‘வீட்டு முன்னால நின்னு அசிங்கப்படுத்துவேன்…’ -த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர்! ‘முடிஞ்சா டச் பண்ணிப்பாரு… ’ -தயாரிப்பாளரை ஓட விட்ட த்ரிஷா!

‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ கோபத்திலிருக்கிறார் த்ரிஷா. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதெல்லாம் கேட்கறதுக்கு நல்லாயிருக்கும். கொஞ்சம் உரசிப் பாரு தெரியும் என்கிற அளவுக்கு அவரை சுற்றி தீ! சரக்கடித்துவிட்டு ஆந்திராவையே அல்லோகல்லோலப்படுத்திவிட்டதாக அவர் மீது கறைபூசி ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு நபர் ‘வீட்டுக்கே வந்து அசிங்கப்படுத்திடுவேன்’ என்று எச்சரித்தால் எப்படியிருக்கும்? தனது மொத்த ஆத்திரத்தையும் அவர் மீது ஏவிவிட்டு மேலும் கீழும் மூச்சிரைக்க உட்கார்ந்திருக்கிறாராம் த்ரிஷா. அவர் யார்? த்ரிஷாவை இவர் திருக திருக […]

இடத்தை காப்பாத்திக்கறது எப்படி…? – அஜீத், விக்ரமுக்கு ரஜினி ஆலோசனை

மழைக்கு ஒதுங்குவதற்கு வேறு வேறு இடங்களை வைத்திருக்கிற தமிழ்சினிமா ஹீரோக்கள் பலர், தங்களின் ‘பிழை’க்காக ஒதுங்குவதற்கும் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லம். அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களையும், முக்கிய இயக்குனர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து பேசுகிற வழக்கமுள்ளவர் ரஜினி. அந்த நேரத்தில், ‘சினிமா என்கிற பாதையில் எங்களின் பயணம் சரியாக இருக்கிறதா, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் ரஜினியிடம் அட்வைஸ் கேட்பார்களாம் இவர்கள். இப்படி அஜீத்திற்கும் விக்ரமுக்கும் அவர் அட்வைஸ் […]

தோண்டப்படும் இலங்கை அமைச்சரின் குடும்பக் கல்லறை

முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்ப மயானத்தை விசேட அதிரடிப்படையினர் தோண்டிக்கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானமே தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அவரது குடும்ப மயானமே தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த மயானத்திற்குள் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இன்றேல் பெருந்தொகையில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்தே விசேட அதிரடிப்படையினர் மயானத்தை தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

திஹார் சிறையில் முன்னாள் உலக அழகி

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஒலிவியா.   கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் […]

ஜெயில்ல எனக்கு கருப்பு பூனை வேணும்…-லாலு அடம்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினரான லாலுவுக்கு இசட் […]

பிரதமரை மட்டம் தட்டும் நோக்கம் இல்லை – ராகுல் காந்தி

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரை விமர்சித்ததற்காக ராகுல் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்,.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் இதை செயல்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. […]

வடிவேலுவுக்கு முப்பத்தியாறு பொண்டாட்டி…!

தெரிந்தோ, தெரியாமலோ புஜபல(ம்) என்று தெனாலிராமன் பட தலைப்பில் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்சை சேர்த்திருக்கிறார் வடிவேலு. அவரது நினைவுத் திறன் பலத்தை பற்றிதான் கண்ணே பட்டுவிடுகிற அளவுக்கு பேசி வருகிறது அப்பட வட்டாரம். தற்போது படப்பிடிப்பு குற்றாலத்தின் அருகிலிருக்கும் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. ஆனால் அதற்கு முன்பு அரண்மனை செட்டப்பில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை பற்றிதான் விழுந்து விழுந்து பாராட்டி வருகிறார்கள். கதைப்படி வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம். மனைவியே முப்பத்தியாறு என்றால் பிள்ளைகள் எத்தனை பேர் இருப்பார்கள்? […]

தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு… -ஹன்சிகாவை எச்சரித்த தயாரிப்பாளர்

‘சீதாராம கல்யாணம் லங்கலோ’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ‘ரவுடிக் கோட்டை’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஹன்சிகா மொத்வானி. திடீரென இப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் நான் கோர்ட்டுக்கு போய் தடை கேட்பேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் ஹன்சிகா. இந்த படம் வெளிவந்தால் அவருக்கென்னவாம்? இதில் இச் இச் என்ற ஒரு பாடலில் செம கிளாமராக நடித்திருக்கிறாராம். அதனால்தான் இந்த லபோ திபோ. இவரது […]

இனி ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை… -நயன்தாரா திடீர் முடிவு

இது ஊடலா, உமட்டலா என்றே தெரியவில்லை. ஆனால் நயன்தாரா எடுத்த முடிவு ஆர்யாவை அலற வைத்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ராஜா ராணிக்கு ரகளையான கலெக்ஷன் ரிப்போர்ட்! சூட்டோடு சூடாக இதே காம்பினேஷனில் இன்னொரு கல்லா பெட்டியை ஓப்பன் பண்ணிவிட துடியாய் துடிக்கிறது தயாரிப்பு தரப்பு. ராஜா ராணி ஷுட்டிங்கின் நேரத்திலேயே ‘இந்தா வச்சுக்கங்க… அடுத்த படமும் நம்ம பேனர்லதான்’ என்று ஒரு அட்வான்சை கொடுத்து விட்டார்கள் டைரக்டர் அட்லீக்கு. இதெல்லாம் எல்லா படங்களுக்கும் நடக்கிற நரி தந்திர […]

லவ்வரை பிரதர்னு கூப்பிட்டா தப்பில்ல… -ஆர்யா அதிரடி பதில்

ராஜா ராணி படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது. வழக்கம்போல நயன்தாரா, சந்தானம் ஆகியோர் பிரஸ்சை சந்திக்க அஞ்சி வீட்டிலிருந்தபடியே பிரஸ்மீட்டுக்கு ஆசி வழங்க, மொத்த பாரத்தையும் தானே சுமக்கும் மாவீரனாக பேச ஆரம்பித்தார் ஆர்யா. இந்த படம் ஆரம்பிக்கும்போதே ஹிட்டுங்கறதுக்கான எல்லா அறிகுறியும் தென்பட ஆரம்பிச்சுது. இப்போ எல்லா இடத்திலேயும் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கு. இந்த நேரத்துல நான் டைரக்டர் அட்லீக்கு நன்றி சொல்லிக்கிறேன் என்றார். அட்லீ உள்ளிட்ட மற்றவர்கள் பேசி முடித்ததும், […]

“பூம் பூம்பும் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி…” பாங்காக் பயண அனுபவங்கள் -3 -ஆர்.எஸ்.அந்தணன்

வானை தொடும் ஓட்டல்களையெல்லாம் வரிசையாக தாண்டிக் கொண்டு சென்றது வேன். நம்ம வசதிக்கேற்ப ஒரு ஓட்டல்ல நமக்கு ரூம் சொல்லியிருக்கு என்றார் சதீஷ். ‘வசதிக்கேற்பன்னா எப்படி சதீஷ்?’ என்பதை அவ்வளவு அரையிருட்டில் அவர் ரசித்ததும் தெரியவில்லை. ரசித்ததாகவும் தெரியவில்லை. பாம்குரோவ் டைப்பான ஒரு ஓட்டலில் வண்டி நிற்க, அதே இட்லி ஈஸ்ட் புன்னகையோடு லக்கேஜை அள்ளிக் கொண்டான் ஓட்டல் ஊழியன். வாழ்நாளில் ஒரு முறை கூட அவன் கொட்டாவி விட்டதில்லை என்கிற அளவுக்கு மறுபடியும் பிரிஸ்க்கான ஒரு […]

சினேகாவின் சிரிப்புக்கே சரியா போச்சு… மிச்சத்துக்கு?

கோன் ‘சினேகா ’ குரோர்பதியாகிக் கிடக்கிறது சின்னத்திரை வட்டாரம். பின்னே, யார் யாரோ அழைத்தும் சின்னத்திரை பக்கமே வராத சினேகா, வர்றேன்னு சொன்னா எப்படியிருக்குமாம்? லாட்டரி சீட்டு வாங்காமலே லட்டு லட்டா பணம் விழுந்த சந்தோஷத்தில் இருக்கிறது அந்த சேனல். ஒரு நடிகைக்கு கல்யாண சீர் கொடுக்கும் போதே கால்ஷீட் புத்தகத்தையும் எடைக்கு போடுகிற வழக்கம் இங்கேதான் இருக்கிறது. அதற்கப்புறம் அவரை அக்கா கேரக்டரிலோ அண்ணி கேரக்டரிலோ பார்த்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள் […]

உளறினார் டைரக்டர்… – நன்றாக மூக்கை அறுத்தார் ஹீரோ

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது ‘ஞானக்கிறுக்கன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. செல்போன் விழுந்தால் சிம் கார்டு நொறுங்கிப் போகிறளவுக்கு கூட்டம். பாரதிராஜா, செல்வமணி, தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.சிவா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த அந்த விழாவுக்கு எஸ்.எஸ்.ஸ்டான்லி என்கிற நபரையும் அழைத்திருந்தார்கள். பொதுவாக இது மாதிரி அடையாளம் தெரியாத நபர்களையெல்லாம் மேடைக்கு அழைத்தாலும் மைக்கை கொடுப்பது ஃபங்ஷன் வழக்கமல்ல. கஷ்டப்பட்டு திரட்டிய கூட்டத்தை loos பண்ண வேண்டாமே என்பதால்தான் இந்த ஐடியா. […]

அஜீத்திற்கே ஆட்டம் காமிக்கிறீங்களா…? – பொங்க பொங்க ஒரு பொருமல்!

பொங்க பொங்க பிரியாணி இருந்தாலும் போட்டு திங்க பிளேட் இல்லையே கதையாகிக் கிடக்கிறது புதுப்பட ரிலீஸ்கள். இதில் ஆணானப்பட்ட அஜீத்தையே அல்லாட விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிக்கலாம் என்று கூறிவிட்டார் அஜீத். ஓட்டமும் நடையுமாக படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது இப்போது. படம் தீபாவளிக்கு வெளியீடு என்றும் அறிவித்து விட்டார்கள். தியேட்டர் பக்கம் போனால்தான் தீயாக எரிகிறதாம். தனது ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்காக நல்ல நல்ல […]

தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க அரசு புதிய திட்டம்

இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக அனைத்து வகையான தரமான […]

மு.க.ஸ்டாலின் மீது மேயர் சைதை துரைசாமி ஊழல் குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினர். கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகள் அமைத்ததில் முன்னாள் மேயர்களான ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருந்த காலத்தில் ரூ.417 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தணிக்கை அறிக்கையில் […]

விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சிகளை கைத்தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர். பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேத்தாளை விஷ்னு கோவில் […]