாகிவிட்டது. இது குறித்தெல்லாம் தன் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சூர்யா. இந்து குழும நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை கீழே- “புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு [...]

திமிரு புடிச்சவன் /விமர்சனம்

தமிழ்சினிமாவில் சாயம் போகிற அளவுக்கு காக்கியை அடித்து துவைத்து வெளுத்துவிட்டார்கள். இருந்தாலும் எப்பவோ வந்த தங்கப்பதக்கமும், எப்போதும் மனசில் நிற்கும் மூன்று முகமும், எவர் க்ரீன் கம்பீரத்துடன் சாமியும், சமயங்களில் சிங்கம் அண்கோவும் இருக்க... ‘இப்ப எதுக்குய்யா இன்னொன்னு?’ என்று கேட்டால், ‘காக்கியில முக்கியெடுக்கலேன்னா அவன் நடிகனே இல்ல’ என்றொரு பதில் வரக்கூடும். மிளகாயை நறுக்கி மூக்கில் செருகினால் கூட, ‘ரெடி டேக்’ என்றால் தும்மக் கூட மாட்டார் விஜய் ஆன்ட்டனி. அவருக்குப் போய் காதல், ஆக்ஷன், [...]

வர வர விஜய் ரஜினியாக முடிவெடுத்து விட்டார் போலிருக்கே?

‘சரியா நின்று சம்பவம் பண்றாருப்பா...’ என்று விஜய்யை கிள்ளி முத்தா கொடுப்பார்கள் போலிருக்கிறது அவரது ரசிகர்கள். விஜய் போடுகிற ஸ்கெட்ச் அப்படி! சர்கார் பட விஷயத்தில் கவருமென்ட் சீண்டிய பின், தனது திட்டங்களில் சில பல மாற்றங்களை செய்திருக்கிறாராம் அவர். அதுதான் இன்டஸ்ட்ரியில் கசிந்து இன்பமாக பொங்கிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் மத்தியில். ரஜினி பீக்கில் இருந்தபோது ஒரு விஷயம் செய்தார். வருடத்திற்கு ஒரு படம். அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று. ஆன்மீகம், சுய வெறுப்பு, [...]

காற்றின் மொழி / விமர்சனம்

அநேக பெண்களின் ‘கடுப்ப’ங்கரையே, அடுப்பங்கரைதான்! இந்த ‘புகைச்சல்’ மனங்களுக்கு ஒரு புல்லாங்குழல் பீட் போட்டால், அதுதான் ‘காற்றின் மொழி’! ‘என்னால முடியும்’ என்ற மந்திரச் சொல்லை, கிடைக்கிற இடத்திலெல்லாம் பயன் படுத்துங்கள். வெற்றி... உங்கள் வீட்டு வாசலில் என்கிற தன்னம்பிக்கை தத்துவத்தை படு ஸ்மார்ட்டாக சொல்கிறது ராதாமோகனின் திரைக்கதை! கூடவே பொன்.பார்த்திபனின் வசனங்களும் வலு சேர்ப்பதால், பீச்சில் காற்று வாங்கிய நிம்மதியோடு வெளியே வருகிறோம். சாரை சாரையாக வேலைக்கு செல்லும் பெண்களை புத்தம் புதுசாக பார்க்கிறது மனசும் [...]

ஜனவரியில் தொடங்குகிறது மாநாடு! அரசியலை ஒரு கை பார்ப்பாரா சிம்பு?

இந்தியன் 2 ல் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் முழுக்க முழுக்க ஈடு பட்டிருப்பவர் எஸ்.டி.ஆரின் தோஸ்த் அனிருத்! (அந்த ஆபாச பாட்டு விஷயத்துல சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்ததற்கு இப்பவாவது பரிகாரம் தேடுறாரே, அந்த வகையில் ஹேப்பி) ‘மாநாடு என்னாச்சு... சிம்பு உங்ககிட்டதான் கேட்குறோம்?’ என்று ரசிகர்கள் லேட்டஸ்ட்டாக அறிவிக்கப்பட்ட படத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒரு புறம் திரைக்கதை எழுதுவதில் மும்முரமாக இருந்த வெங்கட்பிரபு கதையை முடித்து அதை சிம்புவிடம் [...]

சீமானின் தங்கச்சி சென்ட்டிமென்ட்! தேர்தலுக்கு கை கொடுக்குமா?

ஷார்ப்பா பேசுறாரு... ஒரு வாட்டி ஓட்டு போட்டாதான் என்ன? என்கிற மனநிலைக்கு கேட்பவர்களை ஆளாக்கி, பார்ப்பவர்களை பரவசமாக்குவது சீமானின் ஸ்டைல். மக்களின் மனசுக்குள் புகுந்து, கோபத்தை கிளறி ஆட்சியாளர்களை அலற வைக்கிற அவரது பாணிக்கு இளம் ரத்தங்கள் அடிமையாகி வருவது அன்றாட செய்தி. சினிமாவை பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அரசியலை அறுத்துக் கிழிக்கும் ஆக்சா பிளேடாகவும் பயன்படுத்தி வருகிற எம்.ஜி.ஆர் பாணி நடிப்புக்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்கதான் செய்கிறது. அதனால்தான் சினிமாவில் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியும், [...]

பேட்ட, விஸ்வாசம் மோதல் உறுதியானது!

பொங்கலுக்கு பராக்... பேட்ட! இப்படியொரு அறிவிப்பால் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் ஜனவரி பொங்கல், ‘டுடே பொங்கல்’ ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டாலும், அதில் ஒரு பெருக்கல் குறியை போட்டு லாபம் பார்த்துவிடுகிற யுக்தி அந்த நிறுவனத்திற்கு மட்டுமே சாத்தியம். அதைதான் சர்கார் விஷயத்தில் கவனித்தோமே? சும்மாயிருந்த வாயெல்லாம் கூட கூட சர்கார் சர்கார் என்று முணுமுணுக்கிற அளவுக்கு விட்டு விட்டார்கள். கலெக்ஷன் விஷயத்தில் சர்காருக்கு சறுக்கல் என்று பேசிய அத்தனை பேருக்கும் ஷாக். [...]