முடிந்தால் இராணுவத்தை வெளியேற்றிக் காட்டுங்கள் என்கிறார் சிங்கள பயங்கரவாதி விமல்!

வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்தார் தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவரும், அமைச்சருமான  சிங்கள பயங்கரவாதி  விமல் வீரவன்ச. வடமாகாணசபையைக்கைப் பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு நினைத்தால் முடிந்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  சிரிபாயவில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் […]

மாவீரர் துயிலும் இல்லங்களை மீள் அமைக்க விட மாட்டோம்… சிங்கள அரசு கொக்கரிப்பு

தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு புதிதாக தெரிவாகியுள்ள […]

எழுத்தாளர் சங்கத்திலிருந்து டைரக்டர் அமீர் சஸ்பெண்ட்

காசி தீர்த்தமா இருந்தாலும், ‘கழுவிட்டு தர்றேன்’னு அதை அசிங்கப்படுத்த தயங்காத ஏரியாதான் கோடம்பாக்கம். இல்லையென்றால் கவியரசர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, ஆரூர் தாஸ் ஆகியோர் அங்கம் வகித்த பெருமைக்குரிய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை லெட்டர் பேட் சங்கம் என்று வர்ணித்திருப்பாரா அமீர்? அப்போதைய நிலைமை எப்படியோ? இப்போது இந்த சங்கத்தின் தலைவராக இருக்கிறார் டைரக்டர் விசு. இவருக்கும் பெப்ஸி தலைவர் அமீருக்கும் ஆகவே ஆகாது. இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து பெப்ஸி தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். இந்த கடுப்பில்தான் மேற்படி […]

ஐயோ பாவம் ரஜினி… ஐயோ பாவம் கமல்…. -நாடு தாங்குமாடா சரவணா?

முன்னால் அமர்ந்திருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பிர்ர்ர்ர்ர்ரபலங்கள், பின்னால் நிற்பவர்கள் ஐயோ பாவம், துணை நடிகர் ரஜினி, உதவி இயக்குனர் மகேந்திரன் ஸ்டன்ட் துணை நடிகர் பிரபு சிவாஜிகணேசன். இந்த படத்தின் பின்னால் நிற்பவர்களில் வலது ஓரத்தில் நிற்கிறாரே, அவர் பெயர் இளையராஜா. ஏதோ மூணு படங்களுக்கு இசையமைத்திருக்கிறாராம். அவரது பக்கத்தில் நிற்கிறவர் பெயர் கமல்ஹாசனாம். அவரும் சிற்சில வேடங்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.  

பாங்காக் பயண அனுபவங்கள் -2 -ஆர்.எஸ்.அந்தணன்

நம்மல்லாம் நாகரீகம் பார்த்தா நாடு தாங்குமா பாஸ்? என்பதோடு முதல் எபிசோடை முடித்ததாக ஞாபகம். நாகரீகம் பார்த்தா நம்ம தலையில் மொளகாதான் என்பதை நம்மவர்கள் பாங்காக் அதிகாரிகளுக்கு நன்றாகவே கற்று கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இமிகிரேஷனில், ‘தம்பி… துட்டு எவ்ளோ வச்சுருக்க? இங்கே ஓட்டல்ல தின்னுட்டு மாவட்ட முடியாது. அஞ்சு நாள் தங்குறதுக்கு கெப்பாசிட்டி உங்கிட்ட இருக்கா பார்க்கணும்’ என்பது போலவே, ஒரு லேடி அதிகாரி என் மனசுக்குள் புகுந்து பர்சுக்குள் எட்டிப் பார்த்தாள். முகத்தை கர்ண கொடூரமாக […]

இன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை

பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலை […]

இந்தியாவில் மறதி நோய்

இந்தியாவில் மறதி நோயால் 6.40 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அல்சைமர் (மறதி நோய்) தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. டீன் கனகசபை தலைமை வகித்தார். டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக டீன் கனகசபை கூறியதாவது: இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்) பேர் அல்சைமர் நோயினால் (மறதி நோயால்) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் 9 கோடியாகவும் (6.4 சதவீதம்), […]

அம்மா இருக்கும்போதே தாவணியை உருவுன சார்தானே நீங்க?

நாக்கால பேசுனா தமிழ், மூக்கால பேசுனா மலையாளம். ஆனால் ‘சேச்சி’ அனுகிருஷ்ணா பேச்சுல அப்படியே தமிழச்சி வாடை. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயினான அனு, இப்படி தமிழச்சியாகவே மாறிப் போன ரகசியம் என்ன? அடப் போங்க சார். நான் திருவனந்தபுரத்துல பொறந்தவளா இருந்தாலும் சென்னையில வளர்ந்தவ. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல என்ஜினியரிங் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்களும் தமிழ்தானே. சுத்தமா மலையாள வாடையே விட்டுப் போச்சு என்றார். பக்கத்திலேயே இருக்கும் பாதுகாப்பு அதிகாரியான அம்மா, சுதந்திரமா இருக்கட்டும் என்று விலகிப் […]

அச்சடிச்ச காகிதம் அழி ரப்பருக்கு வணங்காது, ஆமாம்…

ஒரு நிறுவனத்திற்கு இருக்கிற கம்பீரம், ஒண்ணாந் தேதியானால் டாண் என்று சம்பளத்தை கொடுத்துவிடுவதுதான். ஆனால் சீரியல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பள விஷயத்தில் ‘நை’ என்றே இருக்கிறதாம் சேனல். அதனால் சரவணன் மீனாட்சி தம்பதிகளுக்கு செமத்தியான அர்ச்சனை விழுந்து கொண்டிருக்கிறதாம் தொழிலாளர்கள் மத்தியில். சைக்கிள் பஞ்சரானால் கூட, ரயில் தடம் புரண்ட ரேஞ்சுக்கு அதை பிரமாண்டப்படுத்தி விடுவார்கள் இங்கே. இது வயிற்றுப் பிரச்சனையாச்சே, விடுவார்களா? தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு போய்விட்டார்களாம் தொழிலாளர்களில் சிலர். யாராவது இதை மீடியாவுல எழுதினா, […]

ஆறு மெழுகுவர்த்திகள் – ஒரு கசப்பு

ஒரு திரைப்படமாக ஆறுமெழுகுவர்த்திகள் வெற்றிபெற்றுவிட்டது என்று விமர்சனங்கள் காட்டுகின்றன. பொருளியல்ரீதியாகவும் வெற்றி என்று இன்றைய நிலவரத்தைக்கொண்டு கணித்துவிட்டார்கள். மகிழ்ச்சி அடையவேண்டிய தருணம். ஆனால் மிகமிக மனக்கசப்புதான் எஞ்சுகிறது. காரணம், குழந்தைகளை இதேபோலத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பலர் தொடர்புகொள்வதுதான். உண்மையில் இந்த அளவுக்குச் சாதாரணமாக இது இங்கே நிகழ்கிறது என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. தொண்ணூறு சதவீதம் குழந்தைகள் திரும்பக்கிடைப்பதில்லை. காணாமல்போகும் குழந்தைகள் பெரும்பாலும் பெண்கள் இங்கே பெரும்பாலான pan Indian குற்றங்கள் பிடிக்கப்படுவதேயில்லை. இத்தனைபெரிய தேசத்தில், இத்தனை மக்கள்தொகையில், […]

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா முதல் நாள் நிகழ்ச்சி தொகுப்பு! -டாப் டூ பாட்டம் வரை…

* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை முதல்வர் விழாவுக்கு வரும் வழியில், முதல்வரை வாழ்த்தியும் அவரது மலிவுவிலை உணவகம், மலிவு விலை குடிநீர் ஆகிய திட்டங்களைப் பாராட்டியும், பல பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. வழியெங்கும் மங்கல மேளம், கேரளத்து செண்டை மேளம், நாட்டுப்புற நடனம் என்று வீரியமான விழாக் கோலம் வசீகரித்தது. ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் முதல்வரைக் காண வழியெங்கும் கூடி இருந்தார்கள். * நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

ரஜினி முகம் மோசமாக இருக்குமாம்… விமர்சிக்கிற ‘சுமார் மூஞ்சு’ இவர்தான்!

கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின். தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை ரஜினியின் தாக்கம் இல்லாமல் நடிக்க முடியாது என்பதும். அப்படிப்பட்ட ஒருவரை சகிக்கவே சகிக்காத ஒரு பாலிவுட் நடிகர் சகிக்க முடியாத வார்த்தைகளால் விமர்சித்திருப்பது அநியாயம். “தென்னிந்திய நடிகர்களிலேயே ரஜினி மட்டும் தான் பார்க்க மோசமாக இருப்பார்” என்று […]

படிப்பு முடிஞ்சு ஷாம்லி வந்தாச்சு… -அத்தான் அஜீத் சொன்னா சினிமாதான்!

நல்ல நல்ல நடிகைகளையெல்லாம் கல்யாணம் ‘கட்டிக் கொண்டு’ போய்விடுகிறது. ஜோதிகா, ஷாலினி என்று இவர்கள் வாழ்க்கை பட்ட இடம் வசந்தகாலப் பூக்களாக இருந்தாலும், சினிமாவில் இவர்களது வெற்றிடத்தை நிரப்ப, ஒரு மயிலும் இல்லை. மானும் இல்லை. அக்கா அளவுக்கு இல்லையென்றாலும் ஷாலினி தங்கை ஷாம்லிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்றே நம்பினார்கள் சினிமாவுலகத்தில். ஆனால் அவர் தெலுங்கில் நடித்த படம் எதுவும் ஒடிய மாதிரி தெரியவில்லை. தமிழும் பெரிசாக ஷாம்லி விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. சரி, படிக்கப் […]

வாயை கொடுத்து வயிற்றை புண்ணாக்கிக் கொண்ட மாதிரி… -பாண்டியநாடு ஆடியோ விழாவில் அலம்பல்

‘சுட்டக்கதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனிவாவில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘அதனால் விளைந்த பயன் யாது யாது யாது?’ என்று கே.பி.சுந்தராம்பாள் குரலில் ஒரு தனிப்பாடலே பாடலாம். அந்தளவுக்கு நொந்து போயிருக்கிறார் ரவீந்தர். படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ், சுட்டக்கதையை நஷ்டக்கதையாக்குகிற அளவுக்கு நாள் கடத்திக் கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் போணியாகிற சரக்கை எந்த ஊரில் ரிலீஸ் செய்தாலென்ன என்று முடிவுக்கு வந்திருக்கலாம், விஷால் தனது ‘பாண்டிய நாடு’ படத்தின் சிங்கிள் […]

தார் ஊசி போடுதேடா தமிழ்…? -அலுத்துக் கொள்ளும் ஹீரோக்கள்!

நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால் எழுத்துக் கூட்டி மட்டுமல்ல, எச்சில் கூட்டி கூட தமிழை படிக்க இயலாது அவர்களால். அப்படியென்றால் தன்னை பற்றி வருகிற செய்திகளை எப்படி தெரிந்து கொள்கிறார்களாம்? பக்கத்தில் இருப்பவர்களிடம் கொஞ்சம் படிங்கப்பா என்று சொல்லிதான். மேகசின் விஷயத்தில் இப்படி மேலோட்டமாக தப்பித்துக் கொண்டிருந்தாலும், சினிமாவில் டயலாக் பேசும்போது மட்டும் தலைசுற்றி […]