தியேட்டர்களில் தேசிய கீதம்! கமல் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

டெங்கு கொசுவை கூட சமாளித்துவிடலாம். இந்த திடீர் கொசுவை என்ன செய்வது என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கோஷ்டிகள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, இன்டர்நேஷனல் மீடியாவையே கூட தன் வீட்டுக்கு வரவழைக்கிற அளவுக்கு நாள் தோறும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் கமல்.

இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமி கமல்ஹாசனை பேட்டியெடுத்திருக்கிறார். அப்போது கமல் கூறிய பதில்கள் மிக முக்கியமானவை. அவை நறுக்கென்று கீழே-

1. நான் மோடி, சந்திரபாபு நாயுடு, சித்தராமையாவை சந்திக்க உள்ளேன்…

2. எனது கட்சிக்கு வருமான வரி கட்டும் மத்திய தர வர்க்கத்தினர் பணம் கொடுப்பார்கள்.

3. ரஜினியின் ஐடியாலஜியில் எனக்கு சில மாறுபாடுகள் வந்தாலும் இருவரும் சேர்ந்து எல்லைகளை வகுத்து கூட்டாக அரசியல் செய்ய முற்படுவோம்….

4. தேசிய கீதம் பாடலை பொது இடங்களில் போடும்போது மரியாதை செலுத்த வேண்டும் எனும் கட்டாய உத்தரவை எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் பொது இடங்கள் பீச், பார், உணவகங்கள். சினிமாவிற்கு சிலர் குடித்து விட்டு வருவதால் அது மதிப்பிற்குரிய இடமல்ல…

5. ரஜினி புதுக் கட்சி தொடங்கினால். அது குறித்த எனது கருத்தை அவரிடம் தனியாகச் சொல்வேன். இந்தப் பேட்டியில் சொல்ல மாட்டேன்.

6. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை முதலில் வரவேற்றாலும் அதை இன்னும் நன்றாக திட்டமிட்டு நிறைவேற்றி இருக்கலாம் என்றுதான் சொன்னேன். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சரியானதே…

7. இந்துத் தீவிரவாதம் என நான் கூறவில்லை. மொழி மாற்றம் செய்யும்போது தவறாக கூறிவிட்டார்கள்.

8. பினராய், மம்தா, கெஜ்ரிவால் சந்திப்புகளால் நான் பிஜேபி எதிர்ப்பாளராக பார்க்கக் கூடாது. எல்லோரையும் சந்திக்க உள்ளேன். மோடி உட்பட…

aravind kejrivalChandrababu Naidukamal haasanKamal in politicsMamtha Barjinarendra modiNational anthem in theatersPinarayi VijayanrajinikanthSiddharamaiyaTN politics
Comments (1)
Add Comment
  • Krishnan

    ’பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினி’ என்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழக ஊடகங்கள் ரஜினியை நம்பி பிழைப்பு ஒட்டி வருகிறார்கள் என்றால் மிகையில்லை.எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போது ரஜினியை திட்டித்தீர்த்து ஒரு ’கட்டுக் கதையை’ அரங்கேற்றுவார்கள். ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு அல்வாவாக இனிப்பதால் அதை விழுந்து விழுந்து படிப்பார்கள். ரசிகர்களோ என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று வாங்கிப் படித்து பழிக்குப் பழி திட்டித் தீர்ப்பார்கள். ஆன்லைன் வியாபாரிகளுக்கு ’ஹிட் ரேட்’ உச்சத்தைத் தொடும். சமூக வலைத்தள வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு , ஷேர் செய்ய புதுசா புதுசா லிங்க்குகள் கிடைக்கும். இப்படி ஒரு ஊடகம் பண்ணினதைப் பார்த்து அதே மேட்டரை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இன்னொரு ஊடகம் பண்ணுவார்கள். அடுத்த வேறு ஏதாவது மேட்டர் கிடைக்கிற வரைக்கும், இது தொடரும். டிசம்பர் 12 நெருங்க ஆரம்பித்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு ரஜினி மேட்டரை கையில் எடுத்துக் கொள்வார்கள். இதோ டிசம்பர் 12க்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். இந்த வருடம் அவர்களுக்கு கிடைத்திருப்பது ‘ ரஜினியின் தனிக்கட்சி’ சும்மாவே ஆடுறவங்க, அரசியல் கட்சி மேட்டர்ன்னா சூப்பரா ஆட மாட்டாங்களா என்ன? ஆரம்பிச்சிட்டாங்க. பிரபல வாரப்பத்திரிக்கை ஒரு கதையை அரங்கேற்றியது. அடுத்து அடுத்து, பத்திரிக்கைக்காரங்களும், டிவிக்காரங்களும், ஆன்லைன் வியாபாரிகளும் ஆரம்பிச்சிட்டாங்க. டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாராம். ரஜினிக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் கிடைத்ததாம். இஷ்டம் போல் இழுத்து எழுதி பக்கத்தை நிரப்பியிருக்கிறார்கள் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எப்போது என்பதில் தான் கேள்வி இருக்கிறது. தற்போது மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி இரண்டும் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று எந்த ஒரு மனிதாபிமானம் உள்ளவராவது செய்வாங்களா? இன்றைக்கு ரஜினியை விட மனிதாபிமானம் கொண்டவர்கள் யாருமே இல்லை எனலாம். யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என்பது தான், எப்போதுமே அவருடைய நிலைப்பாடு,கட்சி அறிவிப்பை வெளியிட்டால், ரசிகர்கள் கொண்டாடத்தின் உச்சிக்கு போய்விடுவார்களே!. பொதுமக்கள் இன்னல்களில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் ரசிகர்களின் கொண்டாட்டம், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமே! இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க அவர் என்ன திடீர் அரசியல்வாதியா?.கட்சி தான் இல்லையே ஒழிய 25 ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினி தானே தமிழக அரசியல் விவாதத்தில் பிரதான இடம் பிடித்தது. ரஜினியின் இலக்கு சட்டசபை தேர்தல் தான். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக, அது வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.அப்படி இருக்கையில் டிசம்பர் 12ம் தேதி அடிச்சுபிடிச்சு அரசியல் கட்சி அறிவிக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அரசியல் கட்சி தொடங்குவதற்கான அத்தனை அடிப்படை வேலைகளையும் அவர் ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளார். இன்னும் பணிகள் முழுமை அடைந்ததாக தெரியவில்லை.நமக்குத் தெரிந்த வரையில், வரும் டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கே ரசிகர்களுக்கு தடை போட்டு விடுவார் என்றே தெரிகிறது. அரசியல் கட்சி அறிவிப்பு என்பதல்லாம் ஊடகங்களின் வழக்கமான கல்லா கட்டும் வேலை..ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு, தமிழக அரசியல் வானிலையைப் பொறுத்தே அமையும்