பிரபுதேவாவை சந்தித்தார் நயன்தாரா! மனம் விட்டுப் பேசியதென்ன?

காதல் இருக்கே… காதல். அது பிக்காசோ ஓவியம் போல! எந்தப்பக்கம் திருப்பினாலும் குழப்பம் இருக்கும். அதே நேரத்தில் அதில் ஆழமான ஒரு அர்த்தமும் இருக்கும்! கைவசம் இப்படி சில பிக்காசோ ஓவியங்களை வைத்திருந்த நயன்தாரா, எல்லாவற்றையும் விட்டுத் தொலைத்துவிட்டு விக்னேஷ் சிவன் என்கிற ஒரே ஒரு ஓவியத்தோடு செட்டில் ஆகிவிட்டார். அதற்கப்புறம் என்னவாம்? ‘நிம்மதியான நினைப்பு. நீக்கமற அணைப்பு’ என்று போய் கொண்டேயிருக்கலாம் அல்லவா?

அங்குதான் பிள்ளையார் பிடிக்க குரங்கு ஷேப்! சென்னை கடற்கரை ஓர நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் நயன்தாரா. ஒரு நாளைக்கு சூட் வாடகையே ஒன்றரை லட்சம் ப்ளஸ் டேக்ஸ்! இத்தனைக்கும் சென்னையில் இரண்டு சொகுசு வீடுகளை சொந்தமாக வைத்திருக்கிறார் அவர். அதில் ஒன்றில்தான் குடியிருக்கிறார்கள் இவரும் காதலர் விக்னேஷ் சிவனும். இருந்தாலும் இந்த ஓட்டலில் நயன்தாரா நாள் கணக்கில் ரூம் போட்டு தங்குவதற்கு காரணம், மொட்டை மாடியில் நின்று கடலையும் அலைகளையும் பார்த்து ரம்மியப்படுவதற்காக கூட இருக்கலாம்.

இங்குதான் பல வருஷங்கள் கழித்து பிரபுதேவாவை சந்தித்து மனம் விட்டு பேசியிருக்கிறார் நயன்தாரா. இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டிருக்கிறது. அப்போது கதறி அழுதாராம் நயன்தாரா. இந்த சந்திப்பின் போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் அருகில் இல்லாமல் போனதுதான் ஏதேதோ சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

கடற்கரையோரத்தில் யார் குடியிருந்தாலும், அவர்களுக்கு சுனாமி ஆபத்து காத்திருக்கிறது. அந்த சுனாமி எவர் உருவில் வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் இறுதி நியதி!

 

Dance Masterkollywood hot newskollywood latest newsloveLove Break Upmeetingnayannayantharanews about nayahntharaprabhu devaramalathsimbuSTRtamil top heroinevignesh sivan
Comments (0)
Add Comment