சீச்சி… போ…போ… தொகுப்பாளினி ரம்யா புதிய முடிவு

‘சுத்தமா குளிக்க சோப்புக்கட்டி கொடுக்கும்னு பார்த்தா, மொத்தமா குளிக்க நாமக் கட்டி கொடுத்துடுச்சே நம்ம சினிமா’ என்று நொந்து போயிருக்கிறார் தொகுப்பாளினி ரம்யா. (பார்றா… இப்ப கூட தொகுப்பாளின்னுதான் சொல்ல வருதே தவிர, நடிகை ரம்யான்னு சொல்லத் தோணுதா?)

சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்த தொகுப்பாளினிகள், சினிமா ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு வருவதும் வந்த கொஞ்ச நாளிலேயே இதுக்கு அது தேவலாம் என்று ஓடுவதும் ஒன்றும் புதிதல்ல. ஸ்வர்ணமால்யா மாதிரியான தொகுப்பாளினிகளுக்கு ரத்ன கம்பளம் விரித்த அதே சினிமா, அதற்கப்புறம் சாக்கு துணியை கூட விரிக்காமல் விட்டதால் வந்த விளைவு? அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்த ஏரியாவில் ரொம்ப தெளிவாக இருந்த ஒரே தொகுப்பாளினி பெப்ஸி உமாதான். ஷங்கரே அழைத்தும், ஸாரி என்றவர் அவர்.

விஜய் தொலைக்காட்சியில் வூடு கட்டி அடித்த ரம்யாவுக்கும் அப்படியொரு சினிமா வாய்ப்பு வந்தது. இனிமே சினிமாதான் என்று நம்பியவர் சின்னத்திரையை மட்டுமா உதறினார். கட்டின புருஷனையும் உதறிவிட்டார். கடைசி ரிசல்ட்? சினிமாவும் இவரை கைவிட்டுவிட்டது. போன புருஷனும் ரிவர்ஸ் கியர் போடவில்லை. இத்தனைக்கும் மணிரத்னம் மூலம் ஓ.காதல் கண்மணி படத்தில் அறிமுகம் ஆனார் ரம்யா. அதற்கப்புறம் மாஸ் என்ற படத்தில் நடித்தார். நடுநடுவே விழா மேடைகளை அலங்கரித்தவர் அதற்கும் சிறிது காலம் ஓய்வு கொடுத்திருந்தார்.

இப்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஐக்கியம் ஆகிவிட்டார். இனிமே சினிமான்னு யாராவது வந்தீங்க…? இந்த ரம்யாவோட நிஜ முகத்தை பார்க்க வேண்டி வரும் என்று அவர் பலத்த எச்சரிக்கை விடுத்திருப்பது வானிலை அறிக்கை ரமணன் வரைக்கும் கேட்டு, புயலின் வேகத்தை அறியும் கருவியோடு ரம்யா வீட்டுப் பக்கம் திரிகிறாராம் அவர்.

கோவம்னா கோவம் அவ்ளோ கோவம் இந்த சினிமா மீது ரம்யாவுக்கு. வராதா பின்னே?

https://youtu.be/bwssCHOVRp4

cinema rejectedmaasManitratnamOh kadhal kanmanipepsi umaswarna malyaTV Compere Ramyavijay tv
Comments (0)
Add Comment