மீசையை ஒதுக்குறேன்னு மூக்கை நறுக்கிக் கொண்ட பாபி சிம்ஹா பற்றிதான் கைகொட்டி சிரிக்கிறது ஊர். யாரோ ஒரு போலீஸ் அதிகாரியின் நட்பை, தன் திமிருக்கு ஊறுகாயாக தொட்டுக் கொண்ட பாபி, தன்னை வைத்து படம் எடுத்த அக்னிதேவி தயாரிப்பாளரை ஓட ஓட விரட்டிய கதைதான் ஊருக்கே தெரியுமே! தன் தரப்பு நியாயத்தை கூட சொல்ல முடியாமல் தலைமறைவான தயாரிப்பாளர் கம் இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத்தின் பேருதவியோடு மீண்டும் வந்திருக்கிறார். இவர் மீது கொடுத்த புகாரை முதலில் வாபஸ் [...]
https://www.youtube.com/watch?v=tsQVjr5FIkY
“எட்டாவது மாடியிலேர்ந்து கனகா விழுறதுக்கும், அவளோட கர்சீப் விழறதுக்குமான வித்தியாசம்தான் நயன்தாரா குறித்த ராதாரவியின் பேச்சு! ஏதோ கனகாவே விழுந்தது போல பதறுகிறார்களே, அதைதான் தாங்க முடியவில்லை”. -இப்படி ராதாரவிக்கு சப்போர்ட்டாகவும் சில குரல்கள் கோடம்பாக்கத்திலிருந்து விழுந்தாலும், எதிர்ப்பு குரல்களின் சப்தம் சற்று ஓவர்தான். பொதுவாகவே வாய் நீளக் காரர் ராதாரவி என்பது உலகத்திற்கு தெரியும். அதற்காக வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ‘கொலையுதிர் [...]
அண்மையில் திரைக்கு வந்து நல்ல பட விரும்பிகள் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘நெடுநல் வாடை’! இந்தப்படம் ஏன் அனைவரையும் கவர்ந்தது என்று யாரிடம் கேட்டாலும், கதையும் அந்த கதைக்கு பொருத்தமான நடிகர்களும், அவர்களின் அப்பழுக்கில்லாத நடிப்பும்தான் என்பார்கள். முக்கியமாக படத்தில் தன் நடிப்பையும் அழகையும் கொட்டி கொட்டி கோலம் போட்ட அஞ்சலி நாயர்தான் காரணம் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் இதையெல்லாம் மறைத்து ஒரு பிம்பத்தை பூசிக் கொண்டிருந்தார்கள் படக்குழுவினர். அது? வைரமுத்துவின் வரிகள்தான் [...]
நிற்கக் கூட நேரமில்லாமல் அலைந்து அலைந்து வாய்ப்பு தேடிய யோகிபாபுவுக்கு இப்போது நிற்கக்கூட நேரமில்லை. இறைவனின் திருச்சபையில் கிண்டப்பட்ட பஞ்சாமிர்தம் டப்பியோடு வழங்கப்பட்டுவிட்டது யோகிபாபுவுக்கு! தினந்தோறும் இரண்டு படங்கள். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று என றெக்க கட்டி பறக்கிறார் மனுஷன். கல்லாபெட்டியிலும் கம்பீரம் ஏறிவிட்டது. உழைப்பவனுக்கெல்லாம் உதாரண புருஷனாகிவிட்ட யோகிபாபுவை, உசுப்பேற்றி உசுப்பேற்றியே வாழக்கிளம்பிவிட்டது ஒரு கும்பல். இந்திரனே... சந்திரனே... நீ இல்லேன்னா தமிழ்சினிமாவே இல்ல. உன் புன் சிரிப்புதான் இந்த பூமிய சுழல வைக்குது. [...]
சென்சார் போர்டு அதிகாரியாகவும் இருக்கிறார் கவுதமி. ஆனால் பொறுப்பான அதிகாரியா என்றால் போற வர்ற மாடு கன்னுக்குட்டி கூட, ‘ஐயே ஆத்தா’ன்னு கத்தும்! ஏன்? சமீபத்தில் வந்த ஆபாச குப்பையான ‘90 எம்.எல்’ படம் வெளிவரக் காரணமே கவுதமிதான். ‘இதுக்கெல்லாம் அனுமதியில்ல... ரிவைசிங் கமிட்டி முடிவு பண்ணட்டும்’ என்று கவுதமி பக்கம் தள்ளிவிட்டது ஆரம்ப நிலை சென்சார். அதற்கப்புறம் தன் கைக்கு வந்த படத்தை தாராளமாக அனுமதித்ததே கவுதமிதான். கட்... இப்ப என்ன அதுக்கு? ஒரு இணையதளத்தில் [...]
அவரவர் நாக்கை அவரவர்களே பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அரசியல்வாதிகளின் கூட்டணி. ‘ஏன்யா... கொஞ்சமாவது வெட்கம் வேணாமா? நேத்து வரைக்கும் ஒருத்தர் எலும்பை இன்னொருத்தர் கடிச்சு துப்பிட்டு இன்னைக்கு என்னய்யா போஸ் வேண்டிக் கிடக்கு போஸ்?’ என்று வீட்டுக்கு வீடு வெந்து தணிகிற இந்த நேரத்தில், ‘தன் கடன் படம் செய்து கிடப்பதே’ என்று அடுத்தப்படத்தின் கதையை டிக் அடித்துவிட்டார் ரஜினி. புதுக்கட்சியும் போட்டியும் சட்டமன்ற தேர்தலுக்குதான் என்று சொன்ன ரஜினி, புது தகவலாக நேர்கொண்ட [...]
வரவர காதல், பீட்ஸா டெலிவரியை விடவும் சுலபமாகி விட்டது. காதலுக்காக தாடி வைத்த எய்டீஸ் ஹீரோக்களும், கையில் ஆணி அடித்துக் கொண்டு கதறிய அதே கால கட்ட ஹீரோயின்களும் இப்படத்தை பார்த்தால், ‘நாமெல்லாம் வேஸ்டா வாழ்ந்துட்டமே’ என்கிற மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும்! இருந்தாலும் இந்த பீட்ஸாவில் சுவாரஸ்யம் ஜாஸ்தி! இன்னும் சொல்லப் போனால், கவுதம் மேனன் ஸ்டைலில் கதை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம்! அழகான அஞ்சு குரியனுக்கும் அனந்தநாக்குக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் [...]
கருத்து சொல்ற படத்தையெல்லாம் குருத்துலேயே கொன்று விடுகிற வழக்கம் எப்போது வந்ததோ தெரியாது. பல படங்கள் இப்படி பாதி உசுருலேயே பறிபோய் விடுகிற சூழலில், அழுத்தமும் அழகுமாக இன்னொரு படம்! பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்கிற நியாயமான கருத்தை, காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வ கண்ணன்! மெனக்கெட்டு கிரீடம் செய்தது கூட முக்கியமில்லை. அதை யார் தலையில் வைப்பது என்று தேர்ந்தெடுத்து வைத்தாரே... அங்கே நிற்கிறது செல்வ கண்ணனின் அறிவு. அஞ்சலி [...]
தமிழ்சினிமாவும் கலாச்சார அதிர்ச்சியும் என்று ஒரு தலைப்பு வைத்தால், லியோனியோ, நாஞ்சில் சம்பத்தோ நாக்கு சுளுக்குகிற அளவுக்கு பேசித் தள்ளுவார்கள். அந்தளவுக்கு கன்டென்ட் கொட்டிக் கிடக்கிறது இங்கே. திரைக்கு பின்னும் முன்னுமாக நிறைய சம்பவங்கள் இப்படி இருப்பதால் ஜனங்களும் அதற்கு பழகிவிடுவார்கள் என்கிற எண்ணத்திற்கு சரியான சவுக்கடி! அண்மையில் வெளிவந்த 90 எம்.எல் படம் மண்ணை கவ்வி மல்லாக்கொட்டை தின்றுவிட்டது. அப்படத்தை தயாரித்த வகையில் அப்படத்தின் இயக்குனருக்கு சுமார் நாலரை கோடி நஷ்டமாம். அதை திருப்பி தருகிற [...]
ஒரு பிளாஷ்பேக்... மைனா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அமலாபால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு படத்தின் பெயர் அவருக்கே மறந்து போயிருக்கும். இருந்தாலும் அமலாவின் கண்ணும், அந்த இன்னொசென்ட் முகமும் இந்த படத்தின் ரத்தம்... நாடி... நரம்பு... உயிர் என்று ரசித்து ரசித்து எடுத்துக் கொண்டிருந்தார் பிரபுசாலமன். பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது படம். அதற்கு நடுவில் ஒரு படம் கிடைக்க... அதில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அமலாபால். அந்தப்படம்தான் ‘சிந்து சமவெளி’. மாமனாருக்கும் [...]
கையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்கள் ஒரு சிலர். சேரனும், செழியனும், காக்கா முட்டை மணிகண்டன்களும் இல்லாவிட்டால் நம் சினிமா கருவாட்டுக் கூடைதான். சந்தேகமேயில்லை! உலகிற்கு ஒரு யோசனை சொல். அதையும் உரக்கச் சொல் என்று களம் இறங்கியிருக்கிறார் சேரன். சற்று கால [...]
https://www.youtube.com/watch?v=y1yMP8JjEQc
https://www.youtube.com/watch?v=rQ04Jv3UvQ4
https://www.youtube.com/watch?v=XmvawvJCaEE
கர்சீப்புன்னு நினைச்சு ஜட்டியை பையில் திணித்துக் கொண்டு வந்த பிரகஸ்பதிகளுக்கு வேண்டுமானால் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கலாம். நிஜத்தில் ‘90 எம்.எல்’ போட்டுத் தள்ள வேண்டிய சினிமா. அழகிய அசுரா என்ற பெயரில் இப்படத்தை இயக்கியிருக்கும் அனிதா உதுப், கோடம்பாக்கத்தில் ஒரு புதிய வழித்தடத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஹரஹர மகாதேவகியும், இருட்டறையில் முரட்டுக்குத்தும் ஏற்படுத்திய தடம்தான். ஆனால் குண்டும் குழியும் அதைவிட ஜாஸ்தி! கடைத்தெருவில், மார்க்கெட்டில், பொது இடங்களில் நடந்து போகும் பெண்களிடம் சினிமா டயலாக்குகளை சொல்லி [...]
காபி கொட்டை புளியங் கொட்டை விளம்பரத்திற்கு கூட ரஞ்சித்தை புக் பண்ணுவதில்லை கோடம்பாக்கம். ஏனென்றால் அவர் நடித்த முந்தைய படங்களின் டிராக் ரெக்கார்டு அப்படி! இவரைப்போய் ஏதோ மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்று நினைத்த பா.ம.க கோலாகலமாக கட்சியில் இணைத்து மாநில லெவலுக்கு ஒரு பதவியும் கொடுத்ததெல்லாம் வடை சட்டியில் காக்காயே விழுந்த மாதிரியான அதிர்ஷ்டம். அப்படிப்பட்ட ரஞ்சித், பா.ம.க வின் பச்சோந்தி தனத்தை பற்றி பேசி தன்னையும் ஒரு பாஸான பொலிட்டீஷியன் ஆக காட்டிக் கொள்வதை [...]
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்கிற தலைப்பு சிம்புவுக்கு சூட் ஆகுதோ, இல்லையோ? சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்போதும் சூட்! கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரவால்ல. வர்ற நேரத்தில் போட்டியில்லாம இருக்கணும். அப்படியொரு பாலிஸியை கடைபிடித்து அடிக்கடி வெற்றியை ருசிக்கிற சிவா, இந்த முறை ஏன்யா இப்படி சொதப்புனாரு? என்கிற கேள்வி எல்லாருக்கும் எழுந்திருக்கும். ஏன்? மே 1 ந் தேதி சிவகார்த்திகேயன் நடித்து ராஜேஷ் இயக்கிய ‘மிஸ்டர் லோக்கல்’ திரைக்கு வருகிறது. அதே நாளில்தானே அஜீத்தின் பிங்க் ரீமேக் [...]
https://www.youtube.com/watch?v=3-Xq_Zz3nPA&feature=youtu.be
மெதுவடைக்கு சைட் டிஷ் மெதுவடைதான். அதுவும் முந்தா நாள் போட்ட வடை என்றால், நாக்கு தூக்குல தொங்கிடும் அல்லவா? அப்படியொரு அனுபவத்தை(?) அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அரத பழசான மேக்கிங்! அந்த ஒரு காரணத்தாலேயே புரத சத்தில்லாத குழந்தை போல முக்குகிறது படம்! ‘கண்ணே...’ என்று காதலித்தவளை கொண்டாடுகிற ஹீரோ, அந்த கண்ணின் கண்ணுக்காக கண்ணீர் விடுவதுதான் படம். வங்கி அதிகாரியாக கிராமத்திற்கு வரும் தமன்னா, அந்த ஊர் விவசாயி உதயநிதியின் மீது [...]