முன்ஜாக்கிரதை முத்தண்ணா சூர்யா!

பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்கிறது ஒரு பொன்மொழி. இது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கழுத்தை கம்பி வலைக்குள் நீட்டி, மீண்டும் இழுக்க முடியாமல் தவிக்கும் திடீர் விஐபிகளுக்கு நன்றாகவே புரியும். இவர்களாவது பரவாயில்லை. சாதாரண ஹீரோவாக இருந்தாலும் சரி, மார்க்கெட்டில் மங்காத்தா விளையாடும் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் சரி, பேசாமலிருப்பதே பெருமை என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ரஜினி, அஜீத் போன்ற படா படா முன்னணி ஹீரோக்கள் அநாவசியமாக பேட்டி கொடுப்பதேயில்லை. அந்த லிஸ்ட்டில் சூர்யாவும் சேந்திருப்பது பெருமைதான். தப்பி தவறி அவர் பேட்டி கொடுக்க நேர்ந்தாலும் சர்வ ஜாக்கிரதையாக அந்த நிருபரை கையாள துவங்கியிருப்பதுதான் பகீர் திகீர்.

நெருக்கமான… தெரிந்த நிருபர்கள் என்றால் மட்டுமே பேட்டி. அதுவும் எப்படி தெரியுமா? ‘உங்களை எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நாம உட்கார்ந்து பேசி பேட்டி எடுப்பதெல்லாம் ஓல்டு ஸ்டைல். நீங்க உங்க கேள்விகளை எழுதி கொண்டு வந்து கொடுத்துட்டு போயிருங்க. நான் போன்லேயே உங்களுக்கு பதிலை படிச்சு காட்டிடுறேன். அல்லது எழுதியே அனுப்பி விடுகிறேன்’ என்கிறார்.

அப்படி போன ஒரு நிருபருக்கு நேர்ந்த அனுபவம் செம! கேள்விகளை படித்துவிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் கீழே பதிலை எழுதி வைத்துக் கொண்டு அவரை அழைத்த சூர்யா, நீங்க கேட்ட முதல் கேள்வி… இது. (படித்து காட்டுவாராம்) அதற்கான பதில் இது. (அதையும் படித்துக் காட்டுவாராம்) இந்த கேள்வி பதில் தாள் உங்ககிட்ட ஒரு காப்பி இருக்கட்டும். எங்கிட்ட ஒரு காப்பி இருக்கட்டும் என்று அவர் சொல்வதை கேட்டு கிர்ராகி கிடக்கிறது நிருபர் வட்டாரம்.

போபர்ஸ் ஊழல் வழக்கே ஒண்ணுமில்லாம முடிஞ்சுருச்சு. இந்த லட்சணத்தில் இவ்வளவு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக ஒரு பேட்டி!

anjaaninterviewSlidesuryasurya fans club
Comments (1)
Add Comment
  • வாசகன்

    பின்ன சும்மாவா?
    அவரு ஒண்ணு சொன்னா நீங்க ஒம்போதா எழுதுனா என்னதான் பண்ணுவாரு?