இதற்காகதான் ஆசைப்பட்டாரா விதார்த்? க்யூவில் நிற்கும் பாராட்டுகள்!

மணிகண்டன் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்பதை காக்கா முட்டை நிரூபித்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பே துவங்கப்பட்ட குற்றமே தண்டனை நிரூபிக்குமா? அவர் பேசுவதை கேட்டால், அதிலென்னங்க சந்தேகம்? என்பதை போலவே இருக்கிறது. “நம்ம சினிமாவில் மக்களை ஒரே மாதிரி பழக்கப்படுத்தி வச்சுருக்கோம். அதாவது ஒரு படம்னா, அதில லவ் இருக்கணும். சென்ட்டிமென்ட் இருக்கணும். காமெடி இருக்கணும். பாட்டு இருக்கணும் என்றெல்லாம் ஒரே பாக்ஸ்ல எல்லாத்தையும் போட்டுக் கொடுத்து பழக்கப்படுத்திட்டோம்”.

“குற்றமே தண்டனை, அந்த மனநிலையை மாற்றக்கூடிய படமா இருக்கும். எந்த இடத்திலும் வலிய திணிக்கப்பட்ட காட்சிகள்னு எதுவும் இருக்காது. படம் துவங்கியவுடனேயே ஒரு சம்பவம் நடக்கும். அதை தொடர்ந்து வர்ற காட்சிகள் அத்தனையும் அதன் இயல்பு மாறாமல் அப்படியே போய் கொண்டிருக்கும். முக்கியமா படத்தில் பாட்டு இல்ல” என்றார்.

“படத்தில் விதார்த்துக்கு செம சவாலான ஒரு கேரக்டர். அதாவது கண்ல கோளாறு உள்ள ஒருவர். அந்த கோளாறும் ரொம்ப வினோதமானது. எதிர்ல நிக்கிறவங்களை மட்டும் தெரியும். சைட்ல, பின்னாடி நிக்கிற யாரையும் தெரியாது. அப்படி குறையுள்ள ரெண்டே ரெண்டு பேர் சென்னையில் இருந்தாங்க. அவங்களை தேடிக் கண்டுபிடிச்சோம். அவங்களை பார்த்து அப்படியே தன்னை உருவாக்கிகிட்டாரு விதார்த். சுத்தமா கண் தெரியாதவரா கூட நடிச்சுடலாம். ஆனால் இந்த பெக்குலியர் பிரச்சனை வர்ற ஆளா நடிக்கறது சாதாரண விஷயமில்ல. இந்த படம் வந்தபின், விதார்த்தின் இடம் தமிழ்சினிமாவில் வேற மாதிரி எழுதப்படும் ” என்றார் மணிகண்டன்.

உலகத்தின் பல நாடுகளில் குற்றமே தண்டனை திரையிடப்பட்டு, நிறைய பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கிருச்சு. பார்வையாளர்கள் சொன்ன ஒரு விஷயம்தான் என்னை நம்பிக்கையோட வச்சுருக்கு. இந்தப்படம் வந்ததும் என்னோட இடம் என்னன்னு பார்க்கதானே போறீங்க என்றார் விதார்த். இப்பவே அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க, ஆறேழு தயாரிப்பாளர்கள் தயாரா இருக்காங்களாம்!

குற்றம், தண்டனை… அப்புறம் குதூகலமா விதார்த்?

 

Ashwarya RajeshFestivel FilmilayarajaKakkamuttai ManikandanKutramey DhandanaiPooja Devriyavidharth
Comments (0)
Add Comment