யோகிபாபுவின் திருத்தணி சென்ட்டிமென்ட்!

திரும்புற இடமெல்லாம் விரும்புற ஆளா மாறிட்டார் யோகிபாபு. தியேட்டரில் அவர் முகம் தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். இந்த கொடுப்பினை அவ்வளவு சீக்கிரம் வாய்க்காது. ஆனால் அதை லபக்கென்று பிடித்ததும் இல்லாமல், தினந்தோறும் மண்டையை கசக்கி விதவிதமாக காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். சக ஹீரோக்களே, “யோகிபாபு கிடைக்கிறாரா பாருங்க” என்று சொல்கிற அளவுக்கு நிலைமை உச்சத்திலிருக்கிறது.

“நடையா நடந்த ஆளுங்கண்ணே நம்மள்லாம். இப்ப எங்க போனாலும் நாலு வீலர்தான் வேணும்னு அடம் பிடிச்சா, அந்த இயற்கையே சும்மாயிருக்காது” என்று கூறிவிடுகிறாராம் யோகிபாபு. இப்பவும் கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் போகிறவர்கள், யோகிபாபு யாருடைய டூ வீலரிலாவது டபுள்ஸ் அடிப்பதை பார்க்கலாம்.

இவ்ளோ தூரம் நான் வளர்ந்ததுக்கு காரணம், அந்த திருத்தணி முருகன்தான் என்கிற யோகிபாபு, ஒவ்வொரு வருஷத்தின் முதல் நாளும் திருத்தணிக்கு போய் முருகனுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். இந்த வருஷம்? எவ்ளோ பிசியா இருந்தாலும் முதல்ல முருகன்தான். அப்புறம்தான் மற்றதெல்லாம் என்கிறார்.

கையிலிருக்கிற வேலாயுதத்தை விற்றாவது யோகிபாபுக்கு பொரிக்கடலை வாங்கிக் கொடுப்பாரு போலிருக்கே முருகன்?

https://youtu.be/H66wgN-gC68

andavareymurugasentimentspiritualtamil cinema comediantemplethiruthaniyogi babu
Comments (0)
Add Comment