மின்னாமலே மின்னும் நட்சத்திரங்கள்! “ரஜினி என்ற மகா மனிதர்….”

எல்லா மக்களுக்கும் சினிமா பார்க்க வேண்டுமென்பது லட்சியமில்லை. ஆனால் எல்லா சினிமாவுக்கும் மக்கள் பார்க்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. லோ பட்ஜெட் படங்களில் துவங்கி, மெகா பட்ஜெட் படங்கள், மினிமம் பட்ஜெட் படங்கள் என்று ரக வாரியாக உருவாகும் படங்களில் நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஆக்ஷன் இருக்கிறது. ஆட்டம் இருக்கிறது. முகம் தெரிந்த எல்லாரையும் பூமாலை போட்டு கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். முகம் காட்ட விரும்பாத, அல்லது அதற்கு அவசியமில்லாத இயக்குனர்களையும், எடிட்டர்களையும், இசையமைப்பாளர்களையும், ஆர்ட் டைரக்டர்களையும் […]

என்ன எழவெடுத்த காதல்டா இது? -கமலே வியந்த புதிய படம்!

ஒரு மேடையில் பாலசந்தரையும், பாரதிராஜாவையும் வைத்துக் கொண்டே இன்னொரு புது டைரக்டரை பார்த்து ‘இவர் வருங்கால பாலசந்தர்’ என்றும் ‘வருங்கால பாரதிராஜா’ என்றும் பாராட்டினால் எப்படியிருக்கும்? ஒருவேளை அந்த படத்தின் பாடல் காட்சிகளை பார்க்காமலிருந்தால் உடம்பெல்லாம் எரிந்திருக்கும். நல்லவேளை, பார்த்தோம்… அதனால் உடம்பெல்லாம் குளிர்ந்தது நமக்கு. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘நாளைய இயக்குனர் ’ என்கிற நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘மனது’ என்ற குறும்படம் வெற்றி பெற்றது. பதினைந்து நிமிடங்கள் ஓடிய அந்த படத்தை ‘விழா’ என்ற […]

ஓ… அதுவா? பிங் பாங்க்ல கிடைக்கும் போங்க…! -பாங்காக் பயண அனுபவங்கள் -4 -ஆர்.எஸ்.அந்தணன்

சதீஷின் விரல்கள் ஏன் நடுங்கின என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வப்படவில்லை. ஏனென்றால் காலை டிபனுக்கே கரப்பான் பூச்சியை வறுத்துப்போட்ட பயலுகளாச்சே இவனுக! ஆல்பத்துக்குள்ளே என்ன வச்சுருப்பானுங்கன்னு தெரியாதா? ‘ஜி… ஆல்பத்தை அவன்கிட்ட கொடுத்துட்டு மூட் இல்லேன்னு சொல்லிருங்க’ என்றேன். ‘வேணும்னா இங்க நல்ல இட்லி தோசை கிடைக்கிற இடம் ஏதாவது இருக்கான்னு கேளுங்க. அதுபோதும்’ என்று நான் நாக்கு ருசி ஏரியாவுக்குள்ளேயே நிற்க, அதற்குள் முந்திக்கொண்டர் லண்டன் நண்பர். ‘இங்க எங்க பாஸ் கிடைக்குது இதெல்லாம்?’ […]

செல்வராகவனுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த சிக்கல்! -ஆரம்பிச்சுருப்பா ‘இரண்டாம் கலகம்!’

ஆரம்பிச்சுருப்பா இரண்டாம் கலகம்! பெரிய டைரக்டர்கள் பலரும் செய்கிற முதல் தவறு இதுதான். ஒரு தலைப்பை கவுன்சிலில் பதிவு செய்வதற்கு முன்பாகவே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவது. இவர்கள் ஒரு தலைப்பை முடிவு செய்து அதை நிருபர்களிடம் கசியவிட்டு அது கவுன்சில் பதிவுக்கு வருவதற்கு முன்பே அதே தலைப்பை வேறொருவர் வைத்துவிடுவார். ஆனால் இதுபோன்ற எவ்வித குறுக்கு சாலையிலும் நடக்காமல் தனக்கே தோன்றிய ஒரு தலைப்பை வைத்து அதற்கு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார் ஒருவர். அதற்கப்புறம் அதே தலைப்பை பயன்படுத்தி […]

பிரபல நட்சத்திர ஓட்டலில் ரகளை, கலாட்டா… – வெட்கத்தை தொலைத்த ‘ஹிட்’ ஹீரோ!

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கலாட்டா இது. அதுவும் சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் ரிசப்ஷனில். அண்மையில் உதயமான ஒரு சேனலின் சார்பாக நடத்தப்பட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார் கலைஞானி கமல். இவர் மட்டுமல்ல, தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களும் ஹீரோயின்களும் கூட அங்கே வந்திருந்தார்கள். வாழ்த்தி பேசிவிட்டு அவர் கிளம்பிவிட்டாலும், அவரைப் போலவே அங்கு வந்திருந்த பல நட்சத்திரங்கள் மட்டும் கிளம்பவே இல்லை. காரணம் நிகழ்ச்சி முடிந்ததும் கொடுக்கப்பட்ட கிராண்டான பார்ட்டி. அதில் […]

அரை பட்டினி ஐஸ்வர்யா… நொறுக்குத்தீனி காயத்ரி…

மோனலிசா ஓவியம் மாதிரி எந்த பக்கம் நின்று பார்த்தாலும் ஏதோவொரு அழகையோ, அல்லது அழுகையையோ தருகிற முகம் காயத்ரிக்கு. இன்னமும் ஒரு அறிமுக நடிகை லெவலிலேயே அவர் இருந்தாலும், அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துவிட்டதுதான் காயத்ரியின் சாதனை. இருந்தாலும் ‘ரம்மி’ திரைப்படம் அவரது வாழ்வில் ரம்மியமாக அமையும் போல் தெரிகிறது. ‘இந்த படத்துல நடிக்கணும்னு என்னை நேர்ல பார்க்க வந்திருந்தார் டைரக்டர் பாலகிருஷ்ணன். வில்லேஜ் கதையை அவர் சொல்ல ஆரம்பிச்சதுமே நான் அப்செட். ஏன்னா என் […]

இப்போதைக்கு அமைதிதான் என்னோட பதில்! – கவுதம்மேனன்

அனில் அம்பானியாகவே இருந்தாலும், அமிஞ்சிக்கரை சேட்டிடம் டூவீலர் லோனுக்கு நிக்கணும்னு விதி இருந்தா அதை யாரால் மாற்ற இயலும்? அப்படிதான் ஆகிவிட்டது கவுதம் மேனனின் நிலைமை. இவரது அடுத்த படம் பற்றி ஆளாளுக்கு ஒரு செய்தியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அஜீத் இவரை அழைத்துக் கொண்டு ஏ.எம்.ரத்னத்தின் அலுவலகத்திற்கே சென்றிருந்தார். அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு துடியாய் துடித்தது மீடியா. பூனை நுழையுற இடுக்குல யானை நுழைஞ்ச மாதிரி, இந்த செய்திக்கே இன்னும் […]

ஆம்புலன்சுக்கு 108… அவசரத்திற்கு விவேக்! – தேனி கண்ணன்

சினிமாவில் என் நெருங்கிய நண்பர்களில் விவேக் சார் முக்கியமானவர். எனக்கும் விவேக் சாருக்குமான நட்பு பற்றி சொல்லி விடுகிறேன். நான் நடுச்சாமத்தில் போன் பண்ணினால் கூட எதையாவது ஒரு ஜோக் சொல்லி விட்டு “என்ன விஷயம் தேனி” என்பார். இது பத்திரிகையை மீறிய பாசம். திடீர்னு போன் பண்ணி “என்ன பேசி ரொம்ப நாளாச்சே” என்பார்  “நேற்று முந்தினம் தானே பேசினோம்.” என்ரு ஞாபகப்படுத்துவேன். அப்படி ஒரு ப்ரண்ட்ஷிப். நட்பு என்பதை விட அண்ணன், தம்பி, அப்பன், […]

நடிகை சாக்ஷி அகர்வால் துவங்கி வைத்த ஆடை அணிவகுப்பு

தமிழர்களின் பாரம்பரியத்தை உலகெங்கும் நிலைநாட்டும் விஷயங்களில்  குடும்ப அமைப்பு, தயாள குணம் ஆகியவற்றோடு தனித்தன்மை மிக்க புடவைக்கு என்றுமே தனியிடம் உண்டு. இவ்வளவு சிறப்புமிக்க புடவைகளின் சிகரமாக விளங்குவது பட்டுப் புடவைகள். அந்த பட்டுப் புடவைகளின்  பாரம்பரியத்தை உணர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன், இன்றைய தலைமுறை இளம்பெண்களுக்கு ஏற்றவகையில் புதியரக பட்டுப் புடவைகளை  அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்ரீ பாலம் சில்க். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீபாலம் சில்க், பெங்களூர் பெண்களின் தேவையை கருத்தில் கொண்டு இங்கும் […]

உயிர் இசை… மெய் இசை… உயிர் மெய் இசை… – முருகன் மந்திரம் – 02 “குடகுமலைக் காற்றில் வரும்,,,”

“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டாத”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அன்றைய நம்பியார், வீரப்பால ஆரம்பிச்சு, இன்றைய பிரகாஷ்ராஜ் வரை இந்த பழமொழி வில்லன்களுக்கு அவ்ளோ பொருத்தமா இருக்கும். ஒரு வகையில ராகதேவன் இளையராசாவுக்கும் இந்த பழமொழி பொருந்தும்னா, உங்களால நம்ப முடியுமா? ஆனா, காதலிக்கிற பாக்கியம் கெடைச்ச புண்ணியவான்களையும் புண்ணியவதிகளையும் கேட்டா, மைக்ரோ சிப் அளவு கூட சந்தேகப்படாம மண்டையில அடிச்சி மடேர்னு சத்தியம் பண்ணுவாங்க… ஆமான்னு. இசைஞானிக்குள்ள ஒரு அந்நியனா? ஆமா, அவருக்கே தெரியாத […]

எரிச்சல் பாலா… கிசுகிசு பார்த்திபன்…. உற்சாக கமல்… ‘என்றென்றும் புன்னகை’யுடன் ஒரு விழா

பொதுமேடைகளுக்கு வந்தால் என்றென்றும் எரிச்சலோடு இருக்க வேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தார்களோ, ‘என்றென்றும் புன்னகை’ பட விழாவிலும் சம்பிரதாயத்துக்கு கூட புன்னகை புரியாமல் அதே எரிச்சலோடு அமர்ந்திருந்தார் டைரக்டர் பாலா. இத்தனைக்கும் அவரை வாயாற புகழ்ந்து வயிறார நிறைந்தது அந்த மேடை. ‘இந்த மேடையில இருக்கிறதுக்கு ஒரே தகுதி கமல்ஹாசனுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர். கமல் பேச்சில் கரை புரண்டு ஓடியது உற்சாகம். ‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர […]

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஹீரோ, கவலைப்படுகிறது குடும்பம்!

மூன்றெழுத்து இளம் ஹீரோ ஒருவர், தீராத கஞ்சா பழக்கத்தில் சிக்கிக் கொண்டார். எந்நேரமும் அது இல்லாமல் இருக்க முடியாது என்கிறளவுக்கு ‘அடிக்ட்’ ஆகிப் போயிருக்கும் அவரை, மீட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது குடும்பம். யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்பதால், சொந்தமாக படம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் படப்பிடிப்புக்கு நினைத்த நேரத்தில் போய் பழகிய அவருக்கு, சொந்த பணத்தில் டிமிக்கி கொடுத்தால் நஷ்டம் நமக்குதானே என்கிற எண்ணம் வருமல்லவா? அதனால்தான் இந்த ஐடியாவாம். ‘தம்பிய எப்பவும் எங்கேஜ்டாவே […]

‘எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுங்க…’ ஆரம்பத்திற்கு ஆர்யா தந்த நெருக்கடி!

மதாராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி மாதிரி எப்பவாவது ஹிட் கொடுக்கிற ஹீரோதான் ஆர்யா. ஆனாலும் சமுதாயத்தில் நிலவி வரும் ஹீரோக்களின் பஞ்சத்தை காரணம் காட்டி, இன்னமும் அவரை முதல் தர நடிகராகவே வைத்திருக்கிறது கோடம்பாக்கம். சர்வம் என்கிற படத்தில் லேசாக ஊசலாடிக் கொண்டிருந்த ஆர்யாவின் மார்க்கெட்டை அஷ்டகோணலாக்கிய டைரக்டர் விஷ்ணுவர்த்தன், மீண்டும் அதே போன்றதொரு உயரிய லட்சியத்துடன் ஆர்யாவை பிடித்துப் போட்ட படம்தான் ஆரம்பம். இதில் அஜீத் ஹீரோ என்ற போதிலும் என்ன தைரியத்திலோ […]

இன்னொரு நடிகையும் பஞ்சாயத்துல சிக்கிட்டாரே….

எதற்குமே கவலைப்படாத சாமியார்களை கூட காவியை கிழிச்சுகிட்டு கமண்டலத்தை உடைக்க வைக்கிற வித்தை நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த கலை. சாமியார்களுக்கே அந்த கதி என்றால், சாதாரண தயாரிப்பாளர் என்னாவார்? ‘உயிர்மொழி’ படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த அத்தனை நிருபர்களுக்கும் ‘லைவ்’ ரிப்போர்ட் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் சண்முகப்ரியா. ஒரு மைனஸ் பற்றி சொல்வதற்கு முன்பாக இன்னொரு ப்ளஸ் பற்றி சொல்வதுதான் நடுநிலையாளர்களுக்கு அழகு என்பதால் முதலில் ப்ளஸ். முன்னதாக திரையிடப்பட்டது ஒரு காட்சி. தன் காதலனுடன் கண் பார்வையில்லாத […]

ராமராஜன் என்ற டவர் கோபுரம்… – வாழ்த்தி கவுரவித்த அமைப்பு

தமிழ்சினிமா என்ற கம்பீரமான குதிரையில் அமர்ந்து சில வருடங்கள் ராஜா மாதிரி சவாரி செய்தவர் ராமராஜன். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் சவால் விட்டு கலெக்ஷனை அள்ளியது அவரது படங்கள்! கரகாட்டக்காரன் 485 நாட்கள் ஓடி விநியோகஸ்தர்களின் கல்லா பெட்டியை ஒரு மினி ரிசர்வ் பேங்க் ஆக்கிய விஷயத்தை அவ்வளவு எளிதில் யாராலும் வரலாற்றில் இருந்து அழித்துவிட முடியாது. காலம் ஆடிய கோர தாண்டவத்தில் ராமராஜன் என்ற டவர் கோபுரம் சற்றே நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. […]

‘தெனாலிராமன்’ தலைப்பை மாத்துங்க… – வடிவேலு உத்தரவு

அரை மைண்ட் ஆசாமிகளாக இருந்தால் சுத்தம். தெனாலிராமன் டைட்டிலுக்கு முன் வரும் கஜபுஜ புஜபல என்பதையெல்லாம் மனப்பாடம் பண்ணவே ஆறு மாசம் ஒரு வருஷம் பிடிக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலையே பலி கொடுக்க தயாராகிவிட்டாராம் வடிவேலு. இவரது உத்தரவின் பேரில் படத்தின் தலைப்பை மாற்றப் போகிறார்களாம். எப்படி? அதுவும் வடிவேலுவின் சாய்ஸ்தான் என்கிறார்கள். படத்தின் கதைப்படி அந்தகாலத்தில் மதியூக அமைச்சராக இருந்த தெனாலிராமனின் ஆக்டிவ் மற்றும் அதிரடி சம்பவங்களின் தொகுப்புதான் இந்த படமாம். […]

தனுஸ்ரீ தத்தாவோட படத்தை வெளியிட விட மாட்டோம் – கோடம்பாக்கத்தில் குமுறல்!

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்திருந்த தனுஸ்ரீ தத்தாவை யாருக்காவது நினைவிருக்கிறதா? அதற்கப்புறம் கூட அவர் சாமியாராக போய்விட்டார் என்றும் மொட்டை அடித்துக் கொண்டார் என்றும் ஏகப்பட்ட அக்கப்போர்கள் மீடியாக்களில் உலவி அவரை நிரந்தர சாமியாராகவே ஆக்கினார்களே அவரேதான்? அதே தனுஸ்ரீ தத்தா நடித்த இந்திப்படம் ஒன்றை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்கள். ஊர்ல எவ்ளோ படம் சீண்டப் படாமலே கிடக்கிறது. இவர் நடித்த படத்தை எதற்கு வெளியிடுகிறார்களாம்? அதுவும் காவியை கட்டிக் கொண்டு கமண்டலத்தை தேடிப்போன […]

போக விடமாட்டோம்… வெங்கட்பிரபுவுக்கு செக்!

பிரியாணியில் வெறும் ஆணிதான்ப்பா நிறைய இருக்கு என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டு குமுறிக் கொண்டிருக்கிறாராம் வெங்கட்பிரபு. வேறொன்றுமில்லை, பத்து மாசம் ஆன பிறகும் வயித்துல சுமக்குற கொடுமை கர்பிணிக்குதானே தெரியும்? பிரயாணியை கிண்டிய கையோடு ரிலீஸ் பண்ணுவார்கள் என்று எதிர்பார்த்தால், அழகுராஜா முந்திக் கொண்டார். இந்த கடுப்பில்தான் போகிற இடத்திலெல்லாம் பிரி- ஆணி என்று வர்ணித்துக் கொண்டிருக்கிறாராம் வெங்கட்பிரபு. படம் வரும்போது வரட்டும். நாம வேற வேலையை பார்ப்போம் என்று வேறொரு கம்பெனிக்கு கதை […]