நேர்வழியில் வந்தால்தான் கால்ஷீட்! வியக்க வைத்த அரவிந்த்சாமி!

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் என்பதை மூன்று வேளையும் தின்று தின்றே நிரூபிப்பவர்கள் தமிழ்சினிமாக் காரர்கள்தான். எல்லா படங்களும் ஏதோ ஒன்றின் காப்பியாக இருப்பதை அண்மைக்காலமாக அதிகம் உணர முடிகிறது. ஆனால் இந்த திருட்டை சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார்கள் ரசிகர்கள். இது அந்த படம்டோய்… என்று அடுத்த வினாடியே சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மானத்தை வாங்குவார்கள். அப்படியிருந்தும் திருட்டே ஜோலி. தினந்தோறும் ஜாலி என்று நடமாடுகிறது தமிழ்சினிமா.

போகட்டும்… லேட்டஸ்ட் அதிரடி என்ன?

என்னமோ நடக்குது, அச்சமின்றி பட இயக்குனர் ராஜபாண்டி, அரவிந்த்சாமியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இவர் பாதி கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது எந்தப்படத்தின் காப்பி என்பதை புரிந்து கொண்ட அரவிந்த்சாமி, “இதில் நடிக்கறது பற்றி பிரச்சனையில்லை. ஆனால் அந்தப்படத்தின் தமிழ் ரைட்ஸ்சை முறையா பணம் கொடுத்து வாங்கிட்டு வாங்க. அப்புறம் கால்ஷீட் தர்றேன்” என்றாராம்.

முறையாக ரைட்ஸ் வாங்கும் முயற்சி நடந்து வருகிறது.

அரவிந்த்சாமியின் கொள்கையை அத்தனை பேரும் கடைபிடித்தால், திருட்டுப்பட்டம் ஏன் வருகிறது? சிந்திங்க படைப்பாளிகளே…

AchamindriAravind SamiEnnamo nadakkuthuHollywood Copy Movies In TamilRajapandi
Comments (0)
Add Comment