முதல்வர் விழாவில் அஜீத்துக்கும் அவமதிப்பு?

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அஜீத்தும் கலந்து கொண்டாரா? இப்படியொரு கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்புகிற அளவுக்கு அஜீத்தின் புகைப்படத்தை புறக்கணித்திருக்கிறது மீடியாக்களின் செயல்பாடு. பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பளிச்சென கண்ணில் படுகிறவர் அஜீத். அவரே ஒதுங்கிப் போனாலும் விடாமல் க்ளிக்கி தள்ளுவார்கள் பிரஸ் போட்டோகிராபர்கள். ஆனால் கடந்த 21 ந் தேதி நடைபெற்ற விழாவில் விஜய் விக்ரம் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் படங்களை பிரதானமாக பிரசுரித்த பத்திரிகைகள் […]

போயஸ்கார்டனில் பொசுங்கல் வாடை! -அண்ணன் தம்பிகள்தான் காரணமாம்…

தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருவதால், ‘அட்றா அவன… புட்றா இவன…’ என்று தனிப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணணும் தம்பியும். இந்த இராம லட்சுமணர்களை சுற்றி என்னவாம் பிரச்சனை? காதல் கொண்டேன் படத்தை இந்தியில் ரீமேக் பண்ண ஆசைப்பட்டாராம் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூர். (அதாங்க… நம்ம […]

என்னது கவர்ச்சியா நடிக்கணுமா…? -ரோஜா அதிர்ச்சி

ரோஜாவின் அடுத்த கட்ட பாய்ச்சல் அரசியல்தான் என்றிருந்தது. யாருடைய கெட்ட நேரமோ, இவர் தலைவராக ஏற்றுக் கொண்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அமரர் ஆகிவிட்டார். அதற்கப்புறம் அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை கூட ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்டு அரசியல் செய்து பார்த்த ரோஜாவுக்கு, மக்கள் தந்தது நக்கலான ஒரு ஸ்மைல்தான். வந்த மடம் இல்லேன்னா சந்த மடம் என்பார்கள் கிராமத்தில். ரோஜாவின் முடிவும் அப்படியாகிவிட்டது. மீண்டும் சினிமாதான் என்று கிளம்பி வந்தவருக்கு அதே […]

திருச்சி வரும் நரேந்திரமோடி முன்பு பி.ஜே.பி யில் இணைகிறார் கருணாஸ்! -www.newtamilcinema ன் exclusive தகவல்….

சினிமாவில் நடிகர் கருணாசின் வெற்றி தோல்விகள் எப்படியோ? அரசியலில் ‘பிரைட்டாக’ ஒரு விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்திருக்கிறது இவரது தலைக்கு மேல். அண்மைக்காலமாக தென்மாவட்டங்களில் விஐபி யாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் கருணாஸ். முக்குலத்தோர் இளைஞர்கள் இவர் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவர் ஜெயந்தியின் போதெல்லாம் கருணாசின் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ அவர் நடமாடி வருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன சக அரசியல் கட்சிகள். இந்த நேரத்தில்தான் இப்படியொரு அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது அவருக்கு. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி […]

யா யா விமர்சனம்

ஒழுகுற பஸ்சுல அழுகுன தக்காளியை மூட்டை மூட்டையா ஏத்துன மாதிரி, சவசவன்னு படம் எடுக்கறது ஒரு வகை. இந்த டைப் படங்களை அண்ணன் தங்கச்சி கதைகளிலும், ஆத்தா மகன் கதைககளிலும் அப்ளை செய்து பார்ப்பார்கள் சில சென்ட்டிமென்ட் இயக்குனர்கள். உள்ளே நுழையும் போதே ‘செத்தாண்டா சிவனாண்டி’ என்பது போலவே நம்மை பரிதாபமாக பார்த்தபடி டிக்கெட் கொடுப்பார்கள் தியேட்டர்களில். ஆனால் நகைச்சுவை படங்களுக்கு அந்த ஆபத்து இல்லை. எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அது வொர்க் அவுட் ஆகும். […]

6 விமர்சனம்

‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. […]

‘யாருகிட்டேயும் கையேந்தாதீங்க…’ -முதல்வரின் நல்லெண்ணத்தை மீறி நடைபெறும் வசூல் வேட்டை?

இந்திய சினிமாவின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பத்து கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமல்ல, இதையே காரணம் காட்டி யாரும் யாரிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்திலும்தான். ஆனால் அவர் நினைத்தது நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. மதுரை, கோவை, திருச்சியில் உள்ள தியேட்டர்களை குறி வைத்து […]

எம்,ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டும் தமிழ் சினிமாவின் தூண்கள் இல்லையே… – எடிட்டர் B.லெனின்

இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட […]

ரஜினி, கமல், அஜீத் விஜய் ஆப்சென்ட்…! குய்யோ…முறையோ…கூச்சல்… குழப்பம்…. நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்தது என்ன? -வெளிவராத எக்ஸ்குளூசிவ் தகவல்கள்

கதர் சட்டைக்கும் கஞ்சிக்கும் இருக்கிற தொடர்புதான் சரத்குமாருக்கும் நடிகர் சங்கத்திற்கும்! அவர் செயலாளராக இருந்தபோதும் சரி, தலைவராக இருக்கிற போதும் சரி. அந்த ‘மொட மொட’ப்பை குறைய விட்டதேயில்லை. ராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டு நடிகர் சங்கத்தை வளைத்துவிட்டதை போலவும், வாலை நீ பிடி… தலையை நான் பிடிக்கிறேன் என்று அரவங்களை அகற்றி துயரங்களை துடைக்க முன் வந்தது போலவும் நடந்து கொண்டனர் சூர்யா, விஷால், கார்த்தி, ஜீவா உள்ளிட்ட இளம் நடிகர்கள். கனல் கண்ணன்கள், ஸ்டன்ட் […]

பத்திரிகையில் வந்த செய்தி… -நடிகை சமந்தா அப்செட்!

குடும்ப குத்துவிளக்குகள் என்று கொஞ்சம் பேரை மனதில் வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அவர்களை பற்றி விரும்ப தகாத செய்திகள் வந்தால், அவ்வளவுதான்… நேரடியாக சம்பந்தப்பட்ட நடிகை வீட்டுக்கே படையெடுக்கிற வழக்கமும் இருக்கிறது இந்த வெறியர்களுக்கு. அப்படி ஒரு கூட்டம் வீட்டுக்கே வந்து, ‘இப்படி பண்ணிட்டீங்களே, நாங்க உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சோம்’ என்று கதறினால் என்னாகும்? எல்லோரை போலவே சமந்தாவும் அப்செட்! ‘நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன்’ என்று கூறிய […]

புத்தியை பேதலிக்க விடும் பிரகாஷ்ராஜ்…. -இப்படி செய்தார்னா நம்ப முடியுதா?

பிரகாஷ்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதான் கொடுத்தாச்சே… வந்துருவாரு என்று நிம்மதியாக இருந்ததாக ஹிஸ்ட்ரியே இல்லை. கால்ஷீட் குழப்ப விஷயத்தில் ஹிஸ்ட்ரிக்கு பதிலாக ஹிஸ்டீரியா என்று மாற்றி படிக்கிற அளவுக்கு புத்தியை பேதலிக்க விடுவார் மனுஷன். அப்படிப்பட்ட பிரகாஷ்ராஜ் சேரனின் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம். அதுவும் எப்படி? போனிலேயே பிரகாஷை அழைத்த சேரன், ‘இப்படியொரு கேரக்டர் இருக்கு. நீதான் பண்ணணும் நண்பா’ என்று அழைக்க, விமான டிக்கெட், ரூம் ரென்ட், இத்யாதி இத்யாதி செலவுகளை […]

முதல்வரை சந்திக்கணும்… -இயக்குனர் பாலசந்தர் முயற்சி

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு இன்டஸ்ரியில் எப்போதும் மரியாதை உண்டு. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், கலைஞானி கமல்ஹாசனையும் அறிமுகப்படுத்தியவர் என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவருமே பாலசந்தர் அழைத்தால், படுவேகத்தில் ஓடி வருபவர்கள் என்பதாலும்தான். ‘இவர்களின் முரட்டு அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யப் போகிறேன்’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனசிலிருக்கும் ஸ்கிரீனை ஓப்பன் பண்ணி விடுவார் பாலசந்தரும். இவ்வளவு அன்பும் பாசமும் மரியாதையும் இவர் மீது மற்றவர்கள் வைத்திருந்தாலும், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்க […]

‘என்னை ஹீரோவாக்குங்கண்ணே….’ -பெரிய இயக்குனர்களிடம் ஜி.வி.பிரகாஷ் கெஞ்சல்

மோதிரக் கையால் குட்டுவாங்காத எந்த அறிமுக ஹீரோவும், கோடம்பாக்கத்தின் உச்சி வெயிலையும் அதனால் ஏற்படும் உஷ்ணத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதனால் அறிமுகமாகிற நிலையிலேயே, ‘நல்ல டைரக்டர் கிடைக்கணும். நல்ல கம்பெனி கிடைக்கணும்’ என்றெல்லாம் பிள்ளையாரையும் முருகனையும் பிராண்ட ஆரம்பிக்கிறார்கள் அவர்கள். சாதாரண ஆட்களுக்குதான் இப்படி. ஏற்கனவே ஆட்டோகிராப் போடுகிற அளவுக்கு மார்க்கெட்டில் வளர்ந்து வீங்கி கிடப்பவர்களும் கூட, பெரிய இயக்குனர் கையால் அறிமுகமாகணும் என்று ஆசைப்பட்டால் எப்படி? அப்படிதான் ஆசைப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ். பத்து கோடி சம்பளம் […]

பாட்டி செத்துட்டதா ஸ்டேட்டஸ் போட்டா கூட ‘லைக்’ கொடுக்கிறாங்க… -ஃபேஸ்புக் உலகத்தை கிண்டலடிக்கும் வைரமுத்து மகன்!

கவிப்பேரரசு வைரமுத்து குடும்பத்தில் அவரை தவிர மற்றவர்களும் பேச்சாளர்கள்தான். ஆனால் அவரை போல வீச்சாளர்கள் அல்ல. அவர் பேசினால் அதில் இருக்கிற கம்பீரம், அவரது புத்திரர்களுக்கு இருக்கிறதா என்றால்… ம்ஹும். சுட்டுப்போட்டாலும் அது வராது. ஆனால் மென்மையாக பேசுகிறார்கள் கபிலனும், மதன்கார்க்கியும். அதில் நிறைய விஷயமும் சுவாரஸ்யமும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பிளட் குரூப் அப்படி! அண்மையில் ஃபேஸ்புக் பற்றி மதன்கார்க்கி பேசியதை கேட்பவர்கள் ஒவ்வொரு லைக்குக்கு முன்பும், ஒவ்வொரு ஷேருக்கு முன்பும் […]

செல்வமணியின் நாய் பேச்சுக்கு முற்றுப்புள்ளி… அவர் சொன்னது பிரஸ்சை இல்லையாம்!

யானை சைஸ் பலுனை ஒரு சின்ன குண்டூசியால் கீறிய மாதிரி டொப்பென்று முடிந்துவிட்டது அத்தனை சர்ச்சையும். நேற்று முழுவதும், ‘ஆர்.கே.செல்வமணி இப்படி சொல்லிட்டாரே…’ என்று கண்களை ‘கோவப்’பழமாக்கிய நிருபர்களுக்கு இன்று கொய்யாப்பழ ஜுஸ் கொடுத்த மாதிரி ஒரு விளக்கத்தை கொடுத்து அவர்களை நிம்மதியாக அனுப்பி வைத்தார் செல்வமணி. ‘தமிழ்’ என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வமணி, பத்திரிகையாளர்கள் பற்றி பேசும்போது ‘ஒரு நாயும் இங்க வரல’ என்று குறிப்பிட்டதாக காற்று வாக்கில் ஒரு தகவல் […]