திரைக்கு வந்திருக்கும் ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணிக்கு முக்கிய ரோல். அவர் ரஜினிக்கு சமமான வாய்ஸ் உள்ளவர் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் அ.செந்தில் குமார். இதையெல்லாம் கேட்டால், “ஓவரா கொட்றீயே உலகநாதா” என்று சொன்னாலும் சொல்வார் கவுண்டர். படமே திரைக்கு வந்தாச்சு. செந்தில் குமார் சொன்னது சரியா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான். “எதுக்கும் ஒரு முறை தியேட்டருக்கு போயிட்டு வந்து சொல்லுங்க!”
‘‘பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் அழைத்தே வராத கவுண்டமணியை எப்படி மீண்டும் இழுத்து வந்தீங்க?’’
‘‘அவர் நடிக்க முடியாதுனு சொல்லி யாரையும் அவாய்ட் பண்ணலை. அவருக்கு பிடிச்சா மாதிரி கேரக்டர் யாரும் சொல்லலை. நான் சொன்ன இந்த டாக்டர் பென்னி கேரக்டர் அவரை கவர்ந்ததால தான் ஓகே சொன்னாரு. ஓகே சொன்னதோட மட்டும் இல்லாம படத்துல அவர் பேசற பன்ச் டயலாக்ஸ்லயும் ரொம்ப கவனம் எடுத்து பேசினாரு. அவரோட என்ட்ரி டயலாக்கே ’ஐ அம் கமிங் பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’ தான். படத்தை ஆலமரமா தாங்குறதே கவுண்டமணி சார் தான்!’’
‘‘கவுண்டமணி பன்ச்னாலே அரசியல் இருக்குமே?’’
‘‘ அது இல்லாம இருக்குமா? நாம சிச்சுவேஷன் சொல்லிட்டா போதும் சார்… அவர் எடுத்து விடற பன்ச்ல இன்னிக்கு நாட்டு நடப்பை செம கலாய் கலாய்க்கிற மாதிரி பன்ச்களா வந்து விழும். இன்னிக்கு இருக்கற அரசியல்வாதிகள் எல்லாரையுமே வாரிருக்காரு. ஒரு ஸீன்ல ஊர்வசி மேடத்துக்கு பசி தாங்க முடியாம வேலைக்காரி கொண்டு வந்த பழைய கஞ்சி குடிச்சுடுவாங்க. இதுதான் சமத்துவம்னு ஊர்வசி சொல்வாங்க. அதுக்கு கவுண்டமணி சார் ‘மேட்டை வெட்டி பள்ளத்துல போட்டாத் தான் சமத்துவம். பள்ளத்தை வெட்டி மேட்டுல போட்டா அது சவக்குழி, பணக்காரன்களும், அரசியல்வாதிகளும் ஏழைகளோட கஞ்சியை கூட விட்டு வைக்க மாட்டேங்கறீங்களே? வீடு வீடா போயி நீ கஞ்சி குடி, நாடே கஞ்சிக்கு வழி இல்லாம அலையட்டும். பழைய கஞ்சியை புடுங்கி குடிச்சா சமத்துவமா? இருக்கறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கலைனாலும் பரவாயில்லை. அவங்ககிட்டேருந்து புடுங்காதீங்க’ னு பன்ச் அடிப்பாரு.
ஒரு ஸீன்ல அவர் சொன்ன டயலாக்கை வேற ஒரு ஸீன்ல மனோஜ் சொல்லுவாரு. அதை பார்க்கிற கவுண்டமணி சார் ‘ஆமா, எல்லாரும் என்னையே காப்பி அடிங்க. சொந்தமா யோசிக்காதீங்க’ம்பாரு.
அரசியல் டயலாக்கையெல்லாம் அவர் பேசும்போது நான் கூட கொஞ்சம் பயந்துகிட்டு ‘சார், பன்ச் பேசி முடிச்சுட்டு பொதுவாத்தான் சொன்னேன்னு ஒரு டயலாக் பேசிடுங்க சார்னு சொல்வேன். அதுக்கே அவர் ஏன்பா இதை சொல்லியே ஆகணுமா? அப்படியே இருக்கட்டுமே!னு சொல்வார். படத்தையே காலி பண்றா மாதிரி கூட டயலாக் விட்டுடுவாரு. அவர் ஆடியன்ஸ் சைட் தான் எப்பவுமே’’.
‘‘கவுண்டமணி ஸ்பாட்ல எப்படி?’’
‘‘ அவரோட டெடிகேஷனை பார்த்து நான் வியந்துருக்கேன். இந்த டயலாக்ஸ் எல்லாமே ஆன் த ஸ்பாட்ல அவர் பேசினது. என்னா நாலேட்ஜ் அவருக்கு தெரியுமா? இப்ப கூட அவ்ளோ புக்ஸ் படிக்கிறாரு. அதே மாதிரி சின்னவங்க, பெரியவங்கனு பார்க்காம எல்லாருக்குமே மரியாதை கொடுத்து பழகுவாரு. அரசியல்வாதிகள் பத்தி பேச ஆரம்பிச்சா அவ்வளவு ஆவேசமாயிடுவாரு. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அவருக்கு தெரியாத விஷயமே இல்லை. அவ்ளோ விரிவா பேசுவாரு. அவர் அடிக்கிற நக்கல்ல கூட ஒரு மெசேஜ் இருக்கும்.ரஜினி சாருக்கு சமமான மாஸ் அவருக்கு இருக்கு. அது இந்த படம் மூலமா இன்னும் அதிகமாகும்’’.