ஐதரபாத்தில் ரகசிய சந்திப்பு- விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியது என்ன?

கைக்கு எட்டுற தொலைவுல காசி இருந்தாலும், கண்ணுக்கு எட்ற தொலைவிலேயா இருக்கு புண்ணியம்? ஆட்சி, அதிகாரம், அதட்டல் எல்லாமே கைக்கு வந்தா நல்லாதான் இருக்கும். இல்லேன்னா நம்ம படம் ரிலீஸ் எப்போன்னு யார் யாரோ அல்லவா டிசைட் பண்ணுவாங்க? இப்படியெல்லாம் எண்ணங்கள் துரத்தியடிப்பதால், ‘அமைதியே… கொஞ்சம் அருகில் இரேன்’ என்று ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள நினைக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் இருந்தால்தான் அது இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கு. அதனால் நிம்மதியாக இருக்குமே என்று ஜில்லா […]

சூர்யாவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவா? தொடரும் வேட்டை!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு ஹாலிவுட்டே இன்னும் பயன்படுத்தியிராத ஒரு கேமிராவை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆளுயரத்தை தாண்டிய அனகோண்டா போலிருக்கிறது அது. எல்லாரும் அண்ணாந்து பார்க்கிற அதன் உயரத்தை போலவே தரமும் இருக்கும் என்பதையெல்லாம் சொல்லவே வேண்டாம். சூர்யாவை நடக்க வைத்து சில காட்சிகள் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது டெஸ்ட் ஷுட்டிங்தானாம். நிஜ ஷுட்டிங் விரைவில். பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோ நடிக்க வருகிறார் என்றால், அவரை சுற்றி வளைத்து சொந்தம் கொண்டாட […]

பைக்கிலேயே 16 மணி நேர பயணம்… – அஜீத்தின் ரேஸ், ரசிகர்களுக்கு மாஸ்!

ரசிகர்களின் மாஸ் பிரியரான அஜீத், அடிப்படையில் ஒரு ரேஸ் பிரியர். அதை அவ்வப்போது நிரூபித்தும் வந்திருக்கிறார். ஆரம்பம் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிற நிலையில் அவரது பயணம், இத்தனை வருட திரையுலக பயணத்தை விட சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. ஆனால் எதற்கும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? இந்த பயணத்திற்கு அஜீத் சொல்லும் காரணம், சாலை விழிப்புணர்வு. ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்கிற நவீன ரக பைக்கை வாங்கியிருக்கிறார் அஜீத். இதில் […]

செல்வராகவனுக்கு கமல் ட்ரீட்மென்ட்! யாரும் அறியாத மூன்றாம் உலக அவஸ்தைகள்

  ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிரச்சனை வந்தபோது கமல் பேட்டியளித்தாரல்லவா? அந்த கவலைப் பேச்சை மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்க்கிற அவரது ரசிகர்கள் தங்கள் கண்ணிலிருந்து ‘பிளட்’டாபிஷேகம் செய்வார்கள். ‘இதோ, இப்ப நான் நின்று பேசிக் கொண்டிருக்கிற இந்த வீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க. இந்த படம் வரலேன்னா இந்த வீடு என்னுது இல்ல’ என்றார் கமல் அப்போது. ஆணானப்பட்ட கமலையே வீட்டை விட்டு அனுப்புகிற சக்தி யாருக்கு இருந்தது? ஆத்திரம் கொள்ளாமல் அனுபவ அறிவால் யோசித்தால், பணம் போட்ட […]

ரம்யா நம்பீசனின் சேச்சி பாச பேச்சு? – திருந்துவீங்களா தமிளன்ஸ்…?

சட்டியிலிருந்து இறக்கப்பட்டு இரண்டு நாட்களாகியும் இன்னும் சூடு குறையவில்லை. எல்லாம் ரம்யா நம்பீசன் இரு தினங்களுக்கு முன் பேசிய இனப்பாச பேச்சின் உஷ்ண விவகாரம். ‘பாண்டியநாடு’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் ரம்யா நம்பீசன். ‘பீட்சா’ ஹிட்டுக்கு பிறகு கூட ரம்யா நம்பீசனை தமிழ்சினிமா கண்டு கொள்ளவில்லை. அப்படி கண்டு கொண்ட ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களை குண்டு கொண்டு தாக்கினார் ரம்யா என்பது வேறு விஷயம். ஐ மீன் அந்த குண்டு, சம்பளம் என்கிற மெகா குண்டு! நான் […]

ஆசையாயிருக்கு… ஆனா முடியலையே? லட்சுமிமேனனின் கவலை

குடும்ப குத்துவிளக்காக எரிந்தது இரு விளக்கு. அதில் ஒரு விளக்கில் இப்போது திரி அவுட். மற்றொரு விளக்கான லட்சுமிமேனன்தான் இப்போது பள பள… (அவுட்டான விளக்கு எது என்பதை கமிஷனர் ஆபிசின் பிரஸ் ரூம் சொல்லும்) அது போகட்டும்… இருக்கிற அந்த ஒரு விளக்குக்குதான் இப்போது ஓவர் அழைப்பாம். வரிசையாக படங்களை ஒப்புக் கொள்கிற நிலைமையில் நான் இல்லை. படிக்கப் போகணும்… ஆத்தா வையும் என்று கூறியே பல படங்களை தட்டிக்கழித்த லட்சுமி மேனன் இந்த ஒரு […]

‘விண்டோ சீட்’ வேணும்னா எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு ஓடுங்க…

விண்டோ சீட் என்பது, சைட் அடிப்பவர்களும் அடிக்கப்படுகிறவர்களும் மட்டுமே அடையக் கூடிய ஆனந்தம். கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் கதை என்னவோ தெரியாது. ஆனால் இந்த தலைப்பு… பல இளசுகளை காத்திருக்க வைத்திருக்கிறது. கதையில் அவரவரும் வந்து போனாலும் ஆச்சர்யமில்லை அல்லவா? பார்த்திபன் பஸ் டிரைவராகவும், விமல் கண்டக்டராகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பூர்ணா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நாளை காலை எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு போகாதவர்கள் பஸ்சை மட்டுமல்ல, ஒரு இனிய ஈவன்ட்டையும் […]

மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சி….

“பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார், பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்”, கரகாட்டக்காரன் படத்தோட டைட்டில் பாடல்ல இளையராஜா பாடி இருப்பார். ஒவ்வொரு பாட்டை உருவாக்கும்போதும் நிகழ்ந்த கதைகள் நிறைய கேள்விபட்டிருப்போம். ஆனா அந்தப்பாட்டுக்கள், நம்ம வாழ்க்கையில உருவாக்குன கதைகளை நம்ம கணக்கெடுத்து பாத்ததில்ல. ஏன்னா அந்தக்கணக்கை அவ்வளவு சீக்கிரம் எடுத்துற முடியாது. அதுலயும் இளையராசா பாட்டுன்னா சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு ஊர்லயும் வண்டி கட்டி ஏத்திக்கிட்டு வரலாம்கிற அளவுக்கு ராசாவோட […]

நஸ்ரியா அனுப்பிய MMS – ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஒண்ணு கூடிட்டாங்க!

கண்ணு மண்ணு தெரியாம காதல்ல விழுந்தா ஊரே கூடி உருமியடிக்கும் என்கிற விஷயத்தை இனிமேலாவது உணர்வாரா நஸ்ரியா? இப்படிதான் இந்த செய்தியை எழுதி முடிக்கணும். ஏன்னா, நஸ்ரியா விஷயத்தில் நடக்கிற சூட்சுமங்கள் அப்படி. தமிழ்சினிமா ஹீரோக்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள். ஜெய்யை தவிர. நஸ்ரியா விவகாரத்தில் முழு கண்ட்ரோல் இப்போது ஜெய்யிடம் இருப்பதாக கதைக்கிறார்கள் சில ஹீரோக்கள். நாம் காதை தீட்டிக் கொண்டு விசாரித்த வரையில், ஜெய் விலகல் பத்திரம் எழுதிக் கொடுக்காமல் நஸ்ரியா இனி தமிழ் […]

டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா!

காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு கையில் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு திரிகிற வேலைதான் ஒரு படத்தை இயக்குகிற வேலையும். ‘பூண்டு, வெங்காயம், புளி, மொளகா எதை சேர்த்தாலும் கோவம் வருமாம்… இதெல்லாம் வேணாம் கொஞ்ச நாளைக்கு’ என்று ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்பாட்டுக்கு வந்தாலும், மிளகாயாய் உரைத்து அப்பளமாக பொறியாமல் ஒரு டைரக்டரும் வீட்டுக்கு போக முடியாது. இவ்வளவு கஷ்டமான வேலையை இவரால் செய்ய முடியுமா? படப்பிடிப்பில் இவரிடம் சிக்குகிற தொழிலாளிகளின் கதி என்னாகும்? என்பது போன்ற […]

ஐயோ… மெல்லிசையா? – அலறி ஓடும் விஜய் சேதுபதி

லாட்டரி சீட்டுல லட்சம் விழுந்தா ஆளுக்கு பாதி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குதான். ‘விழுந்தால்தானே’ என்கிற அலட்சியமும் கூடவே சேர்ந்து கொண்டால், அந்த பாதியும் முக்காலாக மாறும். அப்படிதான் முக்கால்வாசி வாக்குறுதி கொடுத்துவிட்டு மூக்கால் அழுது கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பொழுது போக்கக் கூட இடமில்லாமல் அலைந்து கொண்டிருந்தாரல்லவா? அந்த நேரத்தில் இவரை யார் குறும்பட நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சென்று வந்தார். சிலர் சும்மா வீட்ல பார்த்துகிட்டிருக்கோம். வர்றீங்களா என்று அழைத்தால் […]

கமலையே வியக்க வைத்த நடிப்பு ராட்ஷசன்! -ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 03 -தேனி கண்ணன்

நான் பணிபுரிந்த வார இதழ், இசைஞானியின் ’பால் நிலா பாதை’ புத்தகத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டது. இதற்காக வழக்கம் போல் விழாவில் கலந்து கொண்டு பேசும் விருந்தினர்களை இசைஞானியிடம் கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த நேரத்தில் இசைஞானியை அந்த இதழில் எழுத வைத்தது எப்படி என்ற இரு குட்டியூண்டு ஃப்ளாஷ் பேக். நான் அந்த வார இதழில் 2007 ல் சேர்ந்தேன். அந்த சமயத்தில் நான் அடிக்கடி என் ஆசானான கவிவேந்தர் […]

    வணக்கம்… இணையதளங்களின் தர வரிசையை நிர்ணயிக்கும் சர்வதேச சர்ச் என்ஜினான www.alexa.com தரும் ரிப்போர்ட் இது. www.newtamilcinema.in இணைய தளம் இந்திய தரவரிசைப்படி 10 ஆயிரத்து 524 வது இடத்தை பிடித்துள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் www.tamilcinema.com ன் இந்திய தரவரிசை 11 ஆயிரத்து 736. துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் www.tamilcinema.com ஐ முந்தியிருக்கும் www.newtamilcinema.in ன் வளர்ச்சி அபரிதமானது. இதற்கு காரணமாக இருந்த வாசகர்கள், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள், சக […]

அறிக்கைக்குப் பின் சூர்யாவை சந்தித்த கவுதம்!

கவுதம்மேனனும் சூர்யாவும் கட்டி உருளப் போகிறார்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உண்மை அதுவல்ல. சூர்யாவுக்கு எதிரா ஒரு அறிக்கை ஒண்ணு கொடுத்துரலாமா என்று சில ‘நல்லவர்கள் ’ கவுதமை உசுப்பிவிட, ‘அதெல்லாம் வேணாங்க’ என்று கூறிவிட்டாராம் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால், சூர்யாவின் அறிக்கை வந்த மறுநாளே கவுதம் சூர்யா வீட்டுக்கு சென்றதுதான். வழக்கம் போல இவரை வரவேற்று உபசரித்தார்களாம் வீட்டில். இந்த அறிக்கை வெளியிடும் போதே கவுதமுக்கு ஏதாவது செய்யணும் என்று கூறி வந்தாராம் […]

முன்னே வி.டி.வி கணேஷ், இப்போ சந்தானம்… – ஏமாறுகிறாரா சிம்பு?

சிம்பு கட்டியிருக்கிற வீட்டுக்கு அவரே ‘கெஸ்ட் ஹவுஸ்’னு பேர் வச்சாலும் ஆச்சர்யமில்ல. ஏனென்றால் மெயின் ஹீரோவான அவரை தாஜா பண்ணி தாஜா பண்ணி கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் வி.டி.வி கணேஷ், படத்தில் எதை நம்புகிறாரோ இல்லையோ? பிசினசுக்கு சிம்புவை நம்புகிறார். அதனால் சிம்புவின் கால்ஷீட்டை பதினைந்து நாட்களுக்கு வாங்கி, (அவர் அதையே பிய்த்து பிய்த்து கொடுப்பதால் சமயத்தில் வீங்கி…) அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியாவையும் நடிக்க […]

வெண்ணிலாக் கபடிக்குழு செகண்ட் பார்ட்…

தமிழ்சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு ஒரு ட்ரென்ட் செட்டர் படம். அப்படத்தின் வெளிச்சம் மற்றவர்களுக்கு எப்படியோ, டைரக்டர் சுசீந்திரன் மீது நன்றாகவே அடித்தது. இந்த படத்தின் கதை சுசீந்திரனின் அப்பா வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும் கூறப்பட்டது. திண்டுக்கல் அருகில் மிகப்பெரிய கபடிக்குழுவை நடத்தி வந்தவர்தானாம் அவர். அவரது குடும்பமே கபடி குடும்பம் என்பது விசேஷம். இப்போது விளையாடுகிற பருவத்தில் இல்லை என்றாலும், இந்த குடும்பத்தை கபடி கைவிடவே இல்லை. சுசீந்திரனின் சித்தப்பா மகன் இப்போது இயக்குனராகப் […]