தலைவா : நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!

சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண முதலைகளாக  இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் தமது சொந்தப் பிரச்சினைகளுக்கே கூட அப்படி போராட மாட்டார்கள் என்பது தலைவா பட பிரச்சினையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைககள்  ஏற்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை […]

கிசுகிசுவா எழுதுறீங்க – வெளுக்கும் பாண்டிராஜ்

டைரக்டர் பாண்டிராஜ் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வார்த்தைகளில் நெளிவு சுளிவுகளுக்கும் இடம் தரமாட்டார். அப்படிப்பட்டவரை பற்றி ஒரு கிசுகிசு வந்தால் சும்மாயிருப்பாரா? அதற்கு தக்க விளக்கம் கொடுத்து ஊர் வாயை அடைத்திருக்கிறார். மூடர் கூடம் என்ற படத்தை இவரே வாங்கி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போகிறார். இந்த கைங்கர்யம் எதற்காக? இப்படியொரு கேள்வி இங்கே எழ, அதற்கான காரணத்தையும் கேள்வி கேட்டவர்களே கிளப்பிவிட்டார்கள். அதாவது இந்த படத்தில் ஓவியாதான் ஹீரோயின். அவர் கேட்டுக் கொண்டதால்தான் இந்த […]

பூஜா எங்கேயும் போகல…

பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது. பூஜாவின் செல்போனுக்கு யார் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்காமலே இருந்தார். அதனால் இந்த தகவலை இன்னும் உர்ஜிதப்படுத்தினார்கள் இங்கே. ஆனால் விடியும் முன் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பூஜா, இந்த யூகங்களையெல்லாம் தவிடுபொடியாக்கினார். அதே நேரத்தில் இங்கிருந்து வருகிற எந்த செல்போன் அழைப்புகளையும் தான் […]

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம் “துலைக்கோ போறியள்“

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும். இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி […]

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது.. … நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்திருக்கிறார்கள். பின்னர் இரவு நேரம் நெடுந்தீவுப் பிரதேச சபையின் சிவப்பு நிற .NP. 253-5112 என்ற இலக்கம் கொண்ட பிக்கப் வாகனத்தில் வந்த […]

லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்!

லோக்சபா தேர்தலுக்கு திமுகவும் தயாராகிவிட்டது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலர் க. அன்பழகன் ஆகியோருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், – லோக்சபா தேர்தல் தொடர்பான கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலர் அன்பழனுக்கும் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. – சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் […]

நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம்

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் […]

வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றுக் காலை அதன் கிணறு […]

இனிமேலாவது ஜாக்கிரதையாக…

அங்காடி தெரு மகேஷுக்கு முறையான அட்வைசர்கள் யாரும் இல்லாததால் அப்படத்தின் வெற்றிக்கு பிறகும் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். தற்போது அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மகேஷின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். பணம் வருகிறது என்பதற்காக யார் கூப்பிட்டாலும் போய் நடிக்க ஆசைப்படக் கூடாது என்பதுதான் இருவரும் எடுத்திருக்கும் அதிரடி முடிவாம்.  விரைவில் வெளிவரப்போகும் அடித்தளம் தனது புகழை மீட்டெடுக்கும் என்கிற மகேஷ், கஞ்சா கருப்பு தயாரிக்கும் வேல் முருகன் போர்வெல் படத்தில் தற்போது நடித்துக் […]

காத்திருக்கிறார் சேரன்

தலைவா படம் வெளியாவது குறித்த செய்திகளாலும், அது குறித்த குழப்பங்களாலும் சேரனின் மகள் தாமினி பற்றிய பிரச்சனையின் வீரியம் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. இது ஒரு விதத்தில் நல்லதும் கூட என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சேரன் வட்டாரத்தில். தாமினி படிக்கும் பள்ளியின் தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் தாமினி. இங்கு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் செலுத்தும் அன்பு, அக்கறை, இவை பற்றி போதிக்கப்படுகிறதாம் தாமினிக்கு. அத்துடன் படிப்பை முடித்தவுடன் திருமணம் பற்றி […]

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கழக துணை செயலாளர் எஸ். ஆஸ்டின், கழக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இனிப்புகள் தவிர பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார் விஜயகாந்த். […]

13வது திருத்த நடைமுறையில் உறுதி.. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு: ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தீவிரம் காட்டுவதைக் கண்டித்து கொழும்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜிவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது திருத்ததம். இதன்படி ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும். ஆனால் அண்மைக்காலமாக அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தையே ரத்து செய்ய இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிகளை இந்தியா […]

இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை: இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருகிறது. உத்தர்காண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும். உத்தர்காண்டில் ராணுவ வீரர்கள் சிறப்பான மீட்புப் பணியை […]

ஆதலால் காதல் செய்வீர்

பிக்கப்பும் பிரேக் அப்பும் சர்வசாதாரணமாகிவிட்ட டீன் ஏஜ் உலகத்தின் அலட்சியப் போக்கை பொளேரன்று புத்தி கலங்குகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பார்க், பீச், பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று எங்கும் காதல், எதிலும் காதலாகிக் கிடக்கிறது இந்தகால டீன் ஏஜ். இவர்களுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை சிலபஸ் மாதிரி சொல்லாமல், சிந்திக்கிற மாதிரி சொல்லியிருக்கிற சுசீந்திரனின் நோக்கத்திற்கு உலக பெரிசில் ஒரு வெல்கம்! காலேஜ் காதல் எப்படியெல்லாம் அரும்புகிறது. அது எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறது என்பதை […]

ஆஹா ஓஹோ அமலாபால்

மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. இருந்தாலும் அமலா ஜுரத்தால் தெர்மா மீட்டரே வெடிக்கிற அளவுக்கு ஃபீலிங் காட்டியது தமிழ்ப்படவுலகம். மெல்ல மெல்ல முன்னேறி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிற அளவுக்கு உயர்ந்த அமலாபாலுக்கு அண்மையில் தலைவாவின் முடக்கம் தாங்கமுடியாத வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அவர் தற்போது உள்ளூரில் இல்லை. இருந்தாலும் தினந்தோறும் நெருக்கமானவர்களுக்கு போன் அடித்து நிலவரத்தை விசாரித்து வருகிறாராம். இவ்வளவு துன்பத்திலும் அவருக்கு ஒரு இன்பம். இவர் நடித்த பெஜவாடு ரவுடிலு […]

ஏன் போகவில்லை ஹன்சிகா?

தனது ட்விட்டரில் வெளிவந்த படங்கள் பற்றி காரசாரமாக பேட்டியளித்திருந்தார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் அணைத்துக் கொண்டிருப்பதை போன்ற காட்சிதான் அது. ‘இந்த படங்கள் நாங்கள் இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்டவை. அதை என் அனுமதியில்லாமல் யாரோ வெளியிட்டிருக்கிறார்கள்’ இதுதான் ஹன்சிகாவின் ஆவேசமான பேட்டி. இப்படி வெளியிட்டது யாரென்று கண்டு பிடிக்க கேட்டு போலீசிடம் புகார் கொடுக்கப் போவதாகவும் அப்பேட்டியில் சொல்லியிருந்தார் அவர். ஆனால் பேட்டியளித்து முழுசாக ரெண்டு நாளாகிவிட்டது. கமிஷனர் ஆபிஸ் பக்கம் ஹன்சிகாவும் போகவில்லை. அட்லீஸ்ட் […]

‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’

‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’ என்பார்கள் கிராமத்தில். அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த ‘பலி நேரம்’ இப்போதுதான் வந்திருக்கிறது. நடிகர் விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் துவங்கப்பட்ட போது கூட எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு நெருங்குகிற நாளில்தான் குழப்பமும், கூத்தும்! ஒரு தலைவன் யாராலும் உருவாக்கப்படுதில்லை, அவன் தானாக உருவாகிறான் என்கிற கருத்தை மையமாக கொண்ட […]

முதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்…! -நடிகர் விஜய் சுட சுட அறிக்கை

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள். நமது முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு […]

பட்டத்து யானை

யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், ‘இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?’ என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர்! ‘அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க?’ என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி? ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா? அதேதான்! அந்த ஊர்லேயே பெரிய சமையல்காரர் என்று […]

சொன்னா புரியாது – விமர்சனம்

ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை ‘பின் தொடர்ந்து’ படமாக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு உணர்வைதான் தருகிறது இந்த ‘சொன்னா புரியாது’. நாளொரு ஃபிகரும் பொழுதொரு பிக்கப்புமாக இருக்கிறார் சிவா. கல்யாணமே வேண்டாம் என்பதுதான் இவரது கொள்கை. ஆனால் விடாப்பிடி அம்மா, சிவாவை நச்சரித்து பெண் பார்க்க அழைத்துச் […]