டூர் அடித்த அனிருத் ஆன்ட்ரியா…! -யாரு சொன்னது லவ் இல்லேன்னு?

முள்ளங்கியோடு முருங்கைக்காய் சம்பந்தம் வைத்துக் கொண்டது போல பொருந்தா காதலாகதான் இருக்கிறது அனிருத் ஆன்ட்ரியா காதல். வயசால் வேறுபட்டிருந்தாலும் மனசால் மையல் கொண்டிருக்கிறார்கள் இருவரும். நாங்க ஒண்ணா இல்ல. எல்லாம் மீடியாவோட கட்டுக்கதை என்றெல்லாம் இவர்கள் அளந்து கொண்டிருந்தாலும் நிஜம் வேறு என்கிறார்கள் இவர்கள் இருவரையும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வரும் சிலர். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஐஎம்எஸ் என்கிற மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றார்களாம் அனிருத்தும் ஆன்ட்ரியாவும். விமானத்தில் வந்திறங்கிய நேரத்திலிருந்து ஷாப்பிங், சைட் சீயிங் […]

ராஜேஷ் வீட்டு வாரிசும் நடிக்க வந்தாச்சு… -பத்மஸ்ரீ கமல்ஹாசன் வாழ்த்து

நாளு, கோளு, நட்சத்திரம், வாண சாஸ்திரம் என்று ஒன்றை கூட விட்டு வைப்பதில்லை நடிகர் ராஜேஷ். அடிப்படையில் ஜோதிடராகவும் விளங்கும் இவர் தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். கன்னிப்பருவத்திலே படத்தில் அறிமுகமான ராஜேஷ், தமிழ்சினிமாவின் நல்ல அப்பா, நல்ல வாத்தியார், நல்ல போலீஸ் என்றெல்லாம் நடித்து நல்லவர் இமேஜிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார் இப்போதும். முழுநேர தொழில் ரியல் எஸ்டேட் என்பதால், ஒரு நாணயமான நபர் என்கிற இமேஜ்தானே முக்கியம். அதை மிக சரியாக அவருக்கு […]

என்னது… அஜீத் ஸ்டவ்வை பற்ற வைக்கிறாரா? -விருந்துக்கு பதறும் தொழிலாளர்கள்!

அன்பே உன் பெயர்தான் அஜீத்தா என்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் வீரம் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு அவரது அன்பே வம்பாக வந்து சேர்ந்திருக்கிறது. ‘சாப்பிடாம கௌம்புனீங்க…? சட்னிதான்’ என்று சட்டையை பிடித்து அன்பு காட்டுவார்கள் சிலர். அஜீத் அந்த ரகத்தை சேர்ந்தவரில்லை என்றாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது தனது யூனிட்டை சேர்ந்தவருக்கு விருந்தளிக்கிற வழக்கம் கொண்டவர். இந்த விருந்தில் பட்டை லவங்கத்துடன் அவரது அன்பும் அதிக ருசியாக இணைந்திருக்கும். மட்டனோ, சிக்கனோ மாதத்திற்கு ஒரு முறை ‘மே மே…வும், கொக்கரக்கோ’வும் […]

ராமராஜனும் சேரனும் ஒண்ணுதான்? -மிஷ்கினின் நையாண்டியும் நக்கலும்…

டைரக்டர் சேரனை ஒரு காலத்தில் பொக்கிஷம் என்று கொண்டாடிய ரசிகர்கள் அவரது ‘பொக்கிஷம்’ படத்தை மட்டும் கஷாயம் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணியதால், சேரன் கொஞ்ச காலம் ரெஸ்ட், அல்லது பாலிஷுக்கு போயிருந்தார். மீண்டும் புத்துணர்வோடு திரும்பி வந்தது அவர் இயக்கியிருக்கும் படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இதில் சர்வானந்த் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நம்பினால் நம்புங்கள்… சேரன் ஒரு காட்சியில் கூட தோன்றவில்லையாம். தமிழ்சினிமாவின் அத்தனை முக்கியஸ்தர்களும் நிறைந்திருந்த மேடை அது. ‘ஓவர் […]

1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன

சென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த 11ம் தேதி முதல் கடலில் கரைத்து வருகின்றனர். சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 14, 15, 16 மற்றும் 18ம் ஆகிய தேதிகளில் கடலில் கரைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரை, […]

மூடர் கூடம் – சினிமா விமர்சனம்

தமிழ்சினிமா என்கிற கலைக்கூடம், மூடர் கூடமாகி விட்டதே என்கிற முணுமுணுப்பு சப்தம் சற்று பலமாகவே கேட்க துவங்கியிருக்கிற காலகட்டம் இது. இந்த மூடர் கூடத்தை கலைக்கூடமாக்குகிறேன் பார்… என்று சவால் விட்டு கிளம்பியிருக்கிறாரோ என்று பிரமிக்க வைக்கிறார் இப்பட இயக்குனர் நவீன். நல்ல சினிமா, கெட்ட சினிமா என்று மட்டுமே சொல்லத் தெரிந்த ரசிகனை, மாற்று சினிமா, நவீன சினிமா, பொழுதுபோக்கு சினிமா, பிளாக் சினிமா, யூ ட்யூப் சினிமா என்றெல்லாம் பேச வைத்துவிட்டது சுற்றுசூழல். எது […]

டைரக்டர் ஷங்கரின் கதையை ‘கெடுக்க’ பார்க்கிறார் அர்ஜுன்?

புரட்டிப்போடாத தோசையைக் கூட ‘ஆப்பம்’ என்று கூறி அகமகிழ்வான் தமிழன். அப்படிப்பட்ட ஆப்பத்தையே ஏப்பம் விடுகிற அளவுக்கு அவற்றை சிங்கிள் ஷாட்டில் முழுங்குகிற அசகாய சூரர்கள் பெருகிவிட்ட உலகமல்லவா? ரீமேக் என்ற பெயரிலும் பார்ட் 2 என்ற பெயரிலும் ஏராளமான தோசைகளை புரட்டி புரட்டிப் போட்டு நல்ல கதைகளையெல்லாம் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்கள். இதில் வேறொருவர் இயக்கிய படத்தை தானே முன் வந்து கருக வைக்கப் பார்க்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். எப்போதும் […]

அது ஊதாவா, புளூவா? -சிவகார்த்திகேயனை மிரள வைத்த ‘கலர்’ பிரச்சனை

‘ஊதா கலரு ரிப்பன், யாரு உன் அப்பன்’ என்ற பாடல் யுனிவர்சல் ஹிட்டாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. (கொஞ்சம் ஓவரா புகழ்ந்தாச்சோ, இருக்கட்டும்…) சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவை பார்த்து பாடும் இந்த பாடலில் காட்டப்படுவது ஊதா கலர் ரிப்பன்தானா என்கிற அதிமுக்கியமான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்கில். அது ஊதாவே இல்ல. ஃபுளு. இதை கூடவா கவனிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டால், பாட்டு எடுக்கும்போதே எனக்கும் அந்த டவுட் வந்துச்சு. ஆனால் புளூவைதான் நம்ம ஊர்ல ஊதான்னு சொல்லுவோம் […]

டாக்டருங்களும் ரோட்டுக்கு வரப்போறாங்களா? அடக்கடவுளே….

துபாயில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றின் ஃபிரிலான்ஸ் நிருபராக பணியாற்றி வந்த கஸாலி, இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கி வரும் படம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’. மருத்துவ உலகமே ஒரு மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது என்பதுதான் இவரது படத்தின் மெயின் லைன். நாமெல்லாம் பரிசோதனை எலிகள்தான் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லப் போகிறாராம். இதற்காக மருந்து கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் மாறுவேடம் போட்டு பணியாற்றியும் வந்திருக்கிறாராம். படம் வெளிவரும்போது மருத்துவர்கள் எல்லாரும் கூடி போராட்டம் நடத்தினா, நான் சேர்த்து வச்ச […]

அஜீத்தின் ‘வீரம்’ ஆளும் கட்சியிடம் எடுபடுமா?

தேருக்கு ஒரு நீதி, வண்டிக்கு ஒரு நீதின்னு ஆகுமா தெரியலையே என்று கவலைப்படவும் காத்திருக்கவும் வைத்திருக்கிறது ஒரு செய்தி. விஷயத்தை வெளியே சொன்னால் அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கப் போவது நம்மை விட அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும். ஏன்? பிரச்சனையே அஜீத் படத்தை பற்றிதானே! சிறுத்தை சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தை இப்போதே விலை கொடுத்து வாங்க போட்டா போட்டி. சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, கோவைன்னு பிரிச்சு விக்கிற வேலையை அப்புறம் வச்சுக்கலாம். முதலில் சேட்டிலைட் ரைட்சை மட்டும் […]

வடிவேலுவுக்கு வைண்ட் அப்! -சாட்டையை சுழற்றியதா சர்க்கார்?

‘அவரே மன்னிச்சுட்டேன்னு போயிட்டாரு, விட்ரா…’ என்று வடிவேலு அல்வா வாசுவிடம் கெஞ்சியதெல்லாம் அப்படியே நிஜத்திலும் நடப்பதுதான் டெரர்…. ஆனால் சீன்ல இருப்பது அல்வா வாசு இல்லை. அவரைவிட ஆபத்தான அரசியல் வாசுக்கள்தானாம்! ‘வடிவேலுவையே வைண்ட் அப் பண்ணுங்க’ என்கிறார்களாம் அவர்கள். வேறொன்றுமில்லை, இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டு வெகு கோலாகலமாக அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டது பிலிம்சேம்பர். மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இம்மாதம் 21 ந் தேதி துவங்குகிறது […]

மத்தாப்பூ விமர்சனம்

பத்த வைக்காத மத்தாப்பூவாக இருக்கிற வரைக்கும் காதலில் ஏதுடா கலர்ஃபுல்? இதைதான் இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் ‘தினந்தோறும்’ நாகராஜ். ‘உம்மம்மா’ உதட்டில் ‘உம்’மை மட்டுமே சுமக்கிற ஹீரோயின் காயத்திரி ஏன் அப்படியானார் என்கிற அதிர்ச்சியை பிளாஷ்பேக்காகவும், அவரை மறுபடியும் சிரிக்க வைக்க துடிக்கும் ஹீரோவின் ஆசையை பேலன்ஸ் பேக்காகவும் கொடுத்திருக்கிறார் டைரக்டர். நெடுங்கால விடுமுறைக்கு பின் கோடம்பாக்கத்தின் கதவை ‘டொக் டொக்’கியிருக்கும் டைரக்டர் நாகராஜுக்கு கதவு திறக்குமா…? ஒரு சின்ன பதற்றத்தோடு காத்திருக்கிறது சக […]

ஆர்.எஸ்.அந்தணன் tamilcinema.com- ல் இருந்து விலகல்!

நேற்று மாலையிலிருந்தே நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிவிட்டேன். காரணம் நான் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக மூளையை கழுவி கழுவி ஊற்றி வளர்த்த tamilcinema.com விலிருந்து விலகியதுதான். இத்தனை வருடங்களாக நான் காட்டிய ஒன் மேன் ஷோவை விழுந்து விழுந்து ரசித்த லட்சோப லட்சம் ரசிக பெருமக்களுக்கு என் அன்பான நன்றி. ஏன் அங்கிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் எது சொன்னாலும் அது […]

கொஞ்சம் கூட ஈரமேயில்லாமல் நடிகையை தொந்தரவு செஞ்சுட்டாங்க…

எங்கேயோ இடி இடிச்சுச்சாம். யாருக்கோ பட படத்துச்சாம். அப்படியாகிவிட்டது ஈரம் சிந்துவின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சிந்து தற்கொலை முயற்சி என்றொரு செய்தி வர, லண்டனில் இருந்த ஈரம் சிந்துவை கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் போனில் தொல்லை செய்தார்கள் மலையாள நிருபர்களும் அவரது ரசிகர்களும். குழந்தை, குடும்பம்னு நான் இங்க நிம்மதியா இருக்கேன். எனக்கு எதுக்காக சங்கு ஊதுனாங்க என்கிற மகா பெரிய டவுட்டோடு இன்டர்நெட்டை துருவிய சிந்து ‘அடக்கடவுளே’ ஆகிப்போனார். […]

விக்ரம் போற ரூட்டு சரியா?

முயல் ஆமை கதைதான் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘நம்மள ஒரு பய முந்த முடியாது’ என்று நம்பி அசால்ட்டாக வண்டி ஓட்டிய அத்தனை ஹீரோக்களுக்கும் இப்போது தசைநார் பிடிப்பு. அதற்கு காரணமாக இருப்பவர்கள் நேற்று பெய்த மழையில் இன்று குடை ரிப்பேர் கடையை திறந்தவர்கள்தான்! அவர்கள் யார் யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அது சிவகார்த்திகேய சேதுபதியாய விமாலதித்யன்கள்தான் என்பதை ரசிகர்களே சுலபமாக யூகித்துவிடலாம். இனிமேலும் அவர்களை வளர விட்டால், நாம் உளரு வாயர்களாகி ஓட்டாண்டியாக […]

21 ந் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் விஜய்க்கு இடம் உண்டா?

இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 21 ந் தேதி நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். சென்னையே விழாக் கோலம் பூண இருக்கும் இந்த நேரத்தில், அம்மா ‘டிக்’ அடிக்கிற நடிகர்களை மட்டுமே மேடையில் ஏற்றப் போகிறார்களாம். இந்த ஒரு விஷயத்துக்காகவே பல ஹீரோக்களின் மனசுக்குள் ஒரே டிக் டிக் டிக் அல்லது திக் திக் திக் சவுண்ட்! கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி […]

சதி பண்ணிட்டாங்க… தயாரிப்பாளர் தாணு கோபம்!

ஒண்ணு மண்ணா இருந்தாலும் தோற்ற பிறகு நட்பாவது, நலமாவது? நேற்று காலையில் தயாரிப்பாளர் தாணு பிரஸ்சை மீட் பண்ணிய போது இதுவரை அவரை இயக்கி வந்த எஸ்.ஏ.சி அங்கு வரவேயில்லை. அதற்கு முதல்நாள்தான் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தது. அதில் தாணு பெற்றது வெறும் இருநுற்றி சொச்சம் ஓட்டுகள். நியாயமாக வெற்றி பெற்றதே எங்கள் அணிதான். இந்த தேர்தலை நடத்திய நீதியரசர்கள்தான் தீர்ப்பை தவறா சொல்லிட்டாங்க என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது விளக்கம். ஒரு அறிக்கையை வாசித்தார் […]

‘அவங்க என் படத்தை பார்த்ததேயில்லை…’ -மனைவி ஜெஸ்லி பற்றி பரத் ஆச்சர்யம்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் க.மு- க.பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கல்யாணத்திற்கு முன் கட்டை சோம்பேறிகளாக இருந்த நடிகர்கள் கூட, அதற்கப்புறம் மார்க்கெட் பிக்கப்பாகி மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் சொன்னால் சில நடிகர்களின் அதிதீவிர ரசிகர்கள் ஈமெயிலில் எரிச்சலை பார்சல் கட்டி அனுப்புவார்கள் என்பதால் இத்துடன் நிற்க. பரத்தின் வாழ்க்கையும் அப்படி அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். துபாயை சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் ஜெஸ்லியை […]