சிருஷ்டியின் கெஞ்சலுக்கு செவி சாய்க்காத உதயநிதி!

நடிகைகள் கெஞ்சினால் நல்ல பாம்பு என்ன…, நாக்கு பூச்சிக்கூட படம் எடுக்கும். ஆனால் அப்படியொரு அழகு நடிகை கெஞ்சிய பின்பும், செய்வதறியாது கையை பிசைந்து நின்றிருக்கிறார் உதயநிதி. அட இதென்னங்க அநியாயம்?

சரவணன் இருக்க பயமேன் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. கொளுத்துகிற வெயிலாம் அங்கே. கொடுமை என்னவென்றால், இந்தப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்கி வரும் எஸ்.எழில், ஒரு ஆட்டோ சைஸ் கேரவேனுக்குக் கூட ஏற்பாடு செய்யவில்லை. அதற்கு பதிலாக, ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே ஒதுங்கிக் கொள்ள கொஞ்சம் நிழலுக்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஸ்பாட்டுக்கு போய் இறங்கிய சிருஷ்டி, கேரவேன் எங்கே என்றுதான் முதலில் தேடினாராம். செம ஷாக். கேரவேன் வராதும்மா என்று கூறியிருக்கிறார்கள். பதறியடித்த சிருஷ்டி, “சார்… இந்த வெயில்ல கேரவேன் இல்லாம எப்படி சார்?” என்று படத்தின் ஹீரோ உதயநிதியிடம் கெஞ்ச, அவரோ டைரக்டர் எஸ்.எழிலிடம் கேட்டிருக்கிறார்.

“சார் நம்ப பட்ஜெட்ல அதுக்கெல்லாம் வழியில்ல. அட்ஜஸ்ட் பண்ணிட்டு நடிக்க சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம் ஈவிரக்கம் இல்லாமல்.

உதயநிதி விரலசைத்தால், உடன்பிறப்புகள் கூட்டம் கடலென திரள்கிற அளவுக்கு தெம்பு இருந்தும், ஒரு துக்கடா கேரவேனுக்கு வழியேற்படுத்தி தராமல் அமைதிகாத்துவிட்டாராம் அவர்.

அப்புறம்? கரண்ட் இல்லாத பிரிட்ஜுக்குள், புழுங்கி புழுங்கி வதங்கிப் போனது முள்ளங்கி பத்தை!

https://youtu.be/6bcSomzqcGg

regina casantras ezhilsaravanan irukka bayamenShrusti Dangesooriudhayanithi stalin
Comments (0)
Add Comment