பசங்க 2 ஓடும் தியேட்டர்களில் கட் அவுட் ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம்! ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களை அள்ளிக் கொண்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஏற்கனவே தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை, கல்விப்பணிகளை ஆற்றிவரும் அவர், இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களை தத்தெடுத்திருக்கிறார். இன்னொரு புறம் தனது குடும்பத்தின் சார்பாக 25 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாகவும் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில் வரும் 24 ந் தேதி அவர் நடித்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க 2 வெளிவரவிருக்கிறது. தமிழகம் தற்போது இருக்கிற சூழலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வேண்டாம், பிறந்த நாள் வேண்டாம், எந்திரன் 2 படத்தின் துவக்கவிழாவுக்கு ஆடம்பரங்கள் வேண்டாம் என்று பரவலாக முடிவெடுத்துள்ள நிலையில், சூர்யாவும் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது-

amalapaljothikapandirajpasanga2Slidesurya
Comments (0)
Add Comment