நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்… நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…

“விஜய் சேதுபதி, தினேஷ்னு புதுமுகங்களை அங்கீகரித்து வாழ்த்தும் தமிழ் சினிமா, நிச்சயம் என்னையும் கொண்டாடும்” – நம்பிக்கையோடு பேசுகிறார் விஷ்வா. ‘ஒரு மழை நான்கு சாரல்’ படத்தில் சினிமா உலகில் உதவி இயக்குனர்களின் வலிகளை அழுத்தமாக நடிப்பில் வெளிப்படுத்திய இளம் ஹீரோ. இவர் நடித்த ‘முத்து நகரம்’ இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. அதுதவிர, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் படத்திலும் திறமை காட்டி வருகிறார். ‘‘நான் சென்னைப் பையன்தான். கிண்டி […]

நய்யாண்டி – விமர்சனம்

மேயுற ஆட்டை நக்குற ஆடு ‘நய்யாண்டி’ பண்ணிய மாதிரி நல்லாயிருந்த சற்குணத்தை… கடந்த ஏழெட்டு தமிழ் படங்களாகவே ‘அவ்வளவு நல்லாயில்லாத’ தனுஷ் மொக்கையாத்தா கோவிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறார். மே.. மே…ன்னு கத்துனாலும் சரி, மேல கீழே தவ்வுனாலும் சரி, கழுத்துக்கு மேல தொங்குற கத்தியிலேர்ந்து இனிமே சாப விமோசனம் பெறுவது அவ்வளவு சாதாரணமில்ல சற்குணம் சார். எதிர்காலத்தில் பத்து களவாணியும், இருபது வாகை சூடவாவும் பண்ணிதான் நீங்க மறுபிறவி எடுக்கணும். தனுஷின் அறிமுகக் காட்சியை சொல்வதற்கு முன்னால், […]

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் பிரபு

  The IV Annual Convocation of Vels University was held on 12.10.2013 at 11.00 a.m. at the Vels University Campus. Dr.Vishwa Mohan Katoch, Secretary to Govt. of India, Department of Health Research, (Ministry of Health & Family Welfare) & Director General, Indian Council of Medical Research was the Chief Guest.   The Founder-Chancellor Dr.Ishari K.Ganesh presided over […]

டிசிப்ளின் லேடின்னா அது குஷ்புதான்… – படவிழாவில் பாராட்டு!

பாண்டியநாடு படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கிறார் விஷால். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுதான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் மதகஜராஜா படத்தில் எனக்கு கிடைச்ச அனுபவம் என் மனசை போட்டு உறுத்திக்கிட்டேயிருந்துச்சு. அந்த நேரத்துலதான் சுசீந்திரன் சார் வந்து இந்த கதையை எங்கிட்ட சொன்னார். உடனே இந்த படத்தை நானே தயாரிக்கறதா முடிவு பண்ணிட்டேன் என்றார் விஷால். பாண்டியநாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடை விஷாலை பொறுத்தவரை ரொம்பவே ஸ்பெஷல். […]

இலங்கையில் ஃபேஸ் புக்குக்கு தடை? – ராஜபக்சே எச்சரிக்கை

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார். புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே, பேஸ்புக் என்ற சமூகவலைத்தளத்தில் நச்சு போன்று என்னை பற்றி செய்திகள் பரவி வருகின்றது. அதில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நான் நினைத்தால் இலங்கையில் பேஸ்புக்கினை தடை செய்யும் வழிகள் அரசாங்கத்திடம் உண்டு. என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், “ஃபேஸ்புக்கை […]

‘தல’ படம் தீபாவளி கழிச்சு வந்தா நல்லாயிருக்கும்…’ -அஜீத்துக்கு நெருங்கும் ஆபத்து?

இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் வருவதாக திட்டம். ஆனால் விதி என்னவோ? அதன் வகுத்தல் பெருக்கல்கள் என்னவோ? அதையெல்லாம் அறிந்து கொள்ள தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் நகத்தை கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டியதுதான். அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷாலின் பாண்டியநாடு செல்வராகவனின் இரண்டாம் உலகம்தான் அந்த நான்கு படங்களும். இதில் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கும், பாண்டியநாடு படத்திற்கும் தியேட்டர் புக் பண்ணுகிற வேலைகள் அநேமாக முடிந்தேவிட்டன. அதுமட்டுமல்ல, இப்படங்களை […]

‘நான் ஹாஸ்டல்ல தங்கல…’ – நமது செய்திக்கு தன்ஷிகா மறுப்பு

இன்று காலை நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நமது newtamilcinema.coim ல் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இதை படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்டார் தன்ஷிகா. ‘நீங்க அதுல எழுதியிருக்கிற மாதிரி நான் எந்த ஹாஸ்டல்லயும் தங்கல. என் அப்பாவோட வளசரவாக்கத்துலதான் தங்கியிருக்கேன்’ என்று கூறினார். இது தொடர்பாக நாம் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் சொன்ன தன்ஷிகா, ‘நான் அப்பாவோட இருக்கேன்னு மட்டும் எழுதிருங்க. யார் கூடவும் எனக்கு சண்டையில்ல. வாழ்க்கை ஹேப்பியா […]

‘மிஷ்கின் கேட்டப்ப முடியாதுன்னு சொன்னேன்…’ – ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ இன்ஸ்பெக்டர் ராகுல்!

முத்து காமிக்சில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் மாதிரியே, ஒருவரின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அதே முத்து காமிக்ஸ் மூலமாக! கும்பகோணத்தில் வசித்து வரும் ராகுலன் இப்போது நடிகராகிவிட்டார். இவரை நடிகராக்கிய பெருமை மிஷ்கினையும், சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து கொண்டிருந்த முத்து காமிக்சையும்தான் சேரும். ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தாலும், முத்து காமிக்ஸ் படிக்கிற அளவுக்கு குழந்தை மனசு ராகுலனுக்கு. வீட்டில் ஆயிரக்கணக்கான காமிக்ஸ் புத்தங்களை சேகரித்து வைத்திருக்கிற அளவுக்கு காமிக்ஸ் […]

சவுண்டே வராத சங்குக்கு உதடே வீங்குற அளவுக்கு உதார்… -வில்லங்கத்தில் விஜய் ‘லேசு’பதி!

விஜய் சேதுபதியை விஜய் ‘லேசு’பதியாக்கி விட்டது பாலகுமாரா. வாங்கியவர்கள் எல்லாருக்கும் வண்டி வண்டியா நஷ்டம் என்கிறது கலெக்ஷன் ரிப்போர்ட். ஆனால் தயாரிப்பாளருக்கு செம லாபம். ஏனென்றால் விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் தொடர் ஹிட் என்பதால் இப்படத்தையும் அதிக விலைக்கு விற்றுவிட்டார்கள். இந்த லாப நஷ்ட கணக்கையெல்லாம் பார்த்து கவலைப்படவோ, கண்ணீர் வடிக்கவோ துளி கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஏனென்றால், அவர் பிரச்சனையே அவரை துரத்தி துரத்தி கொத்திக் கொண்டிருக்கிறது. ‘சங்குதேவன்’ என்றொரு […]

‘சசிகுமார் போதும். அந்த இன்னொரு ஹீரோ வேணாம்…’ -பாலா முடிவு

பாலா படம் வெளிவருகிற வரைக்கும் மர்மம் மர்மம்… மர்மம்தான். இத்தனைக்கும் அவர் மர்ம படம் எடுப்பவரல்ல. யூகங்கள் கொடி கட்டி பறக்கும். அவர் நடிக்கிறாராம், இவர் நடிக்கிறாராம் என்றெல்லாம் பரப்பப்படும் வதந்திகளை பாலாவே ரசித்து படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நாளிதழ், வார இதழ்களை ஆஃப்டர் ஹேன்ட் வாஷ்ஷாக உபயோகித்துவிட்டு செல்வதுண்டு. இப்போதும் அதுபோல வதந்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது. அப்படீன்னா பாலா தன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த படம் அண்ணன் தம்பிகளை பற்றிய கதை. அண்ணனாக […]

நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு ஓட்டம்… – லேடீஸ் ஹாஸ்டலில் தஞ்சம்

பெற்றோர்களின் மனசை பேரீச்சம் பழத்துக்கு போடுகிற நிலைமைதான் இன்று பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கிறது. நேற்றுகூட கண்ணீரும் கம்பலையுமாக ஒரு குடும்பம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தது. மகள் ஒருத்தி தன்னுடன் படிக்கிற மாணவனுடன்தான் போவேன் என்று அடம் பிடிக்க, அங்கே நின்றிருந்த அந்த பெற்றவர்களின் வயிற்றில் பெட்ரோல் பங்க் வெடித்துக் கொண்டிருந்தது. நடிகையாக இருந்தாலும் அவருக்கும் மனசு இருக்கிறது. துக்க சந்தோஷங்கள் இருக்கிறது என்பதை தமிழ்சினிமா நடிகைகளில் ஆயிரத்தி சொச்சமாவது நபராக நாட்டுக்கு மறைத்து வீட்டுக்கு […]

“கவுதம் மேனனும்… சூர்யாவும்… கொஞ்சம் கடந்த காலமும்…” – நன்றியே உன் விலை இவ்ளோ சீப்பா?

நன்றியே உன் விலை என்ன? யாராலும் கணிக்க முடியாத விலைதான் அது என்பதை சமீபத்தில் கவுதம் மேனனிடம் காண்பித்திருக்கிறார் சூர்யா. ‘உன்னால்தான் வளர்ந்தேன், உன்னால்தான் நிமிர்ந்தேன்’ என்றெல்லாம் மப்பில் வசனம் பேசி, மறுநாளே குடலுக்குள் விரலை விட்டு வாந்தியோடு சேர்த்து அந்த வார்த்தைகளையும் துப்பிவிடும் வழக்கம் கோடம்பாக்கத்தில் நிறைய பேருக்கு இருக்கிறது. குடிப்பழக்கம் இல்லாத சூர்யாவும் இந்த ‘உன்னாலே உன்னாலே’ வை மறந்ததுதான் ஆச்சர்யம். கவுதம் மேனனா சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தார்? அதற்கு முன்பே நந்தாவில் வென்றவர்தானே […]

நஸ்ரியாவுக்கு ரிட்டர்ன் டிக்கெட்? முதல் ‘கல்தா’ ஜீவாவிடமிருந்து…

டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஒரே கூட்டம். அத்தனை பேரும் ஒரே ஆளுக்கு டிக்கெட் எடுக்க கூடியிருப்பதுதான் ஆச்சர்யம். அதுவும் ரிட்டர்ன் டிக்கெட். ‘ஒரு நடிகை நாடகம் காட்டுகிறார் ’ என்று முதலில் நம்பப்பட்ட நஸ்ரியாவின் தொப்புள் மேட்டர், பலரது தொப்புள் கொடியையே அறுத்துவிடுகிற அளவுக்கு சீரியஸ் ஆனதையும், அப்படியே அவரை குந்துனாப்ல கொண்டாந்து கேஸை வாபஸ் வாங்க வைத்ததையும் நாடு அறியும். ஷுட்டிங் ஸ்பாட்ல பீஸ் புல்லா இருக்கணும். ஷுட்டிங் முடிஞ்சுட்டுன்னா பீர் புல்லா இருக்கணும் என்கிற […]

பத்துகோடிய திருப்பிக் கொடுங்க… – விஜய்யை நெருக்கும் தயாரிப்பாளர்

‘அது வேற வாய், இது நாற வாய்’ என்றொரு டயலாக்கை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்தவர் வடிவேலாக இருந்தாலும், அதை அதிகம் யூஸ் பண்ணப் போவது விஜய் ரசிகர்களாகதான் இருக்கப் போகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சனை காட்டுத்தனமாக வெடிக்கக் கூடும். அல்லது காதும் காதும் வைத்தாற் போல அமுக்கப்படும். பட்… விஷயம் ரொம்ப சீரியஸ். விஜய் சார் கால்ஷீட் கொடுத்து என்னோட வாழ்க்கையையே ஒளிமயமாக்கிட்டார் என்று ‘தலைவா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உருகி ஆறாக […]

‘HOT HOT’ சூர்யா- ‘COOL COOL’ கவுதம் மேனன்!

நேற்று மாலை சூர்யா அனுப்பிய அறிக்கை இன்டஸ்ரியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘துருவ நட்சத்திரம்’ இப்படி துரு பிடித்த நட்சத்திரமாகி எங்கோ கண்காணாத இடத்தில் விழுந்துவிட்டதே… என்று கவலைப்பட்டார்கள் சூர்யா-கவுதமுக்கு இடையேயிருக்கும் பொதுவான ரசிகர்கள். இதற்கு கவுதமின் ரீயாக்ஷன் என்னவாக இருக்கும்? கண்ணில் சோடாபுட்டியை மாட்டிக் கொண்டு ட்விட்டர், பேஸ்புக் என்று சல்லடை போட்டு சலித்தவர்கள் அத்தனை பேரும் ‘ஞே’ என்று விழித்ததுதான் மிச்சம். இது குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை கவுதம் மேனன். அதற்கு பதிலாக […]

கவுதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்… -நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை

      Suriya withdraws from Gautham Menon’s Dhuruva Natchathiram Suriya has issued a press release late in the evening officially announcing that he would be withdrawing from Gautham Menon’s project titled Dhruva Natachiram, as the director failed to provide him with complete story line of the film, even after 6 months of the release […]

அஜீத் படத்திற்கு முட்டுக்கட்டை? -கைகொடுக்க வந்த VIP

‘அஜீத்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வந்துவிடும்…’ ரசிகர்களின் கோலாகலக் கனவாக இந்த தேவ செய்தி இருக்க, இன்னும் படத்திற்கு ஆடியோ ரிலீஸ் விழாவை கூட ஏற்பாடு செய்யவில்லை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்த விழாவுக்கு அஜீத் வரப்போவதில்லை என்பதால்தான் இப்படியொரு மெத்தனம். ‘நான் வராட்டி என்ன? நீங்களா ரிலீஸ் பண்ணிட வேண்டியதுதானே’ என்றாராம் அவர். தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிற நிலையில் படத்தை ரிலீஸ் செய்கிற வேலையில் பரபரப்பாக இருக்கிறார் ரத்னம். ஆனால் அவர் சொல்கிற விலையை கேட்டு […]