கவிதாயினியிடம் கவிழ்ந்த இயக்குனர்! 25 லட்சம் அவுட்?

என்னத்த கன்னையா மாதிரியான பர்சனாலிடி பயில்வான்களை பார்த்து, “நீங்க எம்ஜிஆர் மாதிரியே இருக்கீங்க” என்று சொன்னால் கூட, அப்படியே நம்பும் ‘மென்ட்டல் ஸ்லிப்’ ஆசாமிகள் இருக்கும் வரைக்கும் கோடம்பாக்கத்தில் தினம் ஒரு வெட்டுக் குத்துதான். அதிலும் நிமிஷத்தில் கிராஸ் ஆகும் மோகினிகளின் வர்ணனை கேட்டு கர்ணனை போல மாறும் பர்ஸ் பார்ட்டிகள், பர்சையும் தொலைத்து, மானத்தையும் இழப்பது கோடம்பாக்கத்தில் அடிக்கடி நிகழும் அபாயம்.

அப்படியொரு அபாயக்கட்டத்தில் சிக்கி, இழந்ததை வெளியே சொல்லவும் முடியாமல், விட்டதை பிடிக்கவும் முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறாராம் ஒரு இயக்குனர். இவரை ஏமாற்றியவர் ஒரு கவிதாயினி என்பதுதான் ஐயகோ!

இவரது கவிதைகளை படித்தால், சரோஜாதேவி புத்தகம் படிப்பதை போல அவ்வளவு ‘டேஸ்ட்’டாக இருக்கும். இதுதான் பெண்ணுரிமை என்று பினாத்திக் கொண்டிருக்கும் அவருக்கு, பெரும்பாலான ஆண் ரசிகர்கள் இருப்பதால், கலையுலகமும் பத்திரிகையுலகமும் கூட இவரது கவிதைக்கு அடிமை. கவிதைக்கு மட்டுமா? கதை சொல்லும் அவரது கண்களுக்கும் கவர்ச்சிகரமான சிரிப்புக்கும் கூடதான். இவர்தான் நம்ம இயக்குனரைத் தேடி வந்து ஒரு கதை சொன்னாராம். சின்ன பட்ஜெட். சிக்கென்ற சப்ஜெக்ட். நிஜமாகவே படம் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இவரும் முதல் கட்டமாக 25 லட்சத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

அவ்வளவுதான்… பணத்தோடு போனவர் அதற்கப்புறம் எவ்வித தொடர்புக்கும் சிக்கவில்லையாம். படமும் வளரவில்லை. நட்பும் வளரவில்லை. வேறெந்த மண்ணாங்கட்டிக்கும் வழியில்லை. போச்சே 25 லட்சம் என்ற கவலைக்கு ஆளான இயக்குனர், எப்படியோ தேடிப்பிடித்து பணத்தை திருப்பிக் கேட்டால்…. “பாலியல் புகார் கொடுப்பேன். பரவாயில்லையா?” என்கிறாராம் கவிதாயினி.

ஹ்ம்…‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என்று களமாடுகிற எல்லாருக்கும் கிடைக்கிற முடிவுதான். மனசை தேத்திக்கோங்க இயக்குனரே!

25LakhsKavithayiniTamil Film DirectorWomen poet
Comments (0)
Add Comment