பசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல! -டைரக்டர் சரண்டர்!

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி. தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி? ‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் [...]

ஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி! ஐயோவாகும் ஆண்கள்!

‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்றார் வீட்டுப்பாட இயக்குனர் விசு! அவரது டைப் படங்களுக்கு ரசிகர்கள் மூடு விழா கண்டுவிட்டாலும், அவர் சொன்ன கருத்து என்னைக்கு கருத்துச்சு? சந்தோஷம், அழுகை, துக்கம், சிரிப்பு, கண்ணீர், கைகலப்பு என்று ஒவ்வொரு குடும்பமும் கலந்து கட்டிதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காற்றின் மொழி படத்திற்காக ஜோதிகா சொன்னது போல பத்து கட்டளைகளை எழுதி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். கருத்து ஜோதிகாவுடையதா என்பது தெரியவில்லை. ஆனால் அதில் வழியும் உண்மைகளும் உரிமைகளும் ஆண்களின் [...]

நானே போராட்டத்தில் குதித்திருப்பேன்! ரஜினியின் ஆக்ரோஷ இரங்கல்!

கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி தமிழ் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ரஜினியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியது பெரிய சர்ச்சையை தூண்டியிருக்கிறது. (ரஜினி பேசினாலே சர்ச்சைதானே) இதோ- அவரது முழு ஸ்பீச்! கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய [...]

மீண்டும் அஜீத்! நெருக்கிப் பிடிக்கும் சத்யஜோதி!

உரிச்சு வச்ச வாழைப் பழமும், நறுக்கி வச்ச கொய்யாப் பழமும் ஒன்றல்ல! ஆனால் பல்லுக்கு சுவை. வயிற்றுக்கு இதம் என்ற வகையில் இரண்டும் ஒன்றுதான்! கிட்டதட்ட அப்படியாகிவிட்டது சத்யஜோதி, அஜீத் இருவரது காம்பினேஷன்! ‘விவேகம் திராபைதான். பரவாயில்லை. விஸ்வாசம் வயிற்றுக்கு நல்லது என்று நினைத்த சத்யஜோதி, அடுத்த படத்தையும் எனக்கே கொடுங்க’ என்று ஆர்வம் காட்டியதுதான் அஜீத் என்ற மாயப் பிசாசின் மகத்துவம். அதற்கப்புறம் வினோத் குமார் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த படத்தை போனிக்கபூர் தயாரிப்பதாக [...]

விஜய்… இல்லேன்னா பா.விஜய்! தேனாண்டாள் எடுத்த திடீர் முடிவு!

தேனாண்டாள் பிலிம்ஸ் கடைசியாக தயாரித்து வெளியிட்ட படம் மெர்சல்! பாகுபலிக்கு அப்புறம் பெரிய அளவு வசூலித்த தமிழ்ப்படம் இதுதான் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்குதான் தாங்கொணா துயரம். அதற்கு முன் அந்த நிறுவனம் வெளியிட்ட படங்களின் நஷ்டத்தை, இந்தப்படத்தின் லாபத்தில் கழித்துக் கொண்டார்கள் வியாபாரிகள். விளைவு? அடுத்த படமே எடுக்க முடியாதளவுக்கு சிக்கல். கட்... இந்த நேரத்தில் போய் தனது ‘ஆருத்ரா’ படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். படம் அநியாயத்துக்கு பிடித்துப்போக மீண்டும் களமிறங்கிவிட்டது தேனான்டாள். [...]

கணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…!

‘அதையும் தாண்டி புனிதமானது ‘ என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன். இவர் தான் ‘அப்பா ..வேணாம்ப்பா..’ என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர். கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப்போனால்..குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற […]

சாயிஷா தண்ணி பார்ட்டி? ஃபுல் மப்பு! ஆட்டோக்கள் காலி!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் இன்று அதிகாலையில் அதிவேகமாக காரில் வந்து நின்று கொண்டிருந்த ஆட்டோக்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மோதிய காருக்கு முன்னும் பின்னும் சேதம். அதைவிட பெரும் சேதம் விக்ரமின் இமேஜுக்கு. அதையெல்லாம் விட பெரும் சேதம், சில அப்பாவி இளைஞர்களின் ஸ்பேர் பார்ட்ஸ். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் மூன்று ஆட்டோ டிரைவர்கள். துருவ்வையும் அவருடன் வந்திருந்த மேலும் சில இளைஞர்களையும் பிடித்து தேனாம்போட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். போதை தெளிஞ்சதும் புத்தி [...]

விஸ்வரூபம்2 / விமர்சனம்

ஒட்டு போட்ட ஓவர் கோட், பனிரெண்டு கலர்களிலும் பல் இளிக்கிறது! பின்னே என்னவாம்? முந்தைய படத்தில் கழித்ததையெல்லாம் இந்தப்படத்தில் கொட்டிக் குமித்தால், பளபளப்பில்லாத பார்ட் 2 ரெடி! ஏரியல் ஷாட் இல்லாத லண்டன், எக்குதப்பான சி.ஜி காட்சிகள் என கமல்ஹாசனின் பர்பெக்ஷனில் கண்டமேனிக்கு சறுக்கல்! தீவிரவாதிகளை அடக்கக் கிளம்பிய ரா உளவுப் பிரிவை சேர்ந்த மேஜர் ஒருவரின் சாகசம்தான் ‘விஸ்வரூபம்2’. மேஜர் சுந்தர்ராஜனுக்கு நயன்தாராவை ‘ப்பேர்’ பண்ணிய மாதிரியிருக்கிறது அநேக காட்சிகள். கடைசியாக வெளியே வரும் ரசிகன், [...]

சுந்தர் சி, வெங்கட் பிரபு…! வச்சு செய்யும் சிம்பு!

‘முட்டை போட்ற கோழிக்கே ஆம்லெட் ஊட்டிவிடணும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சிம்பு. சுற்றமும் நட்பும் தவிர தன்னை, ஊரே சேர்ந்து உப்புமாவாக கிண்டிய நாட்கள் அவரது நினைவில் வந்து போனதன் விளைவு... அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொடுக்க வேண்டும். மளமளவென வருடத்திற்கு நாலு படங்களாகவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார் அல்லவா? ‘மாநாடு’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வெகு [...]

கேரளாவில் வெள்ளம்! முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா

பேய் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது கேரளாவில்! கொச்சி, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் போன்ற ஊர்களில் உள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து தவிக்கிறார்கள். மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில், மாநில அரசு பார்த்துக் கொள்ளும். மத்திய அரசு தேற்றிக் கொள்ளும் என்று நினைக்காமல் அவரவர் சக்திக்கு அவரவர் கை நீட்டுவதே சால சிறந்தது என்று நினைத்திருக்கிறார்கள் நடிகர்கள். அதுவும் தமிழகத்திலிருந்து நீளும் முதல் நம்பிக்கை, நம்ம சூர்யாவின் கை! உடனடியாக [...]

“முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்” ; ‘தீதும் நன்றும்’ படத்திற்கு சி.சத்யா பாராட்டு..!

நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எபோதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான […]

விஸ்வரூபம் 2 திட்டமிட்ட தேதியில் வருமா? நெருக்கடியில் கமல்!

வழக்கு, பஞ்சாயத்து, புலம்பல், அலம்பல் இல்லாமல் இப்பொழுதெல்லாம் உப்புமா படங்கள் கூட வெளிவருவதில்லை. அப்படியிருக்க, கமலின் விஸ்வரூபம் 2 மட்டும் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்துவிடுமா என்ன? பிரமிட் சாய்மீரா நிறுவனம் எப்பவோ கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வட்டியோடு கேட்டு வழக்கு போட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் பிரமிட் சாமிநாதன், இப்போது கிட்னி பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார் மனுஷன். இந்த நேரத்தில் கருணை தொகை என்று ஒரு தொகையையாவது கொடுத்து பிரச்சனையை [...]

திரையுலகத்தினர் கலைஞருக்கு அஞ்சலி!

மறையும் வரைக்கும் தமிழுக்கு உரமாக இருந்த கலைஞர், மண்ணில் உரமாகிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கும். அந்த வரலாற்று நாயகனை அரசியல் உலகம் இழந்து தவிப்பது எப்படியோ, அப்படியே கலையுலகமும் இழந்து தவிப்பதை நேற்று உணர முடிந்தது. வசன சினிமாவுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் ஓய்வு கொடுத்துவிட்டாலும், தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட கலைஞரின் வசனங்களுக்கு யாராலும் ஓய்வு கொடுத்துவிட முடியாது. சினிமாவிலிருந்து பல முதல்வர்களை எடுத்துக் கொண்டது தமிழகம். அவலர்களில் யார் […]

கூத்தடிச்சது போதும்! நல்லப்படங்களை நோக்கி தமிழ்சினிமா!

‘கடைக்குட்டி சிங்கம்’ கமர்ஷியல் படம்தான். ஆனால் கலெக்ஷன் ஃபுல் என்று சந்தோஷ ஏப்பம் விடுகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால் கமர்ஷியலாக படம் எடுக்குறேன் பேர்வழி என்று ஒரு யானையை ஒரு விரலால் தூக்கி அடித்துவிட்டு, பக்கத்திலிருக்கிற பனை மரத்தையும் பிடுங்கிப் போடுகிற கொடுமைக்கெல்லாம் விடை கொடுக்க வருகிறார்கள் நல்ல பட இயக்குனர்கள். முதலில் ராதாமோகன். அழகிய தீயே, அபியும் நானும், மொழி, பயணம், என்று அவர் இயக்கிய படங்களெல்லாம் ஆபாசமோ, அதிர வைக்கும் பைட்டோ, சுளிக்க வைக்கும் காமெடியோ [...]

அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்களுக்கு… இதையும் கொஞ்சம் பாருங்க!

கருத்தும் வேணாம்.. ஒரு குருத்தும் வேணாம். ஜாலியா புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா... என்று ரசிகர்கள் அலுத்துக் கொள்கிற அளவுக்கு மொக்கை போடுகிற இயக்குனர்கள், மெல்ல ஒழிந்துவிட்டார்கள். ஏனென்றால் மொக்கை படங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டுதான் தியேட்டரை விட்டு கிளம்புகிறார்கள் ரசிகர்கள். அப்படி வாரத்திற்கு நாலு படமாவது வந்து மண்ணை கவ்வுகிற நேரத்தில், சம்திங் டிபரண்ட் என்று வருகிற படங்களுக்கு மட்டும் நலங்கு வைத்து நம்பிக்கை தர தயங்குவதேயில்லை ரசிகர்கள். லேட்டஸ்ட் பிரமிப்பு ‘நான் செய்த குறும்பு’ என்ற படத்தின் [...]