கார்த்திக் சுப்புராஜின் செயலால் ரஜினிக்கு அவப்பெயர்!

கட்டுப்படுத்துவாரா ரஜினி?

இன்று பெரும் குண்டு ஒன்றை தூக்கிப் போட்டிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். இவரே தயாரித்து பிரபுதேவா நடித்திருக்கும் மெர்க்குரி என்ற படத்தை தடையை மீறி வெளியிடுவேன் என்று கூறியிருப்பதுதான் அந்த குண்டு.

கடந்த ஒரு மாதமாக ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேலை நிறுத்தத்தை தனி ஒரு நபராக தகர்த்தெறிய துணிந்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு கண்டமேனிக்கு எதிர்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு துணிச்சலை உங்களுக்கு யார் கொடுத்தது? என்றும் கேட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்களில் பலர்.

இந்த மெர்க்குரி ரிலீசுக்குப்பின் அவர் ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்கிற தகவல் மக்கள் அறிந்ததுதான். கார்த்திக்கின் இந்த முடிவு, அவர் தன்னிச்சையாக எடுத்ததல்ல. இந்த ஸ்டிரைக்கை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களா ரஜினியும் சன்னும்? என்று ஆளாளுக்கு பேசிக் குமைகிறார்கள்.

இந்த கேள்வியில் உண்மை இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் கார்த்திக் சுப்புராஜின் இந்த அடங்காமைதான் இந்த சந்தேகத்திற்கெல்லாம் காரணம் என்பதை மறுக்க முடியாதல்லவா?

தட்டி வைங்க தலைவா… இல்லேன்னா பேரு கெட்ரும்!

Karthik SubbarajMercurry tamil Movieprabhu devarajinikanthsun picturesTamil Film Strike
Comments (0)
Add Comment