பாகுபலி2 பஞ்சாயத்து முடிந்தது! பத்து கோடி நஷ்டத்துடன் இன்னிங்சை துவங்கினார் மெயின் டிஸ்ட்ரிபியூட்டர்!

பாகுபலி படத்தின் முதல்பாகம் தந்த உற்சாகமும், நாடித்துடிப்பும் இரண்டாம் பாகத்தின் வியாபாரத்தின் மீது ஏறி நின்று டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் வெறும் பத்தரை கோடிக்கு விற்கப்பட்ட பாகுபலி, அப்படியே பார்ட்2 என்றதும் 35 கோடிக்கு விற்பனை ஆகியது. இப்படி எல்லா லாங்குவேஜிலும் முதல் பார்ட்டுக்கும் இரண்டாம் பார்ட்டுக்குமான வியாபார இடைவெளியை கேட்ட மாத்திரத்தில் யம்மாடியோவ்… ஆகிறார்கள் ஒவ்வொருவரும்.

உலகம் முழுக்க ஐயாயிரம் தியேட்டர்களில் ரிலீஸ். அமெரிக்காவில் மட்டும் 1500 தியேட்டர்களில் ரிலீஸ் என்று பம்மாத்து காட்டும் பாகுபலி2 நேற்று இரவு வரை ஐ.சி.யூவில் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

நேற்றைய இறுதிகட்ட நிலவரப்படி கே.புரடக்ஷன்ஸ் ராஜராஜனுக்கு தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்றிருக்கும் க்ரீன் புரடக்ஷ்ன்ஸ் சரவணன் தர வேண்டிய இறுதி பேமென்ட் பதினேழு கோடி. அதை புரட்டவே முடியாதளவுக்கு இருந்தாராம் அவர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே பஞ்சாயத்து பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, மதுரை அன்புச் செழியன் ஆகியோர் ராப் பகலாக கண்விழித்துப் பேசியதில், ராஜராஜன் பத்து கோடி ரூபாயை விட்டுக் கொடுத்தாராம். மிச்ச ஏழு கோடியை விநியோகஸ்தர்கள் தலையில் கட்டினார்கள்.

எப்படியோ? பலவித இடையூறுகளை தாண்டி திரைக்கு வரப்போகிறது பாகுபலி2.

ஆவலாக இருக்கிற ரசிகனுக்கு பார்ட் ஒன் அனுஷ்காவ காட்டி பல் இளிக்க விட்றாதீங்கப்பு…!

https://youtu.be/AERkllB8dks

anushkaarulpathibagubaali2bagubali openingbagubali showk productionsmadurai anbuchezhiyanPrabassatyarajsri green productionSS Rajamoulithamanna
Comments (0)
Add Comment