மாப்ளே, எனக்கு விட்டுக்கொடுத்துரு… – ஆர்யாவிடம் அலறிய ஜீவா

பெரிசா பிசினஸ் இல்லேன்னாலும் ‘பெரிஸ்ஸ்ஸ்ஸ்சா’ ஆசைப்படுற ஹீரோக்களின் பேராசை மனசுக்கு கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் உதாரணம் இருக்கிறது. அப்படி ஒரு உதாரணம்தான் நாம் சொல்லப் போவதும். கோ- படத்திற்கு பிறகு ஜீவாவுக்கு சொல்லும்படியாக ஒரு படமும் அமையவில்லை. தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாடி வருகிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் ஓடி ஒளிகிற அளவுக்குதான் சம்பளம் கேட்கிறாராம். இதோ ஒரு லேட்டஸ்ட் கிறுகிறு… ஃபாசில், ஷங்கர் போன்ற இயக்குனர்களிடம் மேனேஜராக இருந்த விமல் என்பவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். […]

ஹாரிஸ் ஜெயராஜின் மாளிகை – கடைகோடியில் பெற்றோர்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

வெள்ளை மாளிகையை பெயர்த்து எடுத்து வந்ததை போல தனது வீட்டை பிரமாண்டமாக கட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘எல்லாப்புகழும் ஏசுவுக்கே’ என்று கையெடுத்து கும்பிட்டால் கூட தப்பில்லை. ஏனென்றால் பிரார்த்தனை கீதங்களுக்கு பித்தளை ஈயம் பூசி அதையே காதல் கீதமாக்கி கொடுத்தவராச்சே? ஆனாலும் அந்த பாடல்களை ஹிட்டாக்குகிற நேர்த்தியில்தான் ஹாரிசுக்கு கல்லா நிரம்பி வருகிறது. இவரது தனிப்பட்ட சாமர்த்தியத்துக்கு இசை ரசிகர்கள் தன்னையே அடகு வைப்பதில் கூட தவறில்லை. ஆனால் பின்வரும் தகவல் ஒன்றை கேட்டால் ஆடிப்போய்(விடுவீர்கள்) […]

சூர்யா போனாலென்ன? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் இருக்காங்களே… – மேனேஜர் கூல்!

சூர்யா தன் மேனேஜரை நீக்கிய தகவல் காட்டு தீயாக பற்றிக் கொண்டு எரிய, மேனேஜர் மட்டும் செம கூலாகவே இருக்கிறாராம். ஏன்? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற முக்கிய நடிகைகளுக்கும் இவர்தான் மேனேஜர். சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சமந்தாதான் ஹீரோயின். அடிச்சு பிடிச்சு தடுக்கி விழுந்தாலும், நம்ம மடியில்தானே விழணும் என்கிற தெம்பில்தான் செம கூலாக இருக்கிறாராம் அவர். பொதுவாகவே இவரை மேனேஜராக வைத்துக் கொள்வதில் பல சமாளிப்ஸ், மற்றும் சந்தோஷங்கள் நிலவி வருகிறது […]

அஜீத்தை வம்புக்கு இழுக்கும் நடிகைகள்…?

‘இந்த கேள்வியை அஜீத்திடம் கேட்க முடியுமா உங்களால்?’ இப்படியொரு பூகம்ப பெருமூச்சை கோடம்பாக்கமே பொசுங்கிப் போகிற அளவுக்கு வீசிக் கொண்டிருக்கிறார்கள் சில முக்கியமான நடிகைகள். அஜீத்தையே வம்புக்கு இழுக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சா என்று பொத்தாம் பொதுவாக இந்த நடிகைகள் மீது கவலைப்படும் சிலர், ஏன் இந்த தைரியம்? அது எப்படி வந்தது? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப அவசியம். கடந்த ஒரு வாரமாகவே பற்றிக் கொண்டு எரிகிறது கோடம்பாக்கம். எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் […]

பண்ணைபுரத்தில் தவறவிட்டேன்… சென்னைபுரத்தில் அடைந்துவிட்டேன்… -ஆனந்த யாழை மீட்டுகிறேன் 04 -தேனி கண்ணன்

இந்த வாரத்தை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்கோடு ஆரம்பிக்கலாம்.. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் அது. இப்பலாம் எம்புள்ளய அடிச்சிட்டாரு, உன் புள்ளய அடிச்சிட்டாருனு வாத்தியார் மேலயே வழக்கு போடுறாங்க. பழனியப்பா வித்யாலயம் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் போது ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு ஆள் ஸ்கூலுக்கு வருவார். அந்த ஆளை பார்த்தாலே நெஞ்சுக்குள்ள ’கெதுக்’னு இருக்கும். காரணம் அவர் கையில வெச்சிருக்குற மூங்கில் குச்சி கட்டு. ஒரே அளவா வெட்டப்பட்டு பெருத்த பென்சில் […]

கலகம் ஆரம்பம்… – ஹன்சிகா மேனேஜருக்கு கல்தா!

அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு… என்று கூறிக் கொண்டே கைகளை மறைக்கிற வித்தை யாருக்கு தெரிகிறதோ, இல்லையோ? ஹன்சிகாவின் அம்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சிம்பு- ஹன்சிகா லவ் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்து நிற்பதால், உள்ளம் உலர்ந்து உறக்கம் தொலைந்து நிற்கிறார் இந்த பாசக்கார அம்மா. வெட்ட வெட்டதான் தாடி வளரும் என்பது போல, இந்த காதலும் வெட்ட வெட்ட வளர்ந்துட்டா என்ன செய்வது என்கிற கவலை ஒருபுறம் இருக்கிறது அவருக்கு. இருந்தாலும் சமாளிச்சுரலாம் என்கிற தன்னம்பிக்கையும் வளர்ந்து […]

“ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்…

    ‘ஆண்டவா… பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல ஆரம்பத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்று ஜகா வாங்கினாலும் ஆச்சர்யமில்லை. என்ன நடந்தது? ‘வீரம்’ படத்திற்காக ஐதராபாத்திற்கு கிளம்பினாரல்லவா அஜீத்? கிளம்புவதற்கு முன்பாக ரத்னத்திற்கு போன் செய்து, ‘நான் உங்க ஆபிசுக்குதான் வந்துகிட்டு இருக்கேன்’ என்றாராம். சார் அப்பப்ப வந்துட்டு போறவர்தானே, இப்ப மட்டும் எதுக்கு இந்த அறிவிப்பு என்று […]

காளி போய் கபாலி வந்தாச்சு… டும் டும் டும்!

ஊருக்கெல்லாம் காளின்னு அறிவிச்சாங்களே ஒழிய, முதல் நாள் ஷுட்டிங்ல ஒரு இடத்துலயாவது காளின்னு எழுதணுமே, ம்ஹூம். கார்த்தியும், அட்டக்கத்தி ரஞசித்தும் இணைகிற புதிய படத்திற்கு காளி என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்துவிட்டார்கள். அதற்கப்புறம் சிலர் வரலாற்றின் கருப்பு பக்கங்களை சுட்டிக்காட்டினார்களாம் அவர்களுக்கு. பத்ரகாளி என்றொரு படம். ராணிசந்திரா கதாநாயகி. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே விமான விபத்தில் அநியாயமாக செத்துப் போனார் அவர். இந்த சம்பவத்தை நினைவூட்டிய சிலர், அதுவரைக்கும் போட்ட குண்டு போதாது என்று மேலும் ஒரு […]

பாலகிருஷ்ணாவோட நடிக்க முடியலையே… – நயன்தாரா ஷாக்!

ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடிக்கிற படங்களில் அவரது பேத்தி வயசுள்ள இளம் ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பார்கள். அதுவும் பிரபல நடிகைகளே இந்த பலியாடு போட்டிக்கு நான் நீ என்று முந்திக் கொண்டு நிற்பதுதான் ஆச்சர்யம். வேறொன்றுமில்லை, பாலகிருஷ்ணாவின் செல்வாக்கு அப்படி. அவரே முன்னணி நடிகைகள் சிலரது பெயர்களை டிக் அடித்து ‘இவர்கள் இருந்தால் ஓ.கே’ என்பாராம். அப்புறமென்ன? பிடித்துக் கொண்டு வர வேண்டியது தயாரிப்பு நிர்வாகிகளின் வேலை. அதில் ஒன்றும் சிரமமும் இருக்கப் போவதில்லை. ராமராஜ்ஜியம் படத்தில் […]

‘மா நன்னா போலீஸ்!’ விழாவில் சினேகா , இது ஆந்திரா மிளகாய்ங்க…

சினேகாவின் கொண்டையில் முடிந்து கொள்ள ஏராளமான ஹிட்டுகள் இருந்தாலும், ரொம்பவே ஸ்பெஷல் என்று சொன்னால் அது ‘ஹரிதாஸ்’தான். தனது கல்யாண அறிவிப்பு வந்த பின் அவர் கமிட்டான படம் இது. ‘உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆவாட்டி என்ன? இந்த கேரக்டருக்கு நடிக்க உங்களை விட்டா ஆளே இல்லை’ என்று வெண்ணிலா, ஸ்டாபெரி போன்ற குளிரடிக்கும் ஐட்டங்களை அவர் தலையில் ஏற்றி நடிக்க வைத்தார்கள். சினேகாவுக்கு கல்யாணம் ஆகிருச்சே என்பதே தெரியாதளவுக்கு நம்மோடு சினேகமாக சிரித்து படத்துக்கே […]

ஆரம்பம் ரிலீசின் போது சென்னையில் இல்லை அஜீத்! -‘ஃபேஸ்புக்குக்காக போட்டோ எடுக்கும் நிருபர்கள் சங்கம்’ ஏமாற்றம்!

‘தலயே’ வெடிச்சுப்போற அளவுக்கு ஒரு கேள்வி. ‘ஆமா… ஆரம்பம் படத்தின் பாடல்கள் வெளியாகிருச்சா, இல்லையா?’ ‘ம்க்கூம்… எங்க வெளியாகிச்சு? என்னைக்கு படம் ரிலீசோ, அன்னைக்கு உள்ளேயே உட்கார்ந்து காதார கேட்டுக்க வேண்டியதுதான்’. இப்படி அஜீத்தின் தீவிர ரசிகர்களே வெறும் வாயை மெல்கிற அளவுக்கு பாரம்பரிய நடைமுறைகளையெல்லாம் வெளுத்து துவைத்து காய போட்டுக் கொண்டிருக்கிறார் அஜீத். மங்காத்தாவிலிருந்தே பிரஸ்சை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்து வரும் அஜீத், இந்த முறை படம் வெளியாகும் நேரத்திலாவது அனைவரையும் சந்திப்பார் என்று ‘ஃபேஸ்புக்குக்காக […]

நமீதா விசிட்… -கோக்குமாக்காகி போனது குமரி மாவட்டம்!

‘என் கருத்துக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என்பதை கண்டறிந்து அதில் சேர்வதாக இருக்கிறேன்’. இப்படி சொன்னவர் யாரோ ஒரு ‘கருத்து கந்தசாமி’யல்ல, ‘கவர்ச்சி கன்னிசாமி’யான நமீதாவேதான். நமீதா திறந்து வைத்த கடையெல்லாம் யாவாரத்தில் ஏகபோகமாக இருப்பதால், ‘எங்க கடைக்கு வாங்க… உங்க கடைக்கு வாங்க’ என்று நடிக்கவே விடாமல் (?) அவரை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அப்படியொரு கூட்டத்தின் அவசரம் கருதிதான் குமரிமுனை வரைக்கும் போய் ஒரு கடையை அவசரம் அவசரமாக திறந்து வைத்திருக்கிறார் […]

லிங்குசாமி தயாரிப்பில் மீண்டும் பாலாஜி சக்திவேல்! இந்த முறையும் புதுமுகங்கள்தானாம்…

வழக்கு எண் 18/9 படம் மட்டுமல்ல, பாலாஜி சக்திவேலின் முந்தைய படங்களும் தமிழ்சினிமாவின் தர வரிசையில் ISI அழகுக்கு உரியவை. வழக்கு எண் படத்திற்கு மீடியா கொடுத்த விமர்சனங்களுக்காக சற்று அதிகமாகவே நெகிழ்ந்து போன பாலாஜி சக்திவேல், விமர்சகர்களின் காலில் விழுந்து தன் நன்றியை தெரிவித்தார். தமிழ்சினிமாவின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒருவரான இவரை பார்த்தால்தானே ‘அடுத்த படம் எப்ப சார் என்று கேட்க முடியும்?’ ஆனால் எங்கோ ஒரு மூலையில் தன் அடுத்த படத்திற்காக இயங்கிக் […]

‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’

‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்… கிழவி சங்கலிக்கு பாலிஷ் போடு’ கதையாகிவிட்டது மயிலு ஸ்ரீதேவியின் மயக்க வித்தை. பல்லாண்டுகளுக்கு முன் தனது மூக்கை சின்னதாக்கிக் கொண்டவர், இப்போது தனது முன்னழகை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். சர்ஜரிக்கும் இவருக்கும் சர்வ பொருத்தம் அமைந்தாலும் ‘இந்த வயசுல இது தேவையா?’ என்று முணுமுணுக்கிறது மொத்த இந்தியாவும். ஆனாலும் நடிப்பில் மீண்டும் ஆர்வம் வந்திருக்கிறதாம் அவருக்கு. இதனால்தான் பட்டு பழசுக்கெல்லாம் பாலிஷ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இந்த விளம்பர  ‘மை‘ காய்வதற்குள் அவரை ஒரு […]

அஜீத் படம் வரும்போது உங்க படம் வருதே- கேள்வி என் படத்து மேல எனக்கு நம்பிக்கையிருக்கு! – விஷால்

இந்த வருட தீபாவளிக்கு முதலில் தியேட்டருக்கு வரப்போகிறது அஜீத்தின் ஆரம்பம். அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வரப்போகும் படம் விஷாலின் பாண்டியநாடு. அதற்கடுத்த நாள்தான் தியேட்டருக்கு வருகிறதாம் கார்த்தியின் ஆல் இன் அழகுராஜா. ஏன் இந்த டைம் டேபிள்? யாருக்காக ஆல் இன் ஆல் அழகுராஜா கடைசியில் நிற்கிறது என்பன போன்ற விஷயங்களுக்குள் நுழைவது இடியாப்ப சிக்கலிலும் பெரும் சிக்கல் என்பதால் இத்துடன் நிற்க. பாண்டியநாடு ரிலீசையொட்டி பிரஸ்சை சந்தித்து தனது உள்ளக் கிடக்கைகளை அள்ளிக் கொட்டினார் […]

என்னை த்ரிஷா பாராட்டுனாங்க… – விஜய் சேதுபதி பெருமிதம்

ஆங்காங்கே கொஞ்சம் தாறுமாறான செய்திகள் வர ஆரம்பித்ததும், ‘ஐயா பிரஸ் மாருங்களா…’ என்று அவர்களை சந்தித்து தனது ‘வந்ததும் வென்றதும்’ கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. ‘இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ படத்தை ஹிட் ரேஞ்சிலேயே வைத்து பேசியது அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தாலும், அவர் கூறிய பல விஷயங்கள் விஜய் சேதுபதி இன்னும் பல காலத்துக்கு ரேஸ் குதிரையாக இருப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ‘இன்னும் சின்ன சின்ன இயக்குனர்கள் படங்களிலேயே நடிச்சுட்டு இருக்கீங்களே, பெரிய […]

ஜன்னல் ஓரம்- பாடல் வெளியீட்டு விழாவில் மொக்கை போட்ட பிரபலங்கள்…

கரு பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கத்தில் நடந்தது. அன்று காலையில் இருந்தே சென்னை நகரமெங்கும் பஸ்சில் சுற்றி, பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் ஆடியோவை விநியோகம் செய்துவிட்டு வந்திருந்தார்கள் படக்குழுவினர். மாலையில் நடைபெற்ற விழாவில் நடிகர் சூர்யா, விஷால், அமீர் உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். விழா துவங்கி பல மணி நேரத்திற்கு ஒரே போர். ஏன்? தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பேச […]